முகம்மது,புத்தர்,இயேசு
மூவரும் வருகை தந்தனர் பூமிக்கு...
புத்தரே!
அமைதி தேடி காட்டுக்கு சென்றீர்!
இப்போது நாடே காடாகி விட்டது!
இயேசுவே!
ஒரு கன்னம் காட்டினாலே முகத்தில்
வறப்பு வெட்டும் இந்த காலத்தில்
இன்னோரு கன்னமா?
முகம்மதே!
சாந்தியும் சமாதானமும் என்றீர்!
இங்கே உண்டாகி கொண்டிருப்பது
ஜாதியும் சமாதியும்!
இங்கே இருக்கும் ஜாதிகளின் எண்ணிக்கையை
விஜயகாந்த் போல
விபரமாக சொல்வதென்றால் மூவாயிரம் பக்கம்
வேண்டும் எனக்கு..
மூவரும்
முன் வைத்ததுதான் என்ன?
சமாதானுமும் சாந்தியுமா?
சுடுகாட்டில்தான் இப்போது காணலாம்...
சகோதரத்துவமா?
சும்மா பேச்சுக்குத்தான்..
மனிதாபிமானம்?
அதுவும் இப்போது விற்பனையில்தான்
கிடைக்கிறது!
ஒற்றுமை?
இப்போதைக்கு காகத்திடம் மட்டுமே உண்டு!
மூவரும் அவசரமாய்கூடி
ஒரு முடிவுக்கு வந்தனர்...
தடங்களுக்கு வருந்துகிறோம்!
தவறுதலாய் பூமியென நினைத்து
தரையிரங்கிவிட்டோம்