வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

பைத்தியக்காரன் ஊர்ல............ மழை பெஞ்சுதாம்!

Thursday, February 28, 2013




இந்த வீடியோ பார்க்கும் முன்னால் சில கேள்விகள்!
1.யார் வீட்டிலேயாவது விருந்துக்கு போனபோது மூக்குசிந்தி நைசாக டைனிங்டேபிளில் தடவியது உண்டா?

2.எந்த ஓட்டலிலாவது உணவு வாங்கும்போது பார்சல் போடுபவன் கமுக்குட்டையோ அல்லது மூக்கை கொடைந்தோ அதே கையால் உணவை வாங்கிய அனுபவம் உண்டா?

3.என்ன இதை படிக்கும்போது கோபம் பொத்துக்கிட்டு வருதா?நம்ம மக்களிடையே இப்படி ஏதாவது ஒரு கெட்டப்பழக்கம் இருக்கத்தான் செய்யுது!இருந்தால் திருந்துங்க சாமியோ


அட பாவிகளா!இப்படியா குழப்புறது?




இப்படி நம்மள செஞ்சா நமக்கு எப்படி கோபம் வரும் மக்களே!தூக்கிபோட்டு மிதிக்க தோனுதா?

கூல் மச்சான் கூல்!

எல்லாம் ஒரு காமடிக்குதானே!விட்டுத்தள்ளுங்க

இன்றைய திருவிளையாடல்....

Friday, February 22, 2013


ஒரு சின்ன கற்பனைதான் என்றாலும் அதான் உண்மை...

திருவிளையாடல் சிவாஜியும் நாகேசும் இப்ப இருந்தால்
என்ன பேசிருப்பாங்க..

நாகேஷ்;ஏறிக்கொண்டே போவது?

சிவாஜி;வயதும் விலைவாசியும்

நாகேஷ்;குறைந்துக்கொண்டே போவது?
சிவாஜி;நிலத்தடி நீரும்,நடிகனின் வயதும்

நாகேஷ்;இடம் பெயர்ந்து கொண்டேயிருப்பது?
சிவாஜி;பறைவகளும்,தமிழர்களும்.

நாகேஷ்;சொன்னால் பிரச்சனை?

சிவாஜி;காதழும்,தமில் ஈழமும்

நாகேஷ்;கூடுவிட்டு கூடு பாய்வது

சிவாஜி;மந்திரவாதியும்,பா.மா.கா தலைவரும்

நாகேஷ்;நம்பமுடியாதது
சிவாஜி;நோக்கியா லாட்டரியும்,வை கோவும்

நாகேஷ்;சோசியலிஷத்திற்கு..?

சிவாஜி;குஷ்புவும்,சானியா மிர்ஷாவும்

நாகேஷ்;வசமாக மாட்டிக்கொண்டது?
சிவாஜி;(இல)வசமாக தமிழ்மக்களும்,சதாம் உஷேனும்

நாகேஷ்:காதல் பாட்டிற்கு?
சிவாஜி;கண்ணதாசன்

நாகேஷ்;காம பாட்டிற்கு?
சிவாஜி;வாலி

நாகேஷ்:இந்தியாவின் பகல் கனவு?
சிவாஜி;வல்லரசு

நாகேஷ்;ஒட்டாமலேயே இருப்பது?
சிவாஜி;அச்ச தீர்க்க ரேகைகளும்,பாரதிராஜா இளையராஜாவும்

நாகேஷ்;ஆனந்தத்தின் எதிர்ப்பதம்?
சிவாஜி;பிரேமானந்தாவும்,நித்தியானந்தாவும்

நாகேஷ்;சுருங்கிகொண்டே போவது
சிவாஜி;பலூனும்,பெண்களின் ஆடையும்


சில நூற்றாண்டு கழித்து உலகம் எப்படி இருக்கும்??



புத்தகம் சுமக்கும் குழந்தைகள்
ஆக்சிஜன் சேந்தே சுமக்கும்!


மதுபானம்
மளிகைகடையில் விற்கப்படும்!


மழைபெய்வது
மகா அதிசய நிகழ்ச்சியாகும்!



பெட்ரோல்
சாம்புபோல் சிறியபாக்கட்களில் கிடைக்கும்!

நாட்டாமை கிராமங்கள்
நரக நகரங்களாகும்!
dolphin-racing-photomanipulation

விவசாயமாவது பாயாசமாவது
வயல்வெளிகள் அனைத்தும்
வானுயர்ந்த மாளிகையாகும்!
happy-new-year-chuck
டாஸ்மார்க்போல் விபச்சாரம் செய்ய
அரசாங்காம்
அனுமதிக்கும்!

