வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

உயிர்வதை சாத்தியமா?

Thursday, November 10, 2011

பொதுவாக நம்மிடையே நாம் உயிர்களை வதை செய்கிறோம்..கொடுமை படுத்துகிறோம் என்ற குற்றச்சாட்டு உண்டு..

சரிதான் வாஸ்தவமான குற்றச்சாட்டுதான்...இருக்கட்டும்..

ஆனால் சில கேள்விகளுக்கு எனக்கு விடை தேவை..
1.நாம் தினம் குடிக்கும் தண்ணீரில் கூட பல்லாயிரம் நுண்ணுயிர் கிருமிகள் செத்து மடிகின்றன..அவைகள் "குய்யோ முறையோ"என கதறுவது நம் காதுகளுக்கு கேட்க்காததால் அதை வதை என நாம் சொல்வதில்லை..
ஆக சின்ன உயிர் இறந்து போனால் அது வதை இல்லை..

ஒன்று தெரியுமா?
உடலின் எடை வெவ்வேறு ஆனாலும் உயிரின் எடை ஒன்றுதான்!

2.நாம் பசுக்களிடமிருந்து பால் கறப்பதில் கூட கன்றுகுட்டியைவைத்து பசுவை ஏமாற்றிதான் பால் கறக்கிறோம்..இதற்கு"எங்க ஊரு பாட்டுக்காரன் ராமராஜன்"என பெயரா?
இதையே தான் பெற்ற குழந்தைக்கு மற்றவர்கள் செய்தால் தாய் சும்மா இருப்பாளா?

3.வயல்களில் பாதுகப்பு எனும் பெயரில் நிறைய எலிகள் மற்றுமின்றி சபந்தமே இல்லாத மற்ற உயிரினங்களை கொல்கிறோம்..இதற்கு"விவசாயம்"என பெயரா?

இறைவன் நினைத்திருந்தால் மாமிசங்களைகூட மலைபோல் படைத்திருக்க முடியும்..அப்படி படைத்தால் கெட்டு போகாதா?அதனால்தான் சிறிய உயிரினங்களாக மனிதனுக்காக படைத்திருக்கிறான்..

எனவே எல்லாம் மனிதனுக்காக படைக்க பட்டவைகளே!

செடிகளுக்கு கூட உயிர் உண்டே தெரியுமா?

வேட்டை என்பது கவிஞரின் கூற்றுப்படி"எளியதின் மீது வலியதின் ஆதிக்கம்"
உயிரனங்கள் அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துபவன் மனிதன்..

வேட்டை சட்டபடி குற்றம் என குறை சொல்லாதீர்கள்..எந்த வேதமும்,இதிகாசமும் வேட்டையை குற்றம் என சொல்லவில்லை..

எல்லாம் ஜாதி கொடுமைகள் போல் மனிதர்கள் மனிதர்களுக்குள்ளேயே ஏற்படுத்திக்கொண்டவை...

சரி..இப்போது சொல்லுங்கள்..உயிர்வதை என்பது சாத்தியமா?சத்தியமா சொல்லுங்க...

இவை சாத்தியப்படுமா?


விசை அழுத்தியதும்
விண்ணிலிருந்து மழை....

குளியலறைக்குள்
குற்றால அருவிகளில் ஒன்று...

சேவலை எழுப்பும் மனிதர்களும்
சேரிகள் இல்லாத ஊர்களும்..

கிழிக்கப்பட்டதேதி
மறுபடியும் பிறக்கவும்...

சுவற்றிலிருந்து திரும்பும் பந்தின்
வேகத்தில் காதல் சொன்னதும் பதில்..

நிராகரிக்கப்படாத
நிலாவும் இதே வரிசையில் கவலையோடு
என் கவிதைகளும்...