வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

குடும்ப வறுமையால் சலூன் கடை நடாத்தும் பட்டதாரி பெண்!

Sunday, August 11, 2013

devi 


யாரப்பா சொன்னது?வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று!

இங்கே பாருங்கள்....வல்லவிக்கு புல்லும் ஆயுதம்!





திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்குபல்லடம் முனியப்பன்கோயில் வீதியை சேர்ந்த தங்கவேலு மகள் தேவி (30). பிகாம் பட்டதாரியான இவர், அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் முடிவெட்டுகிறார். ஷேவிங் செய்கிறார். இவரது தொழில் நேர்த்தியை கேள்விப்பட்டு ஏராளமானோர் வாடிக்கையாளராகி உள்ளனர். பட்டதாரி பெண் தைரியமாக சலூன் தொடங்கி இருப்பது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தேவி கூறியதாவது: அரசு வேலைக்கு பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை வாட்டியது. தந்தை சர்க்கரை நோயாளி என்பதால், தந்தையின் தொழிலை கையில் எடுத்தேன். சிறுவயதில் இருந்தே அவரது பணியை பார்த்து வந்த எனக்கு தற்போது கை கொடுக்கிறது. தொடக்க நாட்களில் ஆண்கள் வரவே கூச்சப்பட்டனர். சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனாலும் நான் மனம் தளரவில்லை. சீரான முடிவெட்டை பார்த்து, நாளாக நாளாகத்தான் வரத்துவங்கினர் என்றார்.
 37
 
- See more at: http://tamilcloud.com/news/graduate-girl-work-saloon/#sthash.I8Y39BMC.dpuf
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்குபல்லடம் முனியப்பன்கோயில் வீதியை சேர்ந்த தங்கவேலு மகள் தேவி (30). பிகாம் பட்டதாரியான இவர், அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் முடிவெட்டுகிறார். ஷேவிங் செய்கிறார். இவரது தொழில் நேர்த்தியை கேள்விப்பட்டு ஏராளமானோர் வாடிக்கையாளராகி உள்ளனர். பட்டதாரி பெண் தைரியமாக சலூன் தொடங்கி இருப்பது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தேவி கூறியதாவது: அரசு வேலைக்கு பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை வாட்டியது. தந்தை சர்க்கரை நோயாளி என்பதால், தந்தையின் தொழிலை கையில் எடுத்தேன். சிறுவயதில் இருந்தே அவரது பணியை பார்த்து வந்த எனக்கு தற்போது கை கொடுக்கிறது. தொடக்க நாட்களில் ஆண்கள் வரவே கூச்சப்பட்டனர். சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனாலும் நான் மனம் தளரவில்லை. சீரான முடிவெட்டை பார்த்து, நாளாக நாளாகத்தான் வரத்துவங்கினர் என்றார்.

உப்புக்கருவாடு மனிஷாவா இப்படி???



manisha 

பம்பாய், இந்தியன், முதல்வன் படங்களில் அழகாக வந்து கவர்ந்தவர் மனிஷாகொய்ரலா. பம்பாய் படத்தில் உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு பாட்டுக்கு அவர் ஓடி வரும் காட்சி ரசிகர்களை கிறங்கடிப்பதாக இருந்தது.

அப்படிப்பட்ட மனிஷா கொய்ரலா இன்று ஆளே உரு மாறிப் போய் உள்ளார். திருமணம் அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகும் நிம்மதி பெறவில்லை. புற்று நோய் தாக்கியது. அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். மரணத்தின் விளிம்புவரை போய் மீண்டுள்ளார். பூரண குண மடைந்து விட்டார். முதல் தடவையாக இப்போதுள்ள தனது தோற்றத்தை படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அழகான தலை முடியை இழந்துள்ளார். கண்ணாடி அணிந்து இருக்கிறார். 42 வயதாகும் அவர் 62 வயது நிரம்பியவர் போல் காட்சி அளிக்கிறார்.

இந்த தோற்றத்துக்காக அவர் வருத்தம் அடைய வில்லை. தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். அதுவே படத்தை வெளியிட தூண்டியுள்ளது. இதன் மூலம் மற்ற நடிகைகளுக்கு உதாரணமாக திகழ்கிறார். இது குறித்து மனிஷா கொய்ரலா கூறும் போது இப்போதுள்ள என் தோற்றத்தை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். வெளி உலகுக்கும் இதை தெரிவிக்கிறேன். கறுப்பு வெள்ளையாக கடந்த காலம் இருந்தது. நிகழ்காலம் நன்றாக உள்ளது. கடவுள் மகிழ்ச்சியாக வைப்பார் என்றார்.
 

நாத்தீகர்கர்கள் அறிவாளிகளா?

Thursday, August 08, 2013

திரு.தங்கமணி அவர்களின் சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது? ” என்ற பதிவில் “உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக் கூடிய மனிதராக ஆக முடிகிறது” என்ற வாசகத்தைக் காண நேர்ந்தது.

கடவுள் நம்பிக்கையற்றவர்களை அறிவாளிகள் என்று விளித்திருப்பதன் மூலம் அதன் எதிர் நிலை நம்பிக்கையாளர்களை அறிவாளிகளுக்கு எதிர்ப்பதமாக சொல்லப் பட்டதாகக்கொண்டு, கடவுள் நம்பிக்கைக்கும் அதனை மறுப்பதற்குமுள்ள வித்தியாசத்தை தெளிவு படுத்திக் கொள்ளவும், நாஸ்திகர்களெல்லோரும் அறிவாளிகள் என்ற கூற்று சரிதானா? என்றும் பார்ப்போம்.

வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தோமேயானால் மனிதன் அறியாமையால் இறை நம்பிக்கையில் குறைந்திருந்த காலங்களும் பிறகு ஆன்மீகத்தில் திளைத்து இறை நம்பிக்கையில் மிகைத்திருந்த காலங்களும் மாறிமாறியே இருந்து வந்துள்ளன. மனித இனம் தோன்றியது முதல் ஏதாவது ஒரு நம்பிக்கையில் திளைத்து வந்ததாகவே அறியப்படுகிறது. ஒருபோதும் இறைநம்பிக்கை முற்றிலும் இல்லாத காலம் என்று ஒன்று இருந்ததாக அறிய முடியவில்லை.

உலகில் அறிவாளிகள் என்று அறியப்படுபவர்களில் பெரும்பாலோர் ஏதாவது ஒரு நம்பிக்கையை பின்பற்றியே வந்திருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையற்ற அறிவாளிகள் மிகச் சிறுபான்மையினராகவே இருந்து வருகிறார்கள். அறிவாளிகளை, கடவுள் நம்பிக்கையுள்ள அறிவாளிகள் கடவுள் நம்பிக்கையற்ற அறிவாளிகள் என்று வகைப்படுத்தாலமே தவிர கடவுள் நம்பிக்கையற்றவர்களை முற்றிலும் அறிவாளிகளாகவும், அதன் எதிர்நிலையிலுள்ள நம்பிக்கையாளர்களை அறிவாளிகளுக்கு எதிர்நிலையிலும் ஒப்பிடக் கூடாது.

