வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

துவைக்காமலேயே தொடர்ந்து 100 நாட்கள் உபயோகிக்ககூடிய சட்டை

Thursday, May 09, 2013

the_shirt_iron_wash


துவைக்காமல், இஸ்திரி போடாமல் தொடர்ந்து 100 நாட்கள் உபயோகப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு சட்டையை அமெரிக்காவின் உல்&பிரின்ஸ் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உல்லன் நூல் கலந்த துணிகள் கசங்காது, வியர்வை வாடையை வெளியிடாத தன்மை கொண்டது. காட்டனைவிட ஆறு மடங்கு உழைக்கக்கூடியது என்பதால் இந்த வகைத் துணியில் நவீன காலத்திற்கு ஏற்ப ஆழ்நீலகலரில் சிறிய கட்டங்கள் கொண்ட சட்டையை வெளியிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது

இதனை அணிந்து பார்த்த நபர்கள் கூறுகையில், நாங்கள் எப்படி உபயோகித்தாலும் சட்டைகள் புதிது போலவே இருக்கின்றன என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் எல்லோரும் விரும்பும் விதத்திலும், எப்போதும் அணியக் கூடிய வடிவத்திலும், சாதாரண விலைமதிப்பிலும் இந்த சட்டைகளை உருவாக்கியுள்ளதாக அந்த நிறுவனம் தங்களது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.



student suicide

பிளஸ் 2 தேர்வில் 1063 மதிப்பெண் எடுத்த மாணவி சிந்துஜாவுக்கு டாக்டராகும் கனவு தகர்ந்து போனதாக மனவேதனை அடைந்து தூக்குக் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக நிகழ்வு நெல்லை மாவட்டம் தென்காசி அருகே நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம், தென்காசி அடுத்த மேலகரத்தை சேர்ந்தவர் சிந்துஜா. இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மாண்டிசோரியில் பள்ளி பிளஸ் 2 படித்து வந்தார். அவரது தந்தை சுப்பிரமணியன் தனியார் பேருந்தில் நடத்துனராக உள்ளார். தாயார் செங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். சகோதரர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.

பெற்றோருக்கு சிந்துஜாவையும், அவரது சகோதரரையும் டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், சிந்துஜா அண்ணன் பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்களே எடுத்ததால் டாக்டராகும் கனவு தகர்ந்து போனது.

இதனால், மகள் சிந்துஜாவை எப்படியும் டாக்டராக்க வேண்டும் என ஆசைப்பட்ட பெற்றோர், அதனைச் சொல்லி சொல்லியே வளர்த்ததாக தெரிகிறது. இந்த ஆசையை நிறைவேற்ற சிந்துஜாவும் கடும் முயற்சி எடுத்து படித்துள்ளார்.

இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை வெளியானது. இதில், சிந்துஜா 1063 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஆனால், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை சிந்துஜா படித்த பள்ளி மாணவிகளே பிடித்துள்ளனர்.

இதனால் டாக்டராகும் தன்னுடைய மற்றும் பெற்ரோரின் கனவு தகர்ந்து போனதாக மனவேதனை அடைந்த சிந்துஜா, வீட்டில் தூக்குப் போட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

நல்ல மதிப்பெண் பெற்ற நிலையில் சிந்துஜா, தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சக மாணவிகள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மிஃராஜ் பயணத்திற்கான ஆதாரம்

Friday, May 03, 2013







அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாவின் திருநாமத்தால் இதை ஆரம்பம் செய்கிறேன்!

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிரஹீம்

ஈமான் கொண்டவர்களை பற்றி யாருக்கும் கவலை இல்லை...அவர்கள் அல்லாவை நம்புவார்கள்,குரான் மற்றும் ரஸூலின் வழிகளைப் பின்பற்றி நடப்பார்கள்

பிரச்சனை அல்ல்லாவை நம்பாதவர்களைப் பற்றிதான்...

