வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

என் அருமை மகள்கள் சுமையா,சஃப்ரீன் ஃபாத்திமா...

Sunday, October 31, 2010



பெயரளவில்தான் நீ சுமையா
எங்களுக்கு என்றும்
இருந்ததில்லை சுமையாய்...

நீ காயப்படுத்துவதற்காகவே
காத்திருக்கிறது என் தேகம்
பூ தாக்கியா இரும்பு காயப்படும் என் மகளே!

ஒருவிதத்தில் நீ இருக்கிறாய்
எப்போதும் என் இமையாய்..


ஒருபிடி எழுத்துக்களால் ஊருக்கே
கவிதை வெளிச்சம் தருபவன் நான்.

உனக்கொன்று இல்லாமலா?
நீ ஒரு நதி
சில இலைகளையும் கிளைகளையும்
நதிகள் அடித்துச் செல்வதுண்டு
என்னை ஆணிவேரோடு
அடித்துப் போனது நீயே என் மகளே!

உனக்குத் தெரியுமா?
நான் உன் நினைவுகள்
எனும் முடி சுமக்கும்
கவரிமான்!
உன் முத்தத்தின் ஈரம்
எரிமலையையே நனைத்துவிடுமே
என் உள்ளத்தில் எரியும்
சோகம் எம்மாத்திரம்!

சிரி!
வாயில் நீர் ஒழுக சிரி
அலைகளின் சிரிப்புதான் நுரை!

சிரி கண்ணில் நீர் ஒழுக சிரி
மேகத்தின் சிரிப்புதன் மழை!

வா வந்தெனை கட்டிக்கொள்!

முத்தம் கொடுத்தே
முகத்தை அழி!

கசங்கிவிடாமல் என்னை பிழி!

என் தெருப்பக்கம்
தென்றல் இல்லாத பொழுது மூச்சு விடு!

நீ திடீரென் சிரிக்கிறாய்..

மின்னல் தோன்றி மறைகிறது

எங்கும் இருள் படர்கிறது
ஓ..நீ கோபம் கொள்கிறாய்!

என் கைகளில் தவழும் பிஞ்சு மேகமே

உன் முத்தத்தால் நீளும்
என் ஆயுள் கொஞ்சம் தங்கமே...