கடவுள் நம்பிக்கையற்ற நாஸ்திகர்கள், தமது கடவுள் நம்பிக்கை மறுப்பிற்கு அடிப்படையாக அறிவியலைச் சொல்கிறார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகளை, 1) ஆய்வுகளினாலும் சோதனைகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டவை. 2) யூகங்கள், அனுமானங்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆனால் நிரூபணமாகாதவை (கோட்பாடுகள்) 3) சோதனைச்சாலை ஆய்வுகளாலும் கோட்பாடுகளாலும் திண்ணமாக வரையறுக்க/நிரூபிக்க இயலாத நம்பிக்கை சார்ந்தவை என வகைப்படுத்தலாம்.

நிரூபணங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் உட்படாதவை நம்பிக்கைச் சார்ந்தவையில் அடங்கும். அந்த நம்பிக்கை சார்ந்தவை, அறிவியல் நிரூபணங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக இல்லாதவரை முற்றிலும் நிராகரிக்கப்படக் கூடியவை அல்ல! அந்தவகையில்தான் இறைநம்பிக்கையும் சாரும். நம்பிக்கைக்களை உண்மையானவை அல்லது உண்மையல்லவை என்று நிரூபிப்பதற்கான ஆய்வுகளின் தொடர்ச்சியே அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்னணியாக இருக்கிறது.

பூமி தட்டையானது என்று நம்பப்பட்ட ஒரு கொள்கை ஆய்வுகளின் மூலம் “உருண்டை” என்ற கண்டுபிடிப்பால் தவறென நிரூபிக்கப்பட்டது. நிலவிலும் பிற கோள்களிலும் மனிதன் உயிர் வாழமுடியுமா என்பது, ஆய்வு நிலையிலேயே இருக்கும் கோட்பாடுகள். இறைநம்பிக்கை என்பது கோட்பாடுகளுக்கும் ஆய்வுகளுக்கும் அப்பாற்பட்டது. இறைநம்பிக்கையை எந்த அறிவியல் ஆய்வுகளாலும் நிரூபிக்க முடியாது. அறிவியலால் நிரூபிக்க முடியாதவற்றை நிராகரிப்பதைவிட நிரூபணமாகும்வரை தொடர் ஆய்வுக்குட்படுத்துவதே அறிவுப் பூர்வமான செயலாகும். இறை நம்பிக்கைக்கு எதிர்நிலை என்பது இறைநம்பிக்கை இன்மைதானே தவிர முற்றிலும் இறைநம்பிக்கையை மறுப்பதன்று!

உதாரணமாக, பேரூந்து 

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் – ஸ்ரீசாந்துக்கு நெருக்கமான நடிகையிடம் விசாரணை!

Tuesday, June 04, 2013





ipl-spot-fixing

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்கள் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அங்கீத் சவான் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மற்ற இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூதாட்டம் தொடர்பாக முன்னாள் வீரர்கள் 4 பேர், சூதாட்ட தரகர்கள் உள்பட நாடு முழுவதும் 30 பேர் கைதாகி உள்ளனர்.

‘ஸ்பாட்பிக்சிங்’ சூதாட்டத்தில் பெற்ற பணத்தில் ஸ்ரீசாந்த் மாடல் அழகிகளுக்கும் ஏராளமான பரிசு பொருட்களை வாங்கி இருந்தார். அவைகளை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர். சூதாட்ட தரகர்களிடம் அவர் பெற்ற பணம் முழுவதும் கைப்பற்றப்பட்டது. ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே கன்னட நடிகைகள் இருவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தது தெரிய வந்தது. இதில் ஒரு நடிகையின் பெயர் சஞ்சனா அர்ச்சனா. மற்றொருவர் முன்னணி நடிகையாவார். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக இந்த இருவரிடமும் மும்பை போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அந்த நடிகைகள் பற்றிய விவரங்களை மும்பை போலீஸ் சேகரித்துள்ளது. அவர்கள் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர்கள். ஸ்ரீசாந்துடன் இந்த இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால் ஸ்பாட் பிக்சிங் குறித்து நடிகைகளிடம் விசாரணை நடத்த உள்ளோம். சம்மன் அனுப்பி அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

பெங்களூரை சேர்ந்த சஞ்சனாவும் மற்றொரு கன்னட நடிகையும் ஸ்ரீசாந்துடன் நெருங்கி பழகி வந்தனர். இதன் காரணமாகவே மும்பை போலீசார் இருவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். 2009-ம் ஆண்டு கோவாவில் ஸ்ரீசாந்துடன் சஞ்சனா ஒன்றாக சுற்றி திரிந்து உள்ளார். இருவரும் ஒன்றாக சேர்ந்து நடனமாடிய புகைப்படங்கள் வெளியானது.

மேலும் ஐ.பி.எல். போட்டி விருந்து நிகழ்ச்சியில் அடிக்கடி கலந்து கொள்வார். இதையெல்லாம் அவர் மறுத்துள்ளார். சஞ்சனா ஒரு காதல் செய்வீர் என்ற தமிழ்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துவைக்காமலேயே தொடர்ந்து 100 நாட்கள் உபயோகிக்ககூடிய சட்டை

Thursday, May 09, 2013

the_shirt_iron_wash


துவைக்காமல், இஸ்திரி போடாமல் தொடர்ந்து 100 நாட்கள் உபயோகப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு சட்டையை அமெரிக்காவின் உல்&பிரின்ஸ் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உல்லன் நூல் கலந்த துணிகள் கசங்காது, வியர்வை வாடையை வெளியிடாத தன்மை கொண்டது. காட்டனைவிட ஆறு மடங்கு உழைக்கக்கூடியது என்பதால் இந்த வகைத் துணியில் நவீன காலத்திற்கு ஏற்ப ஆழ்நீலகலரில் சிறிய கட்டங்கள் கொண்ட சட்டையை வெளியிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது

இதனை அணிந்து பார்த்த நபர்கள் கூறுகையில், நாங்கள் எப்படி உபயோகித்தாலும் சட்டைகள் புதிது போலவே இருக்கின்றன என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் எல்லோரும் விரும்பும் விதத்திலும், எப்போதும் அணியக் கூடிய வடிவத்திலும், சாதாரண விலைமதிப்பிலும் இந்த சட்டைகளை உருவாக்கியுள்ளதாக அந்த நிறுவனம் தங்களது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.



student suicide

பிளஸ் 2 தேர்வில் 1063 மதிப்பெண் எடுத்த மாணவி சிந்துஜாவுக்கு டாக்டராகும் கனவு தகர்ந்து போனதாக மனவேதனை அடைந்து தூக்குக் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக நிகழ்வு நெல்லை மாவட்டம் தென்காசி அருகே நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம், தென்காசி அடுத்த மேலகரத்தை சேர்ந்தவர் சிந்துஜா. இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மாண்டிசோரியில் பள்ளி பிளஸ் 2 படித்து வந்தார். அவரது தந்தை சுப்பிரமணியன் தனியார் பேருந்தில் நடத்துனராக உள்ளார். தாயார் செங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். சகோதரர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.

பெற்றோருக்கு சிந்துஜாவையும், அவரது சகோதரரையும் டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், சிந்துஜா அண்ணன் பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்களே எடுத்ததால் டாக்டராகும் கனவு தகர்ந்து போனது.

