வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

உனக்குத்தெரியுமா?

Saturday, January 28, 2012




உன் இதயக் காகிதத்தில்
நான் என்னை எழுதிவிட்டவன்!
என்னை கிழிப்பதாய் நீ
உன்னையே கிழித்துக் கொள்கிறாய்..


என் காதல் கண்ணாடியை
உடைத்துவிட்டதாய் பெருமை படாதே..
உற்றுப்பார்..
சிதறியிறுப்பது நீதான்!


அமுதம் பருகும் ஆசையோடு உன்
அருகினில் வந்தேன்
உன் உதட்டுக்கோப்பையில் நீ
ஊற்றிவைத்திருப்பது திராவகம்!


ஒருவேளை நீ என்னை
கனவு காண்கிறாய் என
நான் கனவு காண்கிறேனோ?..


பிடிக்கவில்லை என எப்படி
சொல்லிவிட்டாய்?
இதயத்தின் ஆழத்தில் கொள்ளியிட்டாய்!


ஏற்கனவே நான் உன்னை
மனதால் மணம் முடித்தவன்
அதனால்தான் வார்த்தைகளால்
விவகாரத்து செய்தாயோ?


காதல்சபையில் உன்னைபாடிய
இந்தபுலவனுக்கு பரிசாய்தந்தது
கல்யாண பத்திரிக்கையா?


பொற்காசுகளுக்கு பாடும்
புலவர்களுக்கு மத்தியில்
ஒரு பொற்ச்சிலைக்காக பாடிய
புலவன் நான் மகளே!


உனக்குத்தெரியுமா?
என் கவிதை பட்டாசுகளுக்கு
நீதான் நெருப்பு!


உன் கருவிழிபபரத்திற்கு நான்
கயிறாக இருக்கிறேன்..
நீயோ கயிறை சுற்றவைத்த
பம்பரம்!


உன் வெறுப்பு பார்வை அலைகளால்
என்னைவிரட்டினாலும்
முத்தான காதலை உன்னுள்
மூடியே வைத்திருக்கிறாயோ?


நீ என்னிடம் சிரித்த
ராத்திரிகளை சிவராத்திரிகளாகவும்
அழுத பொழுதுகளை அமாவாசையாகவும்
அனுஸ்டித்தவனை போய்
நாத்தீகன் என்கிறாய்!


தன்னை நிராகரித்தவர்களுக்கும்
சேர்த்தே ஒளி தரும் நிலவு!


நான் நிலவு!



பள்ளிக் கூடு!

Wednesday, January 04, 2012



ஒரே கூட்டில் வாழ்ந்த
பறவைகள் இன்று
பிரியப்போகின்றன..
இரைக்காகவோ இல்லை
இரையாகவோ??

உண்மையான நட்பிற்கு
உதாரணமாய் நம்
அனைவரையும் காலம்
 அடையாளம்காட்டியது!

நண்பனே!
என் நினைவுகள்
மறக்கமுடியாமல்
மறுதலித்தது உங்களைதான்!

தோழியே!
நம் இருவருக்கும்
இடையில் மட்டும்தான்
நாகரீகத்தின் கற்பு
நசுக்கப்படாமல் இருந்தது!

மறதிக்கு விதிவிலக்கு
பள்ளிக்கால நினைவுகள் மட்டும்..

அந்த மச்சான் மாப்பிள்ளை
நண்பர்களின் விளித்தல்கள்
எப்போதும் காதில்
எதிரொலிக்கும்!

மேகத்திலிருந்து
மழைத்துளிகளாய் சிதறிவிட்டோம்!
இனி மீண்டும் சேருமிடம் எது?

உள்ளங்கை ரேகைகள்போல்
ஒன்றாய்தானிருந்தோம்
அச்சத்தீர்க்க ரேகைகளாய் ஏன்
அன்னியமானோம்?

நாம் ஒரே வானில் முழு
நிலவு!
நட்ச்சத்திரங்களாய்
நம்மை பிரித்தது எது?


ஒருவேளை நமக்கு
இது பிரிவு இல்லையோ?


சூரியன் பிரிவது
இன்னொரு விடியலுக்குத்தானோ?


இப்படித்தான் என்னை
தினமும்
தேற்றிக்கொள்கிறேன் நண்பர்களே!


ஒரே வெள்ளத்தில்
அடித்துச்செல்லப்பட்ட செடிகொடிகளா
நாம் அனைவரும்?

சரிதான்..
பிரிவுகூட சிலநேரம்
பிரியமனதுதான்!

கண்கள் பிரிந்திராவிட்டால்
பார்வை இல்லை!

பாதம் பிரிந்துவிட்டால்
பயணம் இல்லை!

ஆணும் பெண்ணும் பிரிந்திராவிட்டால்
அன்பே இல்லை!

அதனால்தான்
அனைவரும் பிரிந்து விட்டோமோ??