தமிழ்நடிக நடிகைகள்
நிர்வாண காட்சிகளுக்கு
நிர்பந்திக்கப்படுவார்கள்!


elephant-man-photomanipulation
"மதம்" பிடித்தது யானைக்கா?
மனிதனுக்கா என குழப்பம் உண்டாகும்
waterfall-photomanipulation
தண்ணீர் பிரச்சனையால்
கண்ணீர் வடிக்கும் துளிகளால்
பஞ்சம் தீரலாம்!

ஃபேஸ்புக்கில்
உல்லாசத்திற்கு முன்பதிவு கிடைக்கும்!

moto-splash-photomanipulation
நீதிதேவதை
நிரந்தர சுற்றுலாவிற்கு போவாள்!

safari-run-photomanipulation
ஆடைகள் சுருங்கி சுருங்கி
ஆதாம் ஏவாளாய் போவார்கள் மனிதர்கள்!

குரங்கிலிருந்து பிறந்தானா?குரங்கை மனிதன் பெற்றானா?

Thursday, February 21, 2013




குரங்கிலிருந்து மனிதான் வந்தான் என டார்வின் ஒருகாலத்திலும் ஆதாரத்தோடு சொல்லவில்லை..அது அவரின் ஊகம் மட்டுமே1

ஊகத்தை வைத்து நம்மால் சொல்ல முடியாத கதைகளா?அதுல இதுவும் விதிவிலக்கல்ல

எல்லா குரங்கு மூஞ்சியையும் பாருங்கய்யா

மனுஷன் முகத்தையும் பாருங்க..

ஏதும் வித்தியாசம் தெரியுதா?

ஒருத்தனைபோல ஒருத்தன் மனிதனில் இல்லை..குரங்கு ஒரே அச்சில் வார்த்த முகம்....எப்படி மனது வந்தது அப்படி சொல்ல ??

இது உங்களுக்கே அடுக்குமா?

இதை அருமை சகோதரர்பி .ஜைனுல் ஆப்தீன்   எப்படி விளக்குகிறார் பாருங்கள்;





பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன்தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம். கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் ் கொள்கையைச் சிலர் ஏற்றி போற்றுகிறார்களே தவிர, அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமே ஆகும்.சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை.

எந்த குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் இல்லை. குரங்குக்கும் மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம். அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது பைத்தியக்காரத் தனமாகவே இருக்கும்.

உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம்.ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம். மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர். குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை. பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துக்கு அதிக அளவு பொருந்தி போகிறது. அநேகமாக எதிர் காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும், அல்லது முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்த்த்துக்கு நெருக்கமாக உள்ளது என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை. மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்த்த்தில் இருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்தில் இருந்து வேறு பட்டுள்ளது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்த கண்டு பிடிப்பு அமைந்துள்ளது. இன்றைய காலத்தில் தகப்பன் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ சோதனை மூலம் 'இவன்தான் தந்தை ' என்று முடிவு செய்கிறோம். வடிவத்தை கணக்கில் கொள்வதில்லை.

அதே போல் மனிதனுக்கு மாற்று இருதயத்தை வேறு உயிரினங்களிலிருந்து பெற முடியுமா? என்று ஆராய்ச்சி செய்த போது ஆச்சரியமாக பன்றியின் இதயம் பொருந்தி போவதை தற்போது கண்டு பிடித்திருக்கிறார்கள். இதிலும் மனிதனின் இதயம் குரங்கோடு ஒத்துப் போகவில்லை.

இன்றைய மனிதன் மரபணுச் சோதனையில் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டு பிடித்து விட்டான். குரங்கின் மரபனுக்களையும் மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப் பட்டிருந்தாலோ வேறு எந்தப் பிராணியின் மரபணுவும்மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப் பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை. இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டு பிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்ரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள்தான் என்பதைக் கண்டு பிடித்து விட்டனர்.

இதே போல் யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது?

கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது?

ஒட்டக சிவிங்கியின் கழுத்து ஏன் நீண்டது?

போன்றவற்றிர்க்கு எல்லாம் டார்வின் என்ன பதில் வைத்துள்ளார்?

கடவுளை மறுப்பதற்காக எத்தகைய உளறலையும் தூக்கிப் பிடிப்பது தான் அறிவுடமையா?பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்? தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்: அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை? இதற்கு டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை. மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கிறது.

மனிதனின் இரத்தம் இதயம்' சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகள ும் மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும் எந்த இனத்தில் இருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வினின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.