மிஃராஜ் பயணம்பற்றி அவர்களிடம் சொன்னால் என்னப்பா இது?சின்னபிள்ளைங்ககிட்ட கதை சொன்ன மாதுரி சொல்றிங்க என்பார்கள்.
அவர்களின் வாய்களை அறிவியலின் உதவியோடு நபி அவர்கள் செய்த மிஃராஜ் பயணத்தை அல்லாவை நம்பாதவர்களுக்கு நிரூபிக்க விரும்புகிறேன்

மிஃராஜ் பயணம் ஜிப்ரீல்(மலக்குமார்கள்)அவர்கள் புராக் என்னும் வாகனத்தில் நபி அவர்களை விண்ணுலகிறகு அழைத்து சென்றார்கள் என்பது வரலாறு..


சரி.. அறிவியலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?இருக்கிறது!

ஒளியோடு பயணம் செய்யும் எந்த பொருளுக்கும் எவ்வித மாற்றமும் இல்லை மேலும் நிமிடத்திற்கு 299792458 .

அல்லாஹ் குரானில் சொல்கிறான் நிச்சயமாக நாங்கள் மனிதர்களை களிமண்ணினாலும்,ஜின்களை நெருப்பினாலும் மேலும் மலக்குமார்களை ஒளியினாலும் படைத்தோம் என்று குறிப்பிடுகிறான்.

தான் படுத்த படுக்கையின் சூடு ஆறுவதற்குள் விண்ணுலகப்பயணத்தை முடித்து வந்தார்கள் என நபியின் மனைவி ஆயிஷா சொல்கிறார்.

இது எப்படி சாத்தியம்?

நபி ஒளியோடு பயணம் செய்தால் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும்

அவர் பயணம் செய்தது ஒளியோடுதான்...ஏனென்றால் அல்லாஹ் ஏற்கனவே சொல்கிறான் நான் மலக்குகளை ஒளியினால் படைத்தோம் என்று.

அவர் எப்படி அவ்வளவு விரைவாக போய் வரமுடிந்தது?ஒளியின் வேகத்தை பற்றி ஏற்கனவே நான் குறிப்பிட்டு இருந்தேன்

அல்லாஹ் மிகப்பெரியவன்!

அதனால்தான் அல்லாஹ் சொல்கிறான் நிச்சயமாக இந்த வேதம் அல்லாஹ் அல்லாதவரிடமிருந்துவந்திருந்தால் முரண்பாடுகளைக் காண்பார்கள் என..

நான் எதை கேட்டோமோ எதை படித்தோமோ அந்த வழியில் வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக!ஆமின்!


நரை வந்ததால் பொறுப்பு அதிகம் - ஏ.ஆர்.ரஹ்மான்











கிரிக்கட் உலகில் கைய்ல் 30 பந்தில் நூறு ரன் அடித்தது போல் குறைந்த படத்தில் இசையமைத்து,இசை உலகில் பெரிய இடம் பிடித்திருக்கும் ரஹ்மானை யாரும் மறக்கமுடியாது.

அவரை பற்றிய கிசுகிசுவுக்கும் பஞ்சம் இல்லை





இசையமைப்பாளரஏ.ஆர்.ரஹ்மானுக்கு, ஆஸ்கர் விருது கிடைத்ததும், அதைத் தொடர்ந்து, ஏராளமான, ஹாலிவுட் வாய்ப்புகள் வந்தன. இதனால், அமெரிக்காவில் தங்கியிருந்து,

இசையமைத்து வந்தார். அதன் காரணமாக, குறைவான தமிழ்ப்படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மானின் கவனம், தற்போது மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது."கோச்சடையான், மரியான் உட்பட  ஐந்து தமிழ்ப்படங்களுக்கு, தற்போது இசையமைக்கிறார்.



"கடந்த, 14 ஆண்டுகளாக, ஒவ்வொரு நாடாக, சுற்றி விட்டேன். வெளிநாடு செல்லும் ஒவ்வொரு முறையும், சென்னையிலேயே இருந்து விடுமாறு, என் பிள்ளைகள் கூறுவர். அதனால், இனிமேல் அவர்களுக்காக சென்னையிலேயே இருந்து, இசையமைக்கப் போகிறேன். வயது அதிகரித்து, தலை நரைத்து விட்டது. இதனால், பொறுப்பும் அதிகரித்து விட்டது. குடும்பம், குழந்தைகளை பிரிந்து இருப்பதும் கஷ்டமாக உள்ளது என்கிறார்.