இதனால், மகள் சிந்துஜாவை எப்படியும் டாக்டராக்க வேண்டும் என ஆசைப்பட்ட பெற்றோர், அதனைச் சொல்லி சொல்லியே வளர்த்ததாக தெரிகிறது. இந்த ஆசையை நிறைவேற்ற சிந்துஜாவும் கடும் முயற்சி எடுத்து படித்துள்ளார்.

இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை வெளியானது. இதில், சிந்துஜா 1063 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஆனால், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை சிந்துஜா படித்த பள்ளி மாணவிகளே பிடித்துள்ளனர்.

இதனால் டாக்டராகும் தன்னுடைய மற்றும் பெற்ரோரின் கனவு தகர்ந்து போனதாக மனவேதனை அடைந்த சிந்துஜா, வீட்டில் தூக்குப் போட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

நல்ல மதிப்பெண் பெற்ற நிலையில் சிந்துஜா, தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சக மாணவிகள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மிஃராஜ் பயணத்திற்கான ஆதாரம்

Friday, May 03, 2013







அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாவின் திருநாமத்தால் இதை ஆரம்பம் செய்கிறேன்!

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிரஹீம்

ஈமான் கொண்டவர்களை பற்றி யாருக்கும் கவலை இல்லை...அவர்கள் அல்லாவை நம்புவார்கள்,குரான் மற்றும் ரஸூலின் வழிகளைப் பின்பற்றி நடப்பார்கள்

பிரச்சனை அல்ல்லாவை நம்பாதவர்களைப் பற்றிதான்...

மிஃராஜ் பயணம்பற்றி அவர்களிடம் சொன்னால் என்னப்பா இது?சின்னபிள்ளைங்ககிட்ட கதை சொன்ன மாதுரி சொல்றிங்க என்பார்கள்.
அவர்களின் வாய்களை அறிவியலின் உதவியோடு நபி அவர்கள் செய்த மிஃராஜ் பயணத்தை அல்லாவை நம்பாதவர்களுக்கு நிரூபிக்க விரும்புகிறேன்

மிஃராஜ் பயணம் ஜிப்ரீல்(மலக்குமார்கள்)அவர்கள் புராக் என்னும் வாகனத்தில் நபி அவர்களை விண்ணுலகிறகு அழைத்து சென்றார்கள் என்பது வரலாறு..


சரி.. அறிவியலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?இருக்கிறது!

ஒளியோடு பயணம் செய்யும் எந்த பொருளுக்கும் எவ்வித மாற்றமும் இல்லை மேலும் நிமிடத்திற்கு 299792458 .

அல்லாஹ் குரானில் சொல்கிறான் நிச்சயமாக நாங்கள் மனிதர்களை களிமண்ணினாலும்,ஜின்களை நெருப்பினாலும் மேலும் மலக்குமார்களை ஒளியினாலும் படைத்தோம் என்று குறிப்பிடுகிறான்.

தான் படுத்த படுக்கையின் சூடு ஆறுவதற்குள் விண்ணுலகப்பயணத்தை முடித்து வந்தார்கள் என நபியின் மனைவி ஆயிஷா சொல்கிறார்.

இது எப்படி சாத்தியம்?

நபி ஒளியோடு பயணம் செய்தால் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும்

அவர் பயணம் செய்தது ஒளியோடுதான்...ஏனென்றால் அல்லாஹ் ஏற்கனவே சொல்கிறான் நான் மலக்குகளை ஒளியினால் படைத்தோம் என்று.

அவர் எப்படி அவ்வளவு விரைவாக போய் வரமுடிந்தது?ஒளியின் வேகத்தை பற்றி ஏற்கனவே நான் குறிப்பிட்டு இருந்தேன்

அல்லாஹ் மிகப்பெரியவன்!

அதனால்தான் அல்லாஹ் சொல்கிறான் நிச்சயமாக இந்த வேதம் அல்லாஹ் அல்லாதவரிடமிருந்துவந்திருந்தால் முரண்பாடுகளைக் காண்பார்கள் என..

நான் எதை கேட்டோமோ எதை படித்தோமோ அந்த வழியில் வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக!ஆமின்!


நரை வந்ததால் பொறுப்பு அதிகம் - ஏ.ஆர்.ரஹ்மான்











கிரிக்கட் உலகில் கைய்ல் 30 பந்தில் நூறு ரன் அடித்தது போல் குறைந்த படத்தில் இசையமைத்து,இசை உலகில் பெரிய இடம் பிடித்திருக்கும் ரஹ்மானை யாரும் மறக்கமுடியாது.

அவரை பற்றிய கிசுகிசுவுக்கும் பஞ்சம் இல்லை





இசையமைப்பாளரஏ.ஆர்.ரஹ்மானுக்கு, ஆஸ்கர் விருது கிடைத்ததும், அதைத் தொடர்ந்து, ஏராளமான, ஹாலிவுட் வாய்ப்புகள் வந்தன. இதனால், அமெரிக்காவில் தங்கியிருந்து,

இசையமைத்து வந்தார். அதன் காரணமாக, குறைவான தமிழ்ப்படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மானின் கவனம், தற்போது மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது."கோச்சடையான், மரியான் உட்பட  ஐந்து தமிழ்ப்படங்களுக்கு, தற்போது இசையமைக்கிறார்.



"கடந்த, 14 ஆண்டுகளாக, ஒவ்வொரு நாடாக, சுற்றி விட்டேன். வெளிநாடு செல்லும் ஒவ்வொரு முறையும், சென்னையிலேயே இருந்து விடுமாறு, என் பிள்ளைகள் கூறுவர். அதனால், இனிமேல் அவர்களுக்காக சென்னையிலேயே இருந்து, இசையமைக்கப் போகிறேன். வயது அதிகரித்து, தலை நரைத்து விட்டது. இதனால், பொறுப்பும் அதிகரித்து விட்டது. குடும்பம், குழந்தைகளை பிரிந்து இருப்பதும் கஷ்டமாக உள்ளது என்கிறார்.

அறிந்தும் அறியாமலும்...

Friday, April 19, 2013





Man in love - red roses everywhere




நிர்வாணத்திலிருந்து
ஆடை என்பதே
ஆதாமின் நாகரீகம்!

ஆடைகுறைப்பு
அறிந்தா அறியாமலா?

நாகரீகம் எத்தனைபேசினாலும்
பக்கத்துசீட்டில் பேதை அமரும்போது
ஆண்மையின் ஆணிவேருக்கு
அபாயசங்கு அடித்தது
தெரிந்தா?தெரியாமலா?

பேதையின் குட்டைப்பாவாடை
பார்த்து காற்றிடம்
பயமா?ஆசையா?

பந்தியில் அமரும்போது
பக்கத்து இலையை
ஓரக்கண்ணால் பார்த்தது
ஒப்பிட்டு பார்க்கவா?அனிச்சையாகவா?

சன் டீவியின் அரட்டை அரங்கத்தில்
தானாக புன்னகை செய்தது
தன்னிச்சையாகவா?கேமராவிற்காகவா?

பஸ்ஸில் நின்றுகொண்டிருந்த மங்கைக்கு
எழுந்து இடம் கொடுத்தது
இரக்கமா?ஏதேனுமா?

