வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

டெல்லி கற்பழிப்பும்..சில கேள்விகளும்

Friday, January 04, 2013

india-rape-AFP-670


1.இதுதான் இந்தியாவில் நடந்த முதல் கற்பழிப்பா?பாதிக்கப்பட்டவர் மருத்துவ கல்லூரி மாணவி என்பதால்தான் இத்தனை போராட்டமா?இதே டெல்லியில் 2008 ல் மட்டும் 48 கற்பழிப்பு வழக்கு உள்ளதாமே!அப்போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

2.இந்த சம்பவத்தை பல்வேறு வகைகளில் சித்தரிக்கும் எந்த ஊடகமாவது இரவு 12 மணிக்கு அந்த  மாணவிக்கு நைட் சோ பாக்க அனுமதி கொடுத்ததையோ அல்லது அதை கண்டு கொள்ளாமல் இருந்ததையோ மேலும் அந்த மாணவி தனது பாய் ஃப்ரெண்டோடு அந்த நட்ட நடு ராத்திரியில் அவ்வாறு போனதையோ சுட்டிக்காட்ட வில்லை..

3.நடிகை அமிதாப்பட்சனின் மனைவி பாராளுமன்றத்தில் "இந்த இருக்கையில் எனக்கு இருக்கவே வெட்கமாக இருக்கிறது என அழுதாராம்...இதை சொல்ல அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது தான் ஒரு பெண் என்பதை தவிர.
இதே அரைகுறை ஆடை அவிழ்ப்பு மற்றும் கவர்ச்சியின் போதையில் நாட்டில் நடக்கும் சில தவறுகளுக்கு காரணமாய்  இருக்கும் ஒரு துறையை சார்ந்தவர் அதை எப்படி சொல்ல மனம் வருகிறது?

சரி இதற்கு எதுதான் தீர்வு?

இப்போது நான் சொல்லபோகும் தீர்வுக்கு நான் ஒரு இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால் நீங்கள் இதை கண்டிப்பாக கைதட்டி ஆராவரம் செய்வீர்கள்!

இதே குஜராத்தில் எத்தனை இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கபட்டனர்?ஒரு கர்ப்பினி பெண் வயிறு கிழிக்கப்பட்டு சிசுவும் வெளியே கொடூரமான முறையில் எடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட போது எங்கே போனார்கள் இவர்கள்?

இதற்கு தீர்வு சத்தியமாக இஸ்லாம் கூறும் வழிமுறைதான்...

இது என்ன காட்டுமிராண்டித்தனம் என சொன்ன சில வாய் இப்போது சொல்கிறது..அதற்கு மரண தண்டனைதான் சிறந்தது என..

குறிப்பாக மதுரை ஆதினம்..மற்றும் பாரதியஜனதா கட்ச்சியை சார்ந்த ஒரு தலைவர் உட்பட இப்போது சொல்கிறார்கள் அதை....


"திருமணம் முடிந்தநிலையில் ஒருவர் விபச்சாரம் செய்தால் அவ்ரை கல்லால் எறிந்து கொல்லுங்கள்..திருமணம் முன்பு செய்தால் நூறு சவுக்கடி கொடுங்கள்"என இஸ்லாம் சொல்கிறது!!!

என்ன ஒரு அருமையான தீர்வு பாருங்கள்! மரண தண்டனை கொடுத்தாலும் ஒரு நிமிடந்தான் அதை உணர முடியும்..ஆனால் கல்லால் எறிந்து அனு அனுவாய் மக்கள் முன்னிலையில் சாகப்போகும் ஒருவனை பார்த்தால் எவனாவது தப்பு செய்வானா?

இதே அரபு நாடுகளில் தவறுகள் நடக்கவில்லை என நான் ஒன்றும் வக்காலத்து வாங்க வில்லை..ஆனால் அங்கே குறைந்திருக்கிறது என சுட்டிக்காட்டுகிறேன்...பொது ரோடுகளில் இத்தனை கிலோமீட்டர் வேகத்தில்தான் போகவேண்டும் என சட்டம் அங்கே இருக்கிறது..மீறினால் நம்ம ஊரு காசுக்கு 7000 ஃபைன்...போக மனசு வரவில்லை...ஏன்??சட்டம் கடுமையாக இருக்கிறது..இதே இந்தியாவில் நீங்கள் ஜேம்ஸ்பான்ட் மாதுரி இந்த ரோட்டிலிருந்து அந்த ரோட்டுக்கு தாவலாம் பறக்கலாம்!

பெரிய பெரிய சிட்டிகளில் இரண்டு போர்டு இருக்கும்.ஒன்று சென்னை மாநகரம்..இன்னொன்று திருடர்கள் ஜாக்கிரதை என படத்துடன் சிலரது புகைப்படம்..

இது எதை சொல்கிறது?காவல்துறை சொல்கிறது..இங்கே சில திருடர்கள் இருக்கிறார்கள் ஜாக்கிரதையா இருங்க...

சிரிப்பு வரவில்லையா உங்களுக்கு??

அதை தடுக்கும் முயற்சியை காணோம்?

இஸ்லாம்  ஒருவன் திருடினால் அவனது கையை மக்கள் முன்னிலையில் வெட்டுங்கள் என சொல்கிறது!
இது சரியா?நீங்கள் தவறு என சொல்லலாம்...


பலநாள் கஸ்டப்பட்டு..தன் இரத்தம் சிந்தி..  கடுமையாக உழைத்து சம்பாதித்த பணம் திருட்டுக்கு பறிகொடுத்த ஒருவனை கேட்டுப்பாருங்கள்....நூறு சதவீதம் சரி என்பான்...

நான் ஒன்றும் நீங்கள் இஸ்லாத்திற்கு மாறுங்கள் என சொல்லவில்லை...அதன் நல்ல வழிமுறைகளை பின்பற்றலாமே என்ற வாதத்தை முன் வைக்கிறேன்

கட்டாயமாக பெண்கள் அனைவரையும் பர்தா அணிய சொல்வதால் அது பெண்களை அடிமைபடுத்தி வைத்திருக்கிறது என சொன்ன சில நாக்கு அதை சரி என இப்போது முன்மொழிகிறது!