நடிகர் நடிகைகளின் குழந்தை பருவம்..வாவ்

Friday, February 15, 2013

Sneha in childhood


கீழே உள்ள படங்களில் சிலரை என்னால் நம்பவே முடியல...என்னதான் இருந்தாலும் பிரபலங்களை இப்படி பார்க்கையில் கொஞ்சம் திருப்தியா இருக்கும்??இல்லையா?
(இதுக்கு நம்ம கூட குழந்தைல அழகா இருந்தோமேனு நினைக்கிறீங்களா?)





இது வேற யாரும் இல்லை...ஏனெனுக்கு மயக்கம் சிரிப்பழகி ஸ்னேகாதான்
Sneha in childhood


Sneha in childhood






இது வேற யாரும் இல்லை...அய்யையோ அயைய்யோ புடிச்சிருக்கு நம்ம ஊரு திரிஷாதான் பா
















kareena kapoor



amithab abisheik batchan




kirthik roshan


rani mukarji



sharuk khan


vivek obarai with his father





sridevi




shilpa shetty



raveena thandaan

Click here to enlarge

cheifminister jayalalitha medam


என்ன பார்த்துட்டு தலை சுத்துதா?

காதலால் கசிந்து...




காதல் என்னை பிழிந்தபோது
வழிந்தவை இந்த
வரிகள் அனைத்தும்...

நிலாவை
உன் கன்னத்தின் பொட்டாக
நட்சத்திரங்களை
உன் தலையிலிருந்து உதிர்ந்த மல்லிகையாக்க
காதல் எனை தூண்டுகிறது..

உன் முகத்திற்கு பசைதடவி
என் நினைவுகளில் ஒட்டியது யார்?

மாலைவரை நீளும் நிழலைப்போல
உன் நினைவை நீட்டிப்பது எது??

உதடுகள் வழியாக இதயத்துக்குள்
கைவிட்டு
பிசைந்ததுபோல்
பிரசவ வலி!

நீ தள்ளியிருக்கும் போது
தண்டவாளம்!

தோளில் சாய்ந்தால்
பைசா நகரத்து கோபுரம்!

உருகுகிறதே!
பனிக்கட்டியே நீயும்
காதல் செய்கிறாயோ?

காதல் வரைபடத்தில்
இந்தியாவைபோல் நீ
இருக்க எனை மட்டும்
இலங்கையைபோல் தொங்கவிட்டதேனடி?

வேண்டாம் வேண்டாம்..

நீ தள்ளியே இரு!

நெருங்கும்போது
காமமும்
காந்தமும் ஒன்றே!

தூரமாய் இருந்துகொண்டே
தலைவருடும் மரம்போல் எனை
இமைகாற்றால் வருடு!

என்னைச்சுற்றி இருளும்போது
கொஞ்சம் சிரித்துவிட்டு போ!

அதிலேயே
ஆயிரம் வருடம் வாழ்ந்து இறந்து போவேன்!

படித்து உறைந்துபோன கவிதை..


சமீபத்தில் நான் படித்து உறைந்துபோன கவிதை..



எனக்கு பசித்த போது...
சமைத்து போட வேண்டும்...!
குளிப்பதற்கு சுடுநீர்...
வைத்து கொடுக்க வேண்டும்...!
அழுக்கான உடையை...
துவைத்துப்போட வேண்டும்...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

என் ஆண்மைக்கு வாரிசாக...
பிள்ளை பெற்றுப் போட வேண்டும்...!
நான் அடித்தால் அடிவாங்கிக் கொண்டு...
அடங்கிப் போக வேண்டும்...!
என் பெற்றோருக்கும்...
ஏவல் செய்ய வேண்டும்...!
எங்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும்...
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

என் குறி விரைத்துக் கொண்டால்...
உன்னிடமும் வரும்...
தேவைப்பட்டால் மற்றவரிடமும் செல்லும்...
என் குறிக்கு கற்பு கிடையாது...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

மொத்தத்தில்...

எனக்கென்ற தனித்துவம் இருக்கின்றது...!
வலிமை இருக்கிறது...!
அடக்கி ஆளும் தலைமை இருக்கின்றது..!
எனக்குள் எல்லாம் இருக்கிறது...!
உன்னைவிட நானே உயர்ந்தவன்...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

இந்த கவிதை படித்தபோது பயங்கரகோபம் எனக்கு..பதிலுக்கு நாமும் எழுதவேண்டும் என கைகள் துடித்தது..ஆழ்ந்து சிந்தித்தபோது ஒரு வகையில் சரிதான் என தோன்றியது....

ஆண்கள் என்றாலே ஆதிக்கம் கொண்டவன் என்பதே சில ஆண்களின் கருத்து..

அதற்கு இந்த கவிதை ஒரு சூடு

அவர்களையும் மதிக்கவேண்டும்...பெண் என்பவளை ஒரு போதையாக அல்லாமல் பேதையாகவும் பார்க்க வேண்டும்...