ஒவ்வொருமுறையும்
ஃபேஸ்புக்கில் பதிவுகளுக்கு
லைக் போடுவது
படித்தா?படிக்காமலா?

கடைசியாய் ஒன்று...

யாசகம் கெட்டவனிடம்
பணமிருந்தும்
பிச்சைக்காரனாய் மாறியது
அறிந்தா?அறியாமலா?

என் கதையை விற்கும் உரிமையை பாலச்சந்தர் மகளுக்கு யார் கொடுத்தது? – கே பாக்யராஜ்

Friday, April 05, 2013


 08-bagyaraj-2-300

சென்னை: இன்று போய் நாளை வா என்னுடைய கதை, எனது படைப்பு என்பது தமிழ் சினிமாவில் தெரியாதவர்களே கிடையாது. அப்படி இருந்தும் என் கதையை தனக்கு சொந்தமானது என பாலச்சந்தர் மகள் புஷ்பா கந்தசாமி விற்றிருப்பதை என்னவென்பது, என்கிறார் வேதனையுடன் இயக்குநர் கே பாக்யராஜ். திரைக்கதை மன்னன் என்றும் இயக்குநர் திலகம் என்று புகழப்படும் கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் இன்று போய் நாளை வா. இந்தப் படத்தின் கதையை பாக்யராஜுக்கே தெரியாமல் விற்று பெரும் பணம் சம்பாதித்துள்ளார் புஷ்பா கந்தசாமி. அந்தக் கதையை சத்தமில்லாமல் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று படமாக எடுத்து, பொங்கலுக்கு அவசர அவசரமாக வெளியிடத் தயாரானபோது, கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர் தயாரிப்பாளர்கள் ராம நாராயணனும் சந்தானமும். இந்தக் கதைத் திருட்டு குறித்து போலீசுக்கு 3 பக்க புகார் கடிதம் அனுப்பியுள்ள பாக்யராஜ், படத்தைத் தடை செய்ய வழக்குத் தொடரவும் தயாராகி வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தன் வேதனையை கொட்டித் தீர்த்துவிட்டார். “தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவில் உள்ள அனைவருக்குமே தெரியும் எனது கதைகள் பற்றி. யாராக இருந்தாலும் என் கதையை உரிய முறையில் கேட்டு படம் பண்ணி ஜெயித்திருக்கிறார்கள். இந்தியில், தெலுங்கில் இன்று வரை அப்படித்தான் நடக்கிறது. ஆனால் இங்கே தமிழ் சினிமாவில் நடந்திருக்கும் அநியாயம் சொல்ல முடியாதது. ஒரு படைப்பாளியை இப்படியா கேவலப்படுத்துவார்கள்? கதைக்கு சொந்தக்காரன் நான். திரைக்கதை, வசனம் அனைத்தும் எனக்கே உரியது. இந்தக் கதையை படமாக எடுக்க புஷ்பா கந்தசாமி என்னிடம் கேட்டார். நான் தரமுடியாது என்று கூறிவிட்டேன். காரணம் என் மகனை வைத்து இந்தப் படத்தை எடுத்து அவனுக்கு ஒரு பிரேக் தர விரும்பினேன். அடுத்து ராமநாராயணன் கேட்டார். அவருக்கும் அதே பதில்தான். நான் கதையைத் தரவில்லை என்றவுடன், என் கதையின் உரிமை தன்னிடம் இருப்பதாகக் கூறி புஷ்பா கந்தசாமியும் அவரது குடும்பத்தினரும் ராமநாராயணனுக்கு விற்று பணம் பார்த்திருக்கிறார்கள். இது நியாயமா…?,” என்றார்.

இது உண்ணாவிரதமல்ல, பேசாவிரதம்: ஒருத்தரும் வாய் திறக்கவில்லை!

02-fast-rajini-sarath-300


சென்னை: நடிகர் சங்கம் உண்ணாவிரதம் நடத்தினாலும், வழக்கம் போல் அங்கே யாரும் பேசவில்லை. வந்தார்கள், அமைதியாக உட்கார்ந்தார்கள், பலர் அங்கேயே இருந்தனர்.. சிலர் சில மணி நேரங்களுக்குப் பிறகு எழுந்து சென்றனர். இந்த உண்ணாவிரத அறிவிப்பு வந்த உடனே முடிவு செய்யப்பட்ட விஷயம், யாரும் எந்தவித கருத்தையும் உண்ணாவிரதப் பந்தலில் பேசக் கூடாது. அதற்கு பதில் ஒருமனதாக உண்ணாவிரத முடிவில் தீர்மானங்களை நிறைவேற்றிவிடலாம் என்று முடிவு செய்து, அதை அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் தெரிவித்திருந்தனர். வழக்கம்போல நடிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு, தனித் தமிழ்நாடு என்றெல்லாம் பேசி சிக்கலை உண்டாக்கிவிடப் போகிறார்கள் என்ற பயம்தான் இதற்கு முக்கியக் காரணம். மத்திய அரசுக்கு எதிராக, அல்லது காங்கிரசுக்கு எதிராக காரசாரமாகப் பேசி, வம்பை விலைக்கு வாங்காமல் இருக்க வேண்டுமே என்பதற்காகவே இந்த சுயகட்டுப்பாடு என்று கூறப்படுகிறது.

ஆனால் உண்ணாவிரதப் பந்தலுக்கு வெளியே தன் சொந்தக் கருத்து என்று சிலர் ரொம் எச்சரிக்கையாகப் பேட்டி கொடுத்ததைப் பார்க்க முடிந்தது. ரஜினி, கமல், அஜீத், சூர்யா, விக்ரம், தனுஷ் என உண்ணாவிரதத்துக்கு வந்த அனைவரும் வெறுமனே பந்தலில் அமர்ந்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். வெயில் வேறு மிகக் கடுமையாக இருந்ததால், நீண்ட நேரம் அவர்களால் பந்தலில் அமர் முடியவில்லை.

'நானும் சத்தியராஜும் கணவன் மனைவி போன்றவர்கள்'






அமைதிப் படையின் இரணடாம் பாகமான நாகராஜசோழன் எம்ஏ எல்எல்ஏ அரசியல் படம்தான். ஆனால் யாராயும் குறிவைத்துத் தாக்கும் படமல்ல.
இன்றைய அரசியல் அவலத்தைத் தோலுரித்துக் காட்டும் படம். இப்படிப் படம் எடுத்ததால் தாக்குதல் நடத்துவார்களோ என நான் பயப்படவில்லை. என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும், தமிழகத்தில் எந்த அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேச முடியாது," என்றார் இயக்குநர் மணிவண்ணன்.

ஐம்பதாவது படம்

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேல் இயக்குநராக, சிறந்த நடிகராக திகழ்பவர் மணிவண்ணன். 1994-ல் அவர் இயக்கிய அமைதிப்படை பிரமாண்ட வெற்றிப் படமாகவும், அரசியல் எள்ளலுக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகவும் திகழ்கிறது. இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ  என்ற தலைப்பில் இயக்கி வருகிறார். இயக்குநராக இது அவருக்கு 50 வது படம்.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னை கிரீன் பார்க்கில் நடந்தது. ஏராளமானோர் திரண்டு வந்து விழாவில் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது இயக்குநர் மணிவண்ணனின் பேச்சு.

