வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் – ஸ்ரீசாந்துக்கு நெருக்கமான நடிகையிடம் விசாரணை!

Tuesday, June 04, 2013





ipl-spot-fixing

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்கள் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அங்கீத் சவான் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மற்ற இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூதாட்டம் தொடர்பாக முன்னாள் வீரர்கள் 4 பேர், சூதாட்ட தரகர்கள் உள்பட நாடு முழுவதும் 30 பேர் கைதாகி உள்ளனர்.

‘ஸ்பாட்பிக்சிங்’ சூதாட்டத்தில் பெற்ற பணத்தில் ஸ்ரீசாந்த் மாடல் அழகிகளுக்கும் ஏராளமான பரிசு பொருட்களை வாங்கி இருந்தார். அவைகளை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர். சூதாட்ட தரகர்களிடம் அவர் பெற்ற பணம் முழுவதும் கைப்பற்றப்பட்டது. ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே கன்னட நடிகைகள் இருவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தது தெரிய வந்தது. இதில் ஒரு நடிகையின் பெயர் சஞ்சனா அர்ச்சனா. மற்றொருவர் முன்னணி நடிகையாவார். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக இந்த இருவரிடமும் மும்பை போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அந்த நடிகைகள் பற்றிய விவரங்களை மும்பை போலீஸ் சேகரித்துள்ளது. அவர்கள் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர்கள். ஸ்ரீசாந்துடன் இந்த இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால் ஸ்பாட் பிக்சிங் குறித்து நடிகைகளிடம் விசாரணை நடத்த உள்ளோம். சம்மன் அனுப்பி அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

பெங்களூரை சேர்ந்த சஞ்சனாவும் மற்றொரு கன்னட நடிகையும் ஸ்ரீசாந்துடன் நெருங்கி பழகி வந்தனர். இதன் காரணமாகவே மும்பை போலீசார் இருவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். 2009-ம் ஆண்டு கோவாவில் ஸ்ரீசாந்துடன் சஞ்சனா ஒன்றாக சுற்றி திரிந்து உள்ளார். இருவரும் ஒன்றாக சேர்ந்து நடனமாடிய புகைப்படங்கள் வெளியானது.

மேலும் ஐ.பி.எல். போட்டி விருந்து நிகழ்ச்சியில் அடிக்கடி கலந்து கொள்வார். இதையெல்லாம் அவர் மறுத்துள்ளார். சஞ்சனா ஒரு காதல் செய்வீர் என்ற தமிழ்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.