வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

ஆண்களுக்கு கற்பு இல்லையா?

Wednesday, November 30, 2011


இந்த தலைப்பை பார்த்ததும் அல்லது படித்துமுடித்ததும் ஆண் வர்க்கத்தில் யாரும் கோபம் கொள்ள வேண்டாம்...

ஆண்களில் சிலபேருக்கு கற்பு என்றாலே அது பெண்கள் சமாச்சாரம் எனவும்,நமக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை எனவும் ஒரு எண்ணம் உண்டு.

கற்பு என்பது பெண்களிடத்தில் மட்டுமே இருக்கும் ஒரு அவையம் இல்லை..அது ஒரு ஒழுக்கம்!..இருவருக்குமே பொதுவான விசயம்..

தனக்கு வரும் மனைவி ஒழுக்கமான கற்புள்ள பெண்ணாக இருக்கவேண்டும் என நினைக்கும் ஆண் வர்க்கமே!

உங்கள் நினைப்பு தவறில்லை..ஆனால் உங்களுக்கும் கற்பு முக்கியமல்லவா?

ஆண்  என்றால் எப்படி வேண்டுமானாலும் மேயலாம் என எண்ணமா?நமக்கும் கற்பு உண்டு!ஒழுக்கம் உண்டு!

ஆகையால் அரசாங்கமே இனி பெண்களுக்கு ஒரு விபச்சாரவிடுதி இருப்பதுபோல் ஆண்களுக்கும் ஒன்று தேவை.

அங்கே தனக்கு தேவையானவர்களை தேர்ந்தெடுத்து தன் பசியை தீர்த்துக்கொள்ளட்டும் பெண்கள்!

அப்போதாவது கற்பு என்றால் என்னவென்று இவர்களுக்கு புறிகிறதா பார்ப்போம்!

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்..

இனி எந்த ஆணும் எந்த பெண்ணையும் விபச்சாரி..நடத்தைகெட்டவள் என மனதிலோ அல்லது வார்த்தைகளிலோ வசை மொழிய வேண்டாம்..அதற்கு முன் அதை சொல்ல நாம் தகுதியானவர்களா என நம்மையே நாம் கேட்டு கொள்வோமாக!

கடைசியாய் ஒன்று..
விபச்சாரம் என்பது இரு உடல் சார்ந்த விசயம் மட்டும் இல்லை..
பார்க்ககூடாததை கண் பார்த்தால் அது கண் செய்யும் விபச்சாரம்!
நினைக்ககூடாததை நினைத்தால் அது மனம் செய்யும் விபச்சாரம்!

இதனால்தான் இறைவன் தன் இறுதி வேதத்தில் நீங்கள் விபச்சாரம் பக்கம் நெருங்கவே வேண்டாம் என சொல்கிறான்..

சேய்ய வேண்டாம் என்பதற்கும்,நெருங்கவே வேண்டாம் என்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம் என நீங்கள் கேட்பது என் காதில் விழாமல் இல்லை..

ஒரு ட்யூப் லைட் பக்கத்தில் இருக்கும் ஸ்விட்ச்சில் கைவைக்காதே என சொன்னால் கரண்ட் இருக்கு...ஆபத்து என அர்த்தம்(எப்படியாவது பிழைத்து கொள்ளலாம்)

ஆனால் ஒரு பெரிய ட்ரான்ஸ்பாரம் இருக்கிறது..அங்கே ஒரு போர்ட் தொங்கும்
நெருங்காதே அபாயம் என்று(தொட்டால் பிழைக்க வாய்ப்பே இல்லை)

ஆகவே ஆண் வர்க்கமே விபச்சாரம் பக்கம் நேருங்கவே நெருங்காதீர்கள்!