"நானெல்லாம் இயக்குநராவேன்னு எங்க டைரக்டர் பாரதிராஜா நம்பவே இல்ல. ஏன்னா அவருக்கு அவரைத் தவிர யாருமே இயக்குநர் இல்லேன்னு நினைப்பு. இதுல அவர் எங்கே எனக்கு வாய்ப்புக்கு சிபாரிசு செய்யப் போகிறார்...

இளையராஜாவால் இயக்குநர் ஆனேன்...

அப்போல்லாம், பாரதிராஜா படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கும்போது, அவருக்கு பாடலுக்கான சூழ்நிலையை சொல்வது, பாடல் வரிகளை எழுதி வாங்குவது என அத்தனை வேலைகளையும் நான்தான் செய்து வந்தேன். ஒரு முறை அவர்தான் என்னை தயாரிப்பாளர் கலைமணிக்கு அறிமுகப்படுத்தி, நம்ம பையன்தான். நல்ல திறமை இருக்கு. ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு சொல்லி கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை இயக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இளையராஜாவாலதான் நான் இயக்குநரானேன்.
அழகன் - அழகி திரைப்படத்தில் பவர்ஸ்டார் போஸ்டர்
வணக்கம் சென்னை : ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்
விஜயின் தலைவா :  புதிய படங்கள்
சேட்டை பிரஸ் மீட் படங்கள்
 ரணம் : திரைப்பட படங்கள்
புதிய திருப்பங்கள் : ஸ்டில்ஸ்
புதிய திருப்பங்கள் : ஆடியோ வெளியீடு
கவிதை : திரைப்பட போஸ்டர்ஸ்
அபர்னா : புதிய படங்கள்
நடிகை அம்பிகா புதிய ஸ்டில்ஸ்
சேட்டை : புதிய படங்கள்

ஆனா இன்னிக்கு அந்த இசைஞானியை இந்தப் படத்துல பயன்படுத்த முடியல. காரணம் பட்ஜெட். இந்தப் படத்து பட்ஜெட் அதுக்கு இடம் கொடுக்கல. ஜேம்ஸ் வசந்தனைப் பயன்படுத்தியிருக்கேன்.

அமைதிப் படை 2-ம் பாகம் அரசியல் படம் என்று சொல்கிறார்கள். ஆமா.. இது அரசியல்படம்தான். எந்த அரசியல் கட்சியையும் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல், ஆனால் சமகால அரசியலைச் சொல்லும் படம் இது. இதில் வரும் வசனங்களும் அப்படித்தான்.

ஒரு ஆசியரைப் பற்றி படமெடுத்தால் பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்களைப் பற்றி சொல்வது போல,  ஒரு விவசாயியைப் பற்றிய படத்தில் விவசாயம், விவசாயி நிலையைச் சொல்வதுபோலத்தான் இதுவும்.

அமைதிப்படை முதல் பாகம் எடுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளோம். இந்த 20 ஆண்டுகளில் சத்யராஜ் முகத்திலும், நடையிலும் ஏற்பட்டுள்ள அனைத்து மாறுதல்களும் இரண்டு பேருக்குதான் நன்றாகத் தெரியும். ஒன்று அவர் துணைவியாருக்கு. இன்னொன்று எனக்கு!

நாங்கள் இருவருமே கணவன் - மனைவி மாதிரிதான். படப்பிடிப்பின்போது, அவர் நடித்துக் கொண்டிருப்பார். நான் கட் சொல்ல மறந்து அவர் நடிப்பையே ரசித்துக் கொண்டிருப்பேன். அவரே, 'தலைவரே.. கட் சொல்லுங்க' என்பார்.

அரசியலையும் அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதால் அச்சுறுத்தல் வருமே என்றெல்லாம் நான் பயப்படவில்லை. காரணம் இழப்பதற்கு எதுவுமில்லை, உயிரைத் தவிர. என்ன போயும் போயும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் மூலம் அது போகுமே என்ற வருத்தம்தானே தவிர வேறொன்றுமில்லை. அப்படி எனக்கு என்ன நேர்ந்தாலும், என் உடலை புலிக்கொடி போர்த்தி எடுத்துச் செல்லுமாறு என் தம்பி சீமானை கேட்டுக் கொள்கிறேன்.

சூது கவ்வும் : ஆடியோ வெளியீடு படங்கள்

சூது கவ்வும் : ஆடியோ வெளியீடு படங்கள்
சூது கவ்வும் : திரைப்பட போஸ்டர்
சூது கவ்வும் : பிரஸ் மீட்
மஞ்சப்பை : ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்
காந்தாரி : திரைப்பட ஸ்டில்ஸ்
நடிகர் வீர பாகு : திருமண ரிஷப்ஷன் படங்கள்
ஆனால்... மவனே... என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும், இந்த தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேசமுடியாத நிலை ஏற்படும். புலிப்படை அதைப் பார்த்துக் கொள்ளும்.

50 நாளில் நேர்த்தியாக படமெடுக்கலாம்...

சரியாக திட்டமிட்டுப் படமெடுத்தால் ஒரு நல்ல, பெரிய படத்தை வெறும் 50 நாட்களில் எடுத்து முடிக்கலாம்.

நான் இளைஞன் என்ற ஒரு படத்தில் நடித்தேன். பெரிய பெரிய செட் போட்டிருந்தார்கள். பின்னி மில் முழுக்க செட்கள்தான். நானும் அந்தப் படப்பிடிப்புக்கு போவேன். நாள் பூரா சும்மாதான் உட்கார்ந்திருப்பேன். எப்போதாவது கூப்பிடுவார்கள். சார், டிபன் சாப்பிடுங்க என்பார்கள். இப்படித்தான் அந்தப் படப்பிடிப்பு போனது. படம் வெளியான பிறகு, அந்தப் படம் முழுக்க தேடிப் பார்த்தேன். அந்த செட்களில் ஒன்றைக் கூட பார்க்க முடியவில்லை!








என்னைப் பத்தியும் ஏதாவது எழுதுங்கப்பா!
இன்றைக்கு ஊடகங்கள் பெருகிவிட்டன. பல முகங்கள் எனக்குத் தெரியவே இல்லை. தினமும் பேப்பர்ல பேரு வரலேன்னா அரியல்வாதிகளுக்கு அடுத்த வேளை சோறு இறங்காது. அதிலும் அந்தக் கட்சிக்கு பெரிசாவும், இந்தக் கட்சிக்கு சின்னதாவும் செய்தி வந்தா அன்னிக்கு தூக்கமே போயிரும் அவங்களுக்கு.
என்னமோ நடக்குது : திரைப்பட படங்கள்
எல்லாம் நீயானாய் : திரைப்பட குழு செவ்வி படங்கள்
நடிகை அனியா : படங்கள்
நடிகை ஆஷா பெலிஷியா : படங்கள்
வெற்றி : திரைப்பட ஆடியோ படங்கள்
நாம அப்படியெல்லாம் கேக்கல. ஆனாலும் எதாவது எழுதுங்கப்பா... என்னைப் பத்தியும் ஏதாவது பிட்டு போடுங்க அப்பப்ப... என்ன.. என்னைப் பத்தி எதுவும் கிசுகிசு எழுதினா யாரும் நம்ப மாட்டாங்க என்றார்.

