"வாறான் வாறான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே"
என்ன உங்களுக்கு புறியலையா?வருகின்ற 14 காதலர் தினம்...
காதலை பற்றி பெருமைபாட நினைக்கும் இளசுகளின் வரிசையில் நானோ கடைசியில் நிற்கிறேன்...
சோ அதனால் ஏற்படும் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதுபற்றி ஒரு அலசல்
இதன் அறிகுறிகள் :
1.நூறு தடவை தலை சீவுவான்...(நல்லா வாட்ச்பண்ணுங்க)..கண்ணாடி பார்க்கும்போது தனுக்குத்தானே ஈ....னு சிரிப்பான்
2.டைட்டானிக் கப்பலுக்கு ஓனர் போல ஏதையோ தொலைத்தமாதுரி எப்புவும் எங்கையோ பார்த்துட்டு இருப்பான்..
3.ஒழுங்கா சாப்பிட மாட்டான் சோத்துல. புரோட்டாபோட மாவு பிசைவான்
இன்னும் சொன்னா...லோக்கல் ரோமியோ ஜூலியட் என்னை அடிக்க வருவாங்க
விட்டு விடுவோம்...
காதல் தோல்விக்கு என்னதான் தீர்வு?
எதையும் உள்ளதை உள்ள மாதுரி பார்த்தோம் என்றால் பிரச்சனை இல்லை..
உதாரணத்திற்கு...
சகோதரர் பீஜே சொன்னதுபோல் நிலாவை எடுத்துக்குவோம்.
கண் சொல்கிறது நிலா சப்பாத்தி சைசுக்குதான் இருக்கு என்று...
காது சில மூடத்தனமான செய்திகளை இஸ்டத்திற்கு சொல்கிறது..எ.கா;நிலாவில் பாட்டி வடை சுடுகிறாள்..
ஆனால் மூளையை பாருங்க...
டாய் அப்படி இல்ல...
நீ பூமியிலேருந்து பாக்குற அதான் நிலா சிறியதாக இருக்கிறது....அது பூமியைவிட பெருசு...என உண்மையை கண்டறிய உள்ளதை உள்ளபடி பார்க்கிறது..
என்ன விளங்கிடுச்சா?
சரி காதல் விசயத்திற்கு வருவோம்..
ஒரு மார்க்கட் இருக்கு...ஒரு பொருளைதேடி போகிறோம்..எங்கே தேடியும் அந்த பொருள் கிடைக்கவில்லை..."ஆ..அய்யோ அந்த பொருள் கிடைக்கலையே?நான் என்ன செய்வேன்?இப்படி யாராவது சொல்வாங்களா ?
நீங்களே சொல்லுங்கள்.....
காதலிலும் அப்படித்தான்...அவள்தான் எனக்கு ராணி என்பான்...அவ இல்லாட்டி நான் செத்துவிடுவேன் என பஞ்ச் விடுவான்..கடைசில என்ன ஆகும்?
இரண்டு வருசத்துல எல்லாம் போயிறும்...
சண்டைபோடும்போது சொல்வான்..ஏன்டி ஏன் பாவத்துல வந்து விழுந்தாய் என....
நல்ல மனிதன் என்ன செய்வான்?
அவள் கிடைக்கலையா?பரவாயில்லை...வேற பெண் உலகத்தில் இல்லையா?
அப்படிதானே நினைக்க வேண்டும்!
வைரமுத்துகூட பாருங்க
"முதல் காதல் முற்றிலும் தோல்வியா?
பரவாயில்லை
இன்னொரு காதல் இல்லையா"என்கிறார்
இதுக்குமேல நான் என்ன சொல்லட்டும்?