ஆனால் இந்த கவிதை எழுதியவரிடம் ஒன்று கேட்க ஆசை படுகிறேன்..

எல்லாம் சரிதான்..ஆண்களை ஆதிக்கம் செய்யும் பெண்களும் அதிகம் உண்டே?
அதற்கு இந்த கவிதையில் விடை இல்லையே?

எது செய்தாலும் தன்னிடம் கேட்டுவிட்டுதான் செய்ய வேண்டும்..பெற்றோருக்கு உதவி செய்தலிலும் சரி...மற்றவருக்கு உதவி செய்தலிலும் சரி...இப்படி நினைக்கும்  நடக்கும் பெண்கள் அதிகம் உண்டே  நாட்டில்!

பெண்களுக்குமட்டும் ஏன் இத்தனை கட்டுப்ப்பாடு?


சிந்துபாத் கதைமாதுரி இப்ப எல்லாம் கற்பழிப்பும் தொடர்கதையா போச்சு...

சினிமாக்களில்கூட சிலசமயம் அதுதான் ஹைலைட்..

எ.கா..பிரியங்கா திரைப்படம்



அந்தசமயங்களில் பலவித சர்ச்சையான பேச்சுக்கள்,விவாதங்கள்,பட்டிமன்றங்கள்....தேள்கொட்டின இடத்தில் ஆசிட்விட்டமாதுரி...

என்னுடைய பெண் நண்பர்கள் "பெண்களுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடு?எங்களுக்கு ஆடையில்கூட உரிமை இல்லையா?"என நான் அவர்களிடம் ஆடைபற்றி பேசும்போது வருத்தத்துடன் குறிப்பிட்டார்கள்...

மாட்டுவண்டி மாறி விமானம் வந்தது நேரத்தின் நாகரீகம்!புறா போய் செல்போன் வந்தது அஞ்சல்தலையின் நாகரீகம்!

சுருங்கி போவதுதான் நாகரீகம் எனில்..
 ஆடை சுருங்கிபோவது எந்த நாகரீகம்?
sexy dresses girls 2 Those dresses never looked happier (43 Photos)


எப்போது காற்று அடிக்குமோ என பயப்படும்படியான குட்டைபாவடை..இரண்டுபக்கமும் பார்த்துக்கொள்ளலாம் எனும்படியான வெங்காயத்தோல் ஆடை...

என்ன இதெல்லாம்???

ஆடை விசயத்தில் சில ஆண்களும் அப்படித்தான்..பாதி பட்டக்ஸ் தெரியுற அரை ட்ரவுஸர்ஸ்...சோப்புநுரையில் செஞ்சதுபோல் வேஸ்டி சட்டைகள்??ஏன்?ஏன் இந்த கொலைவெறி??

ஆனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் உண்டு...

உள்ளாடையோடு எங்கேவேண்டுமானாலும் நிற்கலாம் என்பதுபோன்ற உடலமைப்பு ஆண்களுக்கு

தொப்புள்கூட தெரியுதா என கவலைபட்டு மறைக்ககூடிய உடலமைப்பு பெண்களுக்கு...

sexy dresses girls 4 Those dresses never looked happier (43 Photos)
கண்ணாடி, ஜரிகை,ஜன்னல் ஆடைகள்  கற்பழிப்புக்கான பத்திரிக்கையில்லா அழைப்பு!

ஒருவீடு இருக்கு.முக்கியமான பொருள் இருக்கு...எங்களுக்கு சுதந்திரம் இல்லையாவென யாரும் பூட்டாமல் வெளியே போக முடியுமா?அது திருடனுக்கான அழைப்பு இல்லையா?

பெண்களின் கற்பு அப்படித்தான்...

பெண்ணின் கற்பு கண்ணாடி பெட்டகம்...

அது உடைந்து விடுமோ என்கிற பயத்தில்தான் அதன்மீது இத்தனை கட்டுப்பாடுகள்!

அதனைச்சுற்றி  பொதியப்பட்ட பாதுகாப்பை அது சுமையாக நினைத்தால் நஸ்டம் பெட்டகத்திற்கே!

கண்ணாடி பெட்டகம் பெற்றோரிடமிருந்து கைமாறி கணவனிடம் வருகிறது...எங்கே பெட்டகம்போனாலும் அது உடையக்கூடிய பொருள் என்பதால் அதன்மீதான பாதுகாப்பு சுமை அகன்றதா இல்லை!

இதில் சுதந்திரம் எனும் பேச்சுக்கே இடம் இல்லை...

சுதந்திரம் இல்லையென் யார் சொன்னது?

கல்வியை எடுத்துக்கொண்டால் அதில் பெண்களுக்கே முதலிடம்...

விவசாயத்திலிருந்து விண்வெளி வரை கால் வைக்காத இடமே இல்லை...