வரதட்சணை கேட்கும் உரிமை பெண்களுக்கே உண்டு

Friday, March 22, 2013






என்னடா இது?இஸ்லாத்திலுமா இது அனுமதிமதிக்க பட்டிருக்குனு யாரும் கேட்டுவிடாதீர்கள்?
நான் வரதட்சணை என குறிப்பிட்டது மஹர் பணத்தை மட்டுமே

ஏனெனில் இவர்களுக்கு மஹர் பணம் என்றால் சரியாக விளங்காது என என் எண்ணம்
(விளங்கியிருந்தால்தான் கொடுப்பார்களே!ஏன் புடுங்குகிறார்கள்)

சில விசயங்கள் அப்படியே உல்டாவா மாறிடுச்சி

ரசூலுல்லா காலத்தில் பெண்களை பெற்றவன் மகராசன்
இன்றோ ஆண்டியப்பன்

ஏன் இப்படி?சிலர் இஸ்லாத்தை சரியாக புரிந்துகொள்ளாததின் காரணமே அது

இவர்களை போன்றவர்கள் இருப்பதால்தான் இஸ்லாத்தை மற்ற மதத்தினரும் சரியாக விளங்கிகொள்ளாத சூழ்நிலை

"அட உங்களுக்கு என்னப்பா?தலாக் தலாக்னு சொன்னா போச்சு..இன்னொரு கல்யாணம் என்பார்கள்...

ஈச்ளாஆM பெண்களை கொடுமைபடுத்துகிறது என வேறு அனுபல்லவி

ரசூலுல்லா காலத்தில் ஒரு சம்பவம்

ஒரு பெண்மணி வருகிறார்..என் கண்வரோடு எனக்கு வாழ விருப்பம் இல்லை விவகாரத்து வாங்கி தாருங்கள் என முறையிடுகிறார்

ஆனால் கணவரோ கண்ணீர்விட்டு கதறுகிறார்..உன்னோடு நான் வாழ விரும்புகிறேன் என்கிறார்

அவரது நிலையை பார்த்துவிட்டு ரசூல் அவர் உங்கள் மேல் அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்..அவரோட சேர்ந்து வாழலாமே என்றார்

உடனே அப்பெண்மணி"இநபியே இது உங்களின் கூற்றா?இல்லை இஸ்லாத்தில் பெண்களுக்கு இருக்கிற உரிமையா?என கேட்டார்...
நபி"இது என் கூற்றே"என்றார்

அப்படியானால் எனக்கு என் உரிமையை தாருங்கள் என கேட்கவே
அவருக்கு விவகாரத்து வழங்கப்பட்டது

இது எதை காட்டுகிறது?
இஸ்லாத்தில் பெண்களுக்கும் கணவரோடு வாழ விருப்பம் இல்லை என்றால் குலா எனும் விவகாரத்து உரிமை அவர்களுக்கும் உண்டு என காட்டுகிறது

அதற்கு நிபந்தனை அவர் வாங்கிய மஹர் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்

யார் இங்கே அதை  புரிந்து கொண்டார்கள்?

உமர் ரலி அவர்கள் காலத்தில் இன்னொரு சம்பவம்

இந்த பெண்கள் அதிகமாக வரதட்சணை கேட்கிறார்கள் அதனால் திருமணம் செய்யமுடியாத நிலமையில் நாங்கள் இருக்கிறோம் என சிலர் உமர் அவர்களிடம் முறையிடவே அவர்"கஸ்டப்பட்டவராய் இவளவுதான் கேட்க வேண்டும் என ஒரு தொகையை நிர்ணயம் செய்கிறார்..

உடனே ஒரு வயதான மூதாட்டி"உமரே இது உங்களின் அறிவுரையா?இல்லது இஸ்லாத்தின் சட்டமா?என கேட்டதும் உமர் ஆடி போய் சிறிது நேரம் அமைதியாய் இருந்துவிட்டு பின் கூறினார்
"நான் தவறு செய்து விட்டேன் இந்த மூதாட்டி சொல்வது சரியே!பெண்கள் கேட்டதை நாம் கொடுத்தே ஆக வேண்டும்..அவர்கள் உரிமையை பறிக்கலாகாது என்றார்

சரி இப்போது சொல்லுங்கள்


ஒரு பள்ளிகூடம். இரு தோழிகள் இருக்காங்க.
ஒருவர் முஸ்லீமல்லாதவர்.  இன்னொருவர் முஸ்லீம்.
இருவரும் கட்டுகோப்பான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். விளையாட்டு போட்டிக்காக வெளியூர் செல்ல அனுமதி வேண்டி வீட்டில் கேட்க, வீட்டினர் மறுக்கிறார்கள். பெண் குழந்தையை எப்படி துணை இல்லாமல்  வெளியூர்க்கு அனுப்புவது என்ற கவலை இரு குடும்பத்தினருக்கும்!


அடுத்த நாள் பள்ளியில் ஆசிரியரிடம்,

        முஸ்லீமல்லாத  பெண்-  எங்க வீட்டில் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க
        ஆசிரியர்-ம் சரி போ!


        முஸ்லீம் பெண்- எங்க வீட்டில் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க
        ஆசிரியர்- உங்க ஆளுங்களே இப்படிதான்... பொண்ணுங்கள் எங்கும் விடுறதில்ல, மொகத்த மூடுன்னு ஓவர்ரா கன்ட்ரோல் பண்ணி அடிமைபடுத்துறாங்க... எப்பதான் திருந்த போறாங்களோ..................................

இதுதான் இன்றைய நிலை!!!
இஸ்லாமிய பெண் என்றாலே  அடிமைப்படுத்தப்பட்டவள் என்று பரிதாபமாக பார்க்கப்படுகிறது. ஆக்சுவலி  முஸ்லீமல்லாத குடும்பத்தாருக்கு  தன் பெண் மேல் என்ன பயம் இருக்குமோ அதே தான் அந்த இஸ்லாமிய குடும்பத்திற்கும் இருக்கு... ஆனால் சமுதாயத்தின் பார்வையில்?????????!!!!!!!!

எங்களை பார்த்து நீங்க பரிதாபப்படுறீங்களா??? ஏன் படணும்? என்ன அவசியம் வந்தது??? கீழே உள்ளதெல்லாம் வாசிங்க.... அதுக்கப்பறம் முடிவு பண்ணுங்க!!!