பெண்களை அடுப்புபூதங்கள் என்று கூறியவனை தோண்டி எடுத்து தூக்கில் போட்டாச்சு..

சுதந்திரம் இல்லாமலா வெற்றியின் சுவர் ஏற முடிந்தது பெண்களால்?

ஆக சுதந்திரம் என்பது ஆடையில் இல்லை...

சரிதானே?

காதல்(நோய்க்கு) தோல்விக்கு என்ன தீர்வு??..

Friday, February 08, 2013





"வாறான் வாறான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே"

என்ன உங்களுக்கு புறியலையா?வருகின்ற 14 காதலர் தினம்...

காதலை பற்றி பெருமைபாட நினைக்கும் இளசுகளின் வரிசையில் நானோ கடைசியில் நிற்கிறேன்...

சோ அதனால் ஏற்படும் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதுபற்றி  ஒரு அலசல்

இதன் அறிகுறிகள் :

1.நூறு தடவை தலை சீவுவான்...(நல்லா வாட்ச்பண்ணுங்க)..கண்ணாடி பார்க்கும்போது தனுக்குத்தானே ஈ....னு சிரிப்பான்


2.டைட்டானிக் கப்பலுக்கு ஓனர் போல ஏதையோ தொலைத்தமாதுரி எப்புவும் எங்கையோ பார்த்துட்டு இருப்பான்..

3.ஒழுங்கா சாப்பிட மாட்டான்  சோத்துல. புரோட்டாபோட மாவு பிசைவான்

இன்னும் சொன்னா...லோக்கல் ரோமியோ ஜூலியட் என்னை அடிக்க வருவாங்க

விட்டு விடுவோம்...

காதல் தோல்விக்கு என்னதான் தீர்வு?

எதையும் உள்ளதை உள்ள மாதுரி பார்த்தோம் என்றால் பிரச்சனை இல்லை..

உதாரணத்திற்கு...

சகோதரர் பீஜே சொன்னதுபோல் நிலாவை எடுத்துக்குவோம்.

கண் சொல்கிறது நிலா சப்பாத்தி சைசுக்குதான் இருக்கு என்று...

காது சில மூடத்தனமான செய்திகளை இஸ்டத்திற்கு சொல்கிறது..எ.கா;நிலாவில் பாட்டி வடை சுடுகிறாள்..

ஆனால் மூளையை பாருங்க...

டாய் அப்படி இல்ல...

நீ பூமியிலேருந்து பாக்குற அதான் நிலா சிறியதாக இருக்கிறது....அது பூமியைவிட பெருசு...என உண்மையை கண்டறிய உள்ளதை உள்ளபடி பார்க்கிறது..

என்ன விளங்கிடுச்சா?

சரி காதல் விசயத்திற்கு வருவோம்..

ஒரு மார்க்கட் இருக்கு...ஒரு பொருளைதேடி போகிறோம்..எங்கே தேடியும் அந்த பொருள் கிடைக்கவில்லை..."ஆ..அய்யோ அந்த பொருள் கிடைக்கலையே?நான் என்ன செய்வேன்?இப்படி யாராவது சொல்வாங்களா ?

நீங்களே சொல்லுங்கள்.....

காதலிலும் அப்படித்தான்...அவள்தான் எனக்கு ராணி என்பான்...அவ இல்லாட்டி நான் செத்துவிடுவேன் என பஞ்ச் விடுவான்..கடைசில என்ன ஆகும்?

இரண்டு வருசத்துல எல்லாம் போயிறும்...

சண்டைபோடும்போது சொல்வான்..ஏன்டி ஏன் பாவத்துல வந்து விழுந்தாய் என....

நல்ல மனிதன் என்ன செய்வான்?

அவள் கிடைக்கலையா?பரவாயில்லை...வேற பெண் உலகத்தில் இல்லையா?

அப்படிதானே நினைக்க வேண்டும்!

வைரமுத்துகூட பாருங்க

"முதல் காதல் முற்றிலும் தோல்வியா?
பரவாயில்லை
இன்னொரு காதல் இல்லையா"என்கிறார்

இதுக்குமேல நான் என்ன சொல்லட்டும்?

கோபம் வந்தால் எவ்வாறு அடக்குவது?





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...

எல்லாம்வல்ல அல்லாவின் திருநாமத்தால் இதை ஆரம்பம் செய்கிறேன்...

சிலபேர் பெருமையா பேசுறதை கேட்டுருக்கிங்களா?
"அவன தயவுசெய்து போக சொல்லு..கோபம் வந்தா எனக்கு கண்மூக்கு தெரியாது..அப்புறம் நான் என்ன செய்வேன் என்றே சொல்லமுடியாது"

எல்லாம் முடிஞ்சி "நானா அப்படி சொன்னேன்?நானா அப்படி செஞ்சேனு ஒரு பஞ்ச் டயலாக்...