சொத்துரிமை:
ஆண்களை போலவே பெண்களுக்கும் சொத்தில் பங்குண்டு! இதுதான் எல்லா எடத்துலையும் இருக்கே?? என்னமோ இவங்களுக்கு மட்டும்  இருக்குறமாதிரி எதுகெடுத்தாலும் மதம் மதம்னு ஏன் அலையுறீங்கன்னு கேக்குறீங்களா???? 1956 ஜூலை 4ம் தேதி அன்று இந்திய (இந்து)வாரிசு சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் தான் சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு (தனி சொத்தில் மட்டும். பங்கு சொத்தில் இல்லை) என இந்திய அரசியலமைப்பு சொன்னது!   2005ம் ஆண்டு வெளிவந்த சட்டதிருத்தத்தின்படி  தனிசொத்திலும் பங்குசொத்திலும் உரிமை உண்டு என கூறப்பட்டது.  அதுக்கு முன்னாடிலாம்   "சீர் செனத்தி செஞ்சாச்சுல??? இனி என்னாத்துக்கு இங்கே வார்ரவ? எல்லாம் எம்மவனுக்குத்தேன்"ன்னு சட்டம் பேசிட்டிருந்தாங்க நம்ம பெற்றோர்ஸ்! ஆனால் 7ம் நூற்றாண்டிலேயே இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடைத்துவிட்டது.  எவ்வித காத்திருப்புகளும் இல்லை! எவ்வித போராட்டங்களும் இல்லை! எவ்வித கெஞ்சுதல்களும் இல்லை!  இந்த பங்கீடு ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் கட்டாயக் கடமை ஆகும். இதை நிறைவேற்றியே ஆக வேண்டும்.

    இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு. என்று உங்கள் பிள்ளைகள் விசயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகின்றான். அல்-குர்ஆன் (4:11)

    குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்குண்டு. பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்குண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. அல்-குர்ஆன் (4:7)


திருமண சம்மதம் :
மனதிற்கு விருப்பமில்லாத ஒருவனை காட்டி திருமணம் செய்யும் படி பெற்றோர் எம்மை வற்புறுத்த முடியாது. திருமணத்திற்கு எம் சம்மதம் தான்  முதல் முக்கியமான விஷயம்.

    விதவைப்பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெறவேண்டும். கன்னி பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - ஆதார நூல்: புகாரி)


பெண்களின் சம்மதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்க பாருங்க! பெண்ணை அடிமைபடுத்துவதாகவோ அல்லது உரிமைகளை  நசுக்கும் மதமாகவோ இருந்தா  இதில் ஏன் கவனம் செலுத்தி பெண்ணின் சம்மதத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? சிந்திப்பீர்களா?

இப்படிதான் ஒருமுறை ஒரு பொண்ணு வந்து நபி (ஸல்) அவர்களிடம்  "எங்கப்பா எனக்கு பிடிக்காத நபரை திருமணம் செய்து வைக்கபாக்குறாரு. எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை"ன்னு சொல்லிட்டாங்க. உடனே அதற்கு தீர்ப்பு சொன்ன நபி (ஸல்) அவர்கள் "இந்தத் திருமணம் ஆகுமான திருமணம் அல்ல! இது செல்லாது! நீ விரும்பியவரை மணம் முடித்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கிறது!” என்று கூறி என் திருமணத்தை ரத்து செய்தார்கள்.
ஒரு பெண்ணின் சம்மதம் இல்லைன்னா கல்யாணமே ரத்தாம்! :-)

இது பெண்ணின் உரிமை! சமுதாயம் தான் கொடுக்கணும். ஏன் மதத்தை தூக்கிட்டு அலையுறீங்கன்னு கேக்குறீங்களா??? ம்ஹும்ம்ம்... எங்கம்மா அப்பா கொடுக்காத உரிமையை/சமுதாயம் மறுத்த உரிமையை குர் ஆனின் இறைவசனம் தான் வாங்கிகொடுத்துச்சு!

மறுமண உரிமை :
விவாகரத்தானாலோ அல்லது கணவன் இறந்தாலோ யாரும் எம்மை வெள்ளைபுடவை கட்டி அழகுபார்ப்பதில்லை! அதன் பின்னும் எம் பெண்களுக்கு வாழ்க்கை இருக்கு. அவளுக்கு மறுமணம் புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது சமுதாய உரிமை! இத மதம் தான் கொடுக்கணுமா? ஏன் மதத்தை உரிமையோடு கலக்குறீங்கன்னு கேக்குறீங்களா??? வேறொன்னும் இல்லைங்க... சமுதாயம் அவர்களை விதவைன்னு முத்திரைக்குத்தி, இயல்பை மாற்றி,  மூலையில் உக்கார வைத்தபோது  மதம் தான் "நீ நீயாகவே இரு"ன்னு சொல்லி கொடுத்துச்சு! இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கும் விதவை பெண்களின் நிலைக்கு  இஸ்லாத்தில் எப்போதோ தீர்வு சொல்லப்பட்டுவிட்டது!

பெண்கல்வி :
அடுத்ததாக படிப்பு! இஸ்லாம் பெண்கல்வி மறுப்பதாக பலர் கருதுகிறார்கள். இதுவும் கட்டுக்கதையே! இன்றைய காலகட்டத்தில் தான் படிப்பின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்திருக்கிறார்கள்.  முன்பு பெண் கல்வி என்பது சமுதாயத்தில் மறுக்கப்பட்ட ஒன்றுதான்!  அடுப்பூதுவதும் அப்பளம் சுடுவதும் தான் பெண்ணின் நிலை என்ற இழிநிலையை தடுத்து ஆணை போலவே பெண்ணிற்கும் கல்வி கற்கும் உரிமையை வழங்கியிருக்கிறது. அதுவும் 1400 வருசங்களுக்கு முன்பே...

    கல்வியைத்தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும் என்பது நபி மொழியாகும். (ஆதார நூல்: இப்னுமாஜா)

பெண்களை கொடுமைபடுத்துகிறதா?
பெரும்பாலனவர்களின் எண்ணம் இதுவே! இஸ்லாம் பெண்களை கேவலாக நடத்துவதாகவும், அவர்களை சதைபிண்டமாகவும் மட்டுமே பாவிக்கிறது எனவும் பலவாறாக விமர்சிக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் பெண்களை  ராணிகளாய் நடத்துவது ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்...

இதோ சில உதாரணங்கள் :

        உங்களுக்கு உங்கள் மனைவியர்மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள்மீது சில உரிமைகள் உள்ளன. (திர்மிதி)

         உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே." (திர்மிதி)

        அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்துகொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் அநேக நன்மைகளை வைத்திருக்கலாம். (அல்குர்அன் 4:19)

         எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்." (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)


இவையெல்லாம் இஸ்லாமிய பெண்மணிகள்  சங்கம் அமைத்து, ரோட்டில்  கொடிதூக்கி, போராட்டம் பண்ணி, நீதிமன்றம் மனித உரிமை கழகம்ன்னு போராடி ஒவ்வொரு முறையும் பிச்சை கேட்டு வாங்கிய சுதந்திரம் இல்லை! இயல்பாகவே இஸ்லாம் எங்களுக்கு ஏற்படுத்தி தந்தவை!

இறைவன் கொடுத்த சிந்திக்கும் திறன் இன்னும் நம்மிடம் அப்படியே தான் இருக்கு. திறந்த மனதுடன் முன்முடிவில்லாது யோசிங்க.


இஸ்லாம் மதிக்கிறது?மற்றவர்கள் பெண்களை மிதிக்கிறார்களா?

அம்மாவுக்கோர் தாலாட்டு





உளியால் சிலை
செய்வான் சிற்பி!
வலியால் சிசு
செய்வாள் தாய்!

அம்மா அன்பின் இலக்கணம்!