இன்னொருவகையில் பார்த்தால் அது அவர்களாக பேசியதோ செய்ததோ இல்லை..விலக்கப்பட்ட சய்த்தானின் தூண்டுதலால் வந்த வினையே ஆகும்

"ஒரு போர்களத்தில் நூறுபேரை கொள்பவன் வீரன் இல்லை...கோபத்தை அடக்கியவனே வீரன்" என பெருமானார்(ஸல்) கூறினார்கள்..

"கோபம் வரும்போது நீங்கள் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுங்கள் எனவும் இன்னொரு ஹதீஸில் உட்கார வேண்டும்..அப்போதும் அடங்கவில்லையென்றால் படுத்துக்கொள்ளவேண்டும்..அதிலும் பயன் இல்லை என்றால் நீங்கள் ஒலுச்செய்து கொள்ளுங்கள்" என பெருமானர் கூறினார்கள்..

என்னப்பா பெரிய வேடிக்கையா இருக்கு?கோபம் வரும்போது எவனாவது இப்படி செய்வானா என சிலர் மனதுக்குள் பேசுவது எனக்கு கேட்கிறது

இதில் சத்தியமாக ஒரு தீர்வு இருக்கிறது...

அல்ஹம்துலில்லாஹ்...

இரண்டுபேர் சண்டைபோடும் போது ...ஒருவரை நின்று கொண்டிருக்கும் நிலையில்"ஏய் பேசாம இருங்கப்பா...சண்டை போடாதிங்கன்னு" சொல்லி பாருங்க

விடுங்கண்ணே அவன ரெண்டுல ஒன்று பார்க்கிறேன் என்பார்...


இதே கொஞ்சம் அமர வைத்து பாருங்கள்....கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாரு

அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டால் பிரச்சனையே இல்லை..

அதெல்லாம் சரி ஒலுச்செய்ய சொன்ன காரணம் என்னவாக இருக்கும்??

கோபம் சய்த்தானிடமிருந்து வருவது...அவன் நெருப்பினால்  படைக்கப்பட்டவன்...

நெருப்பை அணைக்க நீரினால் முடியும்...

நாம் தண்ணீரிதான் ஒலுச்செய்கிறோம்....

சாதாரண அவர்கள் சொன்ன ஒரு சின்ன விசயத்தில்கூட எவ்வளவு பெரிய உண்மை அடங்கியிருக்கிறது!

இந்த பதிவின்மேல் களங்கம் ஏற்படுத்த..நீங்கள் கோபபடும் சூழ்நிலையில் கோபம் குறந்தாலும் பதிவை பொய்பிக்க நீங்கள் கோபம் குறையாதவராக நடித்தாலோ அதன்பின் கேள்வி கேட்டாலோ நான் பொறுப்பல்ல....

அல்லாவிற்கே எல்லாப் புகழும்..

உலகத்துக்கே ஒரு சவால்!


 திருக்குர்ஆனின் அறைகூவல்!



அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாவின் திருநாமத்தால் இதை ஆரம்பம் செய்கின்றேன்....




மனிதர்களின் சவாலுக்கும் கடவுளின் சவாலுக்கும் வித்தியாசம் உண்டு...

நான் மிஞ்சிபோனால் என் ப்ளாக்கில் ஒரேநாளில் 10000 பேரை  கொண்டு வருவேன் என்பது என் சவாலாக இருக்கும்...

நான் ஒரே நாளில் ஹோட்டலில் 5000 ருபாய்க்கு சாப்பிட முடியும் என்பது சாப்பாட்டு ராமனின் சவாலாக இருக்கும்

ஆனால் அல்லாவின் சவாலை பாருங்கள்....




எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது.

முஹம்மது நபி அவர்களின் காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மொழியில் மிகவும் விற்பன்னர்களாகவும், உயர்ந்த இலக்கியத் தரத்தில் கவிதைகளை இயற்றுவோராகவும் இருந்தனர்


எழுதப் படிக்கத் தெரியாதவர் எதை இறை வேதம் எனக் கொண்டு வந்தாரோ அது அவர்களது இலக்கியத்தை மிஞ்சும் வகையில் அமைந்திருந்தது. பொய் கலப்பில்லாத ஒரே இலக்கியமாகவும் அமைந்திருந்தது.


எனவே "இவ்வளவு உயர்ந்த இலக்கியத்தை எழுத்தறிவு இல்லாத முஹம்மது தான் கற்பனை செய்து விட்டார் என்று நீங்கள் கருதினால் பண்டிதர்களான நீங்கள் இது போல் தயாரித்துக் காட்டுங்கள்!'' என்று அறைகூவல் விடப்பட்டது.
முழு மனித குலத்துக்குமான இந்த அறைகூவல் இன்றளவும் எவராலும் எதிர் கொள்ளப்படவில்லை.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:23, 10:38, 11:13, 17:88, 28:49, 52:34)




இதை நம்ம பாஷையில் சொல்வதென்றால்...

"எமது தூதரையும் இந்த வேதத்தையும் நீங்கள் நம்பவில்லையா?
உங்கள் அத்தனை பேருக்கும் சவால்விடுகிறேன்.

உன்னால் முடிந்தால் இதுபோன்ற ஒரே ஒரு அத்தியாயத்தையாவது இதுபோன்ற நடையில் இயற்றிப்பார்!

உனக்குதுணையாக ஜின்களையும்,சில மனிதர்களையும்..இன்னும் நீ யாரைவேண்டுமானாலும் துணைக்கு அழைத்துக்கொள்!இதுபோன்ற அத்தியாயம் உங்களால் இயற்றவே முடியாது!"




கடவுள் இல்லையென சொல்லும் அறிவு ஜீவிகளும்...குரான் இறைவேதம் இல்லையென சொல்லும் மனிதமேதாவிகளும் இதை முயற்சி செய்து பாருங்கள்.

காமவரி கவிஞர்கள் திருந்தமாட்டிங்களா?

Friday, February 01, 2013




எல்லா தமிழ் பாடலிலும் ஆபாசம் இருக்கிறது என்று சொல்லமுடியாது....

பழைய பாடல்களும் ஆபாசம் இருந்தது இலைமறை காயாய்..

இங்கே அதெல்லாம் இல்லை டைரக்ட்தான்

வைரமுத்து ரா ரா ராமையா பாடல் வெளி வந்தபோது

பாருங்கப்பா..வாழ்க்கைய எட்டுக்குள்ள சுருக்கிட்டார்னு வக்காலத்து வாங்கினேன்

வாலியின் பழைய பாடலை கேட்டவர்கள் அவரை குறை கூறினால் அடிக்க வந்துவிடுவார்கள்

ஆனால் என்ன ஆனது இப்போது?



 சில பாடலை கேட்டுவிட்டு இவரா இப்படி எழுதியது என வருத்துப்பட்டது உண்டு....

வைரமுத்துவின் வைர வரிகளை ரசிப்பவந்தான்...இருந்தாலும்...

அவர் எழுதிய சிலவரிகள் முகம் சுளிக்கவைத்தது....

ரோஜா படத்தில் "புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது"பாடலில்
"இங்கு சொல்லாத இடம்கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது"என்றார்..

அதோடு விட்டாரா?குஷி படத்தில் ஆபாசத்தின் உச்சகட்டமாய்
கட்டிபுடிடா பாடலில்
"எவ்விடத்தில் கண்முழித்தோம் அவ்விடத்தில்
மெல்ல தட்டு தட்டு"என்று இச்சை கூட்டினார்

கவிஞர் வாலியை சொல்வதென்றால் அவர் ஆபாசத்தின் உச்சக்கட்டம்..

நாமெல்லாம் பெண்களை பார்த்து எப்படி இருக்கிங்கனு கேட்க கூச்சப்படுவோம்

தலைவரு
"எப்படி எப்படி சமஞ்சது எப்படினு நேரிடையாகவே மாராப்புக்குள் என்ன இருக்குனு ஒரு வீணாபோனவன் கேட்டமாதுரி கேட்டார்..

அதுமட்டுமா?அதேபாடலில்
"காஞ்சமாடு காம்புலதான் பாஞ்சதுபோல் தெம்புலதான் நீயும் மேய பாக்குற"

எப்படி ஒரு உதாரணம் பாத்தியலா?

அதே படுத்துல ஏ குட்டி பாடலில்...சே சே சொல்லவே கூசுகிறது...

"உரலு ஒன்னு அங்கிருக்க உலக்க ஒன்னு இங்கிருக்க நெல்லு குத்த நேரம் எப்போ சொல்லேன்டி என் சித்திரமே"

இதனால் தமிழ் திரையுலகிற்கு நான் சவால்விடும் செய்தியாவது..


இதேமாதுரி காமத்தின் உச்சகட்டமாய் யாரும் பாட்டு எழுத முடியாது

ஏன்..... இப்படி கவிஞர்களே?

ஆபாசம் இல்லாமல் திரைப்படம்தான் சாத்தியம் இல்லை இப்போது?பாடல்களுமா?

வைரமுத்து சார்!