தொட்டிலில் தாலாட்டிய
அன்னையின் அன்பை
பட்டியலிடும்
பேனா என்னிடம் இல்லை...

தென்றல் மரத்தை
தாலாட்டும் அளவு எவ்வளவு?

மேகத்துக்கு பிறந்த
பிரவாகத்தில் சிதறிய
துளிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

அளவிட அளகில்லை
அளப்பதும் அழகில்லை!

தன்னை வளர்த்த
வேருக்கு பூக்கள் தூவி
வாழ்த்துச் சொல்லும்
ஆலமரம்!

ஆலமரபிள்ளை
இலைகளால் ஆன
இக்கவிதைகளால்
வேரான அம்மாவிற்கு
விருது தரும் தருணமிது!


விலங்குகள் சில
விளங்கிகொண்ட ஒரே பெயர்!

பிள்ளை விளைந்ததிலிருந்து
தூக்கம் அம்மாவுக்கு
தொலைந்து போனது!

இரவின் நீளம்
அம்மாவின் துயரம்!

முன்பெல்லாம் நிலாவை காட்டி
சோறூட்டிய அம்மா
தங்கத்தை காட்டி இப்போது
சோறூட்டுகிறாள்!

ஆனால் நிலவைக்காட்டியா
நிலாவுக்கு சோறூட்டுவது???

அம்மாவின் அன்பையும்
அளவையால் அளக்கலாம்
அது தொட்டிலுக்கும் தாயுக்கும்
இடையே உள்ள தூரம்!

உறவின் பரிமாணம்
அண்ணன்,மச்சான்,மனைவி என
மாறிக்கொண்டே இருக்கிறது
அம்மா பிள்ளையைத்தவிர...

உலகமே
போர்வைக்குள்
போன பின்பு நாதியற்றுகிடப்பது
நானும் நீயும்தானே!

எப்போதுவெடிக்கும் எரிமலை?
எப்போது அழுமோ என் குழந்தை??
இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை

அன்னைக்கும் பிள்ளைக்கும்
காதல் உண்டு...

தோளில் சாயும்போது
பைசாநகரத்து கோபுரம்!

தள்ளியிருக்கும்போது
தண்டவாளம்!

மடியில் உட்காரும்போது
அரசனின் சிம்மாசனம்!

தாயின்பிரிவு நிரந்தரம் இல்லை

கண்ணைவிட்டு இமை
எத்தனைநேரம் பிரிந்திருக்கும்?

பிரிப்பதறிது
அம்மாவும் பிள்ளையும்
அச்சதீர்க்க ரேகைகள்!

இஞ்சி இடுப்பழகி உண்மைதானோ???

 
Photo


ஆங்கில கவிஞர்கள் 'குழவியை'யும், தமிழ் கவிஞர்கள் 'உரல், உடுக்கை களையும் பெண்ணின் இடுப்புக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் இது அதற்கும் சின்னதாக...


இது ஒன்றும் தமாசு கிடையாது...

உலக அளவில் இத்துனுன்டு இடை கொண்ட அம்மணி இவுகதான்

பேரு கேத்தி ஜுங்


ஆச்சரியமா இருக்கா? பெருமூச்சு விடாதிஙப்பா.

...
வயிறுக்குமேல் வயிறு வளர்க்கும் மனித வாசிகளே!


ஜிம்முக்கு போறேனு உடால்விட்டுட்டு பலமடங்கு அதை பெருக்கும் பாவப்பட்ட ஜென்மங்களே


இவுக இடுப்ப பாருங்க..

..பிறகு உங்க வயிற்றை குறையுங்க
அம்மணியோட ஐடி தெரிஞ்சா மெயில் அனுப்பி உடம்பைக்குறைக்கும் டிப்ஸ் கேளுங்கப்போய்ய்ய்ய்ய்ய்ய்

இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா?

Friday, March 01, 2013



அண்மைக்காலமாக face bookஇல் அதிகமாக பேசப்பட்ட விமர்சனத்திற்கு உள்ளன புகைப்படங்கள்தான் இவை ...face book அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக அரசியலில் நடைபெறும் கூத்துக்கள் ,சினிமா விமர்சனங்கள் ,நடிகர்கள் நடிகைகளை பற்றிய கிசு கிசுக்கள் ,சாமியார்களின் விடயங்கள் என சகல விடயங்களுக்கும் பத்திரிகைதான் கேலி சித்திரங்கள் வரைந்து அவற்றை பற்றி கடுமையான விமர்சனம் செய்வார்கள் அதன் பின்புதான் நமக்கு உண்மை புலப்படும் ..

ஆனால் தற்பொழுது உலக அளவில் பயங்கர ஆயுதமான மீடிய துறையாகவும் பரிணமித்திருக்கிறது face book இதனால் எதாவது குளறுபடிகள் நடந்தால் முதலில் சாட்டையடி விழும் இடமாக face book காணப்படுகின்றது ..உதாரணமாக நமது சாமியார் இருக்கின்றார் அல்லவா அட அதுதாங்க நம்ம நித்தியானந்தா ...அவர் மதுரை ஆதினமாக தெரிவு செய்யப்பட்டார் என்பது உங்களுக்கே தெரியும் ..அவர் தெரிவு செய்யப்பட்டதும் ...face book அவரை படாத பாடு படுத்திவிட்டது ...

இதை விட நம்ம பவர் ஸ்டார் பற்றிய அரிய விடயங்கள் ,why this kolavery பாடலை பிரபலப்படுத்தியது(((தனுஷ் சச்சினுக்கு ஒரு பாடல் அமைத்திருந்தார் அதில் ஒன்றை ஆரம்பத்தில் அவதானித்தேன் total viewers 1500 என்று இருந்தது

ஆனால் லைக் 2500 dislike 500 என்று இருந்தது முழுமையாகப் பார்த்தவர்களே 1500 பேர்தான் ஆனால் 3000 பேர் like ,dislike செய்திருக்கிறார்கள் இது எப்படி சத்தியம் என்று எனக்கு புரியவில்லை இதுவே அவரது கொலவெறி யிலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கம் தரவும் )))போன்ற பல விடயங்களை face book தனக்கே உரிய பாணியில் வெளிக்காட்டி உள்ளது ..இத்தனை சாத்தியப்படுவதற்கு முக்கிய காரணம் ஒரு செய்தியை ஆதரிப்பதற்கும் நிராகரிப்பதற்கும் விமர்சிப்பதற்குமான வசதிகள் face bookஇல் இருப்பதுதான் மற்றைய பாரம்பரிய ஊடகத்துறையில் இவ்வாறு நமது கருத்துக்களை உடனுக்குடன் தெரிவிப்பது சாத்தியமற்றது ..

இதனால் ஒரு தனி மனிதன் முன்வந்து தனது கருத்துக்களை பலர்முன்னிலையில் முன்வைக்க வழி செய்துள்ளது உதாரணமாக ஒருவர் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு உடனடியாகவே விமர்சனத்தை தனது face book சுவரில் எழுதிவிடமுடியும் இது face book இன் முக்கிய பலமாகும் ..இவ்வாறு face bookஇல் விமர்சனத்திற்கு உள்ளான நொந்து நூடில்ஸ் ஆன புகைப்படங்கள் இதோ