நீங்கள் எழுதிய"விடிகாலை விண்ணழகு
விடியும் வரை பெண்ணழகு"என்ற வரிகளால் ஏற்ப்பட்ட பிரச்சனைக்கும் கேள்விக்கும் இன்று வரை தீர்வு இல்லை விடை இல்லை..


வாலி சார்!

இதைவிட எப்படி ஆபாசமாய் எழுதுவது என யோசனையா?



டி ராஜேந்தரின் மகிமை உங்களுக்குத்தெரியுமா?





எப்படி இளையராஜா என்ற ஞானியின் இசை சிம்மாசனத்தின் இருக்கையில் யாரும் இனி அவர் உட்பட அவர்போன்ற கலைஞர்கள் உட்கார முடியாதோ..

அதுபோலவே சில கலைஞர்கள் உண்டு..

அதில் மறக்கமுடியாதவர் டி.ராஜேந்தர்


டி. ராஜேந்தர் அவர்கள் ஒரு பன்முக கலைஞன் இவரது நடிப்பாகட்டும், தமிழாகட்டும் ரசிக்க கூடியவையே!
மேலும் அவர் ஒரு பல குரல் மன்னன், பல திரைப்படங்களை அவரே தயாரித்தும், இயக்கியும் உள்ளார். மேலும் இவர் ஒரு மிகச்சிறந்த பாடலாசிரியர் மட்டுமல்லாமல் சிறந்த இசையமைப்பாளரும் ஆவார்.


மைக் கேமிரா கெடச்சா போதும்...பாவம் மேஜைக்குத்தான் வலிக்கும்..டக்கு டக்குனு வாயினால் ம்யூசிக் போட்டு..டனக்குடக்கா ஏ.ஏ..டண்டனக்கா ஆரம்பித்துவிடுவதுதான் இவர்கிட்ட பிடிக்காத ஒரு விசயம்...

இப்ப இருக்கிற டைரக்டருங்க எப்படியாச்சும் சைடு கேப்புல ஒரு ரேப் சீன் ஒரு கிளுகிளுப்பு பாடல் சேர்த்துடுவாங்க

நம்ம அண்ணன் கை அதுல பரிசுத்தமானது..அதையும் தாண்டி புனிதமானது!புனிதமானது!

தங்கச்சி பாசத்திற்கு மொத்த குத்தகைக்காரர் நம்ம அண்ணந்தான்..

அந்த காலத்தில் இருந்து இந்த காலம்வரைக்கும் காதல மையமா வச்சு எடுத்த படந்தான் அதிகம்..

அண்ணன் மட்டுந்தான் தங்கச்சிமார்களை வச்சு படம் எடுத்து அவர்கள் பெருமையை உசத்தியாக்கியவர்



இன்னொரு முக்கியமான விசயம்..

இப்ப இருக்குற ஹீரோக்கள் ஒரு முத்தம் கொடுக்குற சீன்,கட்டிப்புடிக்குற சீன் வந்தா அவங மனுசுக்குள் மத்தாப்புதான்

அந்த விசயத்துல அண்ணனை நான் தலைல தூக்கி வச்சு ஆடுவேன்

இந்த விசயத்தில் இவரை எந்த ஹீரோவும் ஏணி (துபாயில் இருக்குற உயரமான பில்டிங் அளவுக்கு) வச்சாக்கூட எட்ட முடியாதுங்கோ

எந்த ஹீரோயினையும்  ஒருபொட்டுக்கூட தொடமாட்டார்..

அதைவிட ஒரு சிறப்பு என்னவென்றால்.....
இவர் எடுத்த சினிமாக்களில் அதிகபட்சம் ஒன்பது எழுத்துக்களிதான் இருக்கும் என்பது சிறப்பு

திருக்குறளில் எந்த அடியிலாவது சீர்கெட்டு போயிருக்கானு வைரமுத்து முயற்சி செய்து தோற்றமாதுரி நானும் இவர் படுத்துல ஏதாவது ஒரு படம் எட்டு அல்லது ஏழு எழுத்தில் இருக்கானு பார்த்து மண்ணை கவ்வியுருக்கேன்

நீங்களுந்தான் பாருங்களேன்!


இவர் 80களில் அடுக்குமொழிகளில் சிறந்த கவிதைகளை எழுதி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவர்.
இத்தகைய சிறப்புக்களை பெற்றவரை ஏனோ தெரிய வில்லை பத்திரிகைகள், ஊடகங்கள், இணையதளங்கள் போன்றவை இவரை ஒரு கேலிப்பொருளாகவே பார்க்கின்றன• இந்நிலை மாற வேண்டும். இவரது தோற்றத்தை மட்டுமே பார்த்து சிரிக்க வே ண்டாம். இவருக்குள் இருக்கும் திறமைகளை கண்டு ரசியுங்கள் சிந்தியுங்கள்.