வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

தூக்குதண்டனையை எதிர்க்கும் கமல்!

Thursday, January 31, 2013





கமல் அய்யா சொல்வதை பார்த்திங்களா?
அவர் பார்வையில்....
தான் அணிந்திருக்கும் ஜட்டியை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என நினைத்து ஆபாசமாய் நடிப்பது குற்றமில்லை..

உதாரணம்:குருதிபுனல் பட சீன்(தமிழ் படத்தை ஹாலிவுட்டிற்கு உயர்த்துகிறாராம்!)

தேசத்தந்தை காந்தியை கொன்றது யார் என்ற உண்மையை வெட்டவெளிச்சமாக்கிய ஹேராம் படத்தில்கூட   உடலுறவு காட்சிகளை இணைப்பது தவறில்லை..

திருமணம் செய்யாமலேயே நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பது குற்றமில்லை...

மரண தண்டனை தவறு என்றால்???

டெல்லியில் கற்பழிப்பு செய்தவனுக்கு பாராட்டுவிழா நடத்தலாமா?

ஒரு குற்றத்திற்கு மற்றொரு குற்றம் தீர்வல்ல அப்படி என்றால் மாலை அணிவித்து மரியாதை செய்தால் தகுமா.. யார் ஒரோவர் அப்படி கூறுகிறாரோ அவர்களது குடும்பத்தில் இப்படி ஒரு கேவலம் நடந்தால் இப்படி தான் பேசுவார்களா.. இந்த குற்றத்திற்கு கொடூரமான தண்டனை இல்லாததால் தான் நம் நாடெங்கும் இந்த அசிங்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது..தண்டனை குடுக்காமல் நாமே அது தொடர்ந்து நடக்க காரணமாக கூடாது... குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க கூடாது என்று சொல்பவரும் குற்றவாளிகள் தான்...

கமலா இப்படி பேசுவது...??? சினிமாத்துறையில் ஓரளவு அறிவும், சிந்திக்கும் திறனும் கொண்ட கமலா இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது. குற்றம் புரிந்தவனுக்கு தரும் தண்டனை எப்படி குற்றமாகும். தண்டனை என்பது மற்றவர்கள் குற்றம் செய்யாமல் தடுக்க, அடுத்தவரை குற்றம் செய்யாமல் எச்சரிக்க வைக்கும் ஒரு செயல். இந்த 5 கயவனுக்கும் தூக்கு தண்டனை கொடுத்தால் தான் குற்றம் செய்ய நினைப்பவனுக்கு பயமிருக்கும். அதைவிட்டு தண்டனை கொடுப்பதும் ஒரு குற்றம் என்று பிதற்றினால் எப்படி பயம் வரும். என் சகோதரி என்று வார்த்தைக்கு சொன்னால் போதாது.. உண்மையிலேயே சகோதரியாக நினைத்தால் இப்படி ஒரு வார்த்தை வராது. சகோதரர் மோகன் அவர்களே, இதுபோல் குற்றம் செய்தால் கடுமையான தண்டனை என்பது நிரூபனமானால் எப்படி 1000 பேர் குற்றம் புரிவான். தயவுசெய்து சிந்தியுங்கள்.. இந்த வெறி நாய்களை மக்கள் முன்னில் தூக்கிலிட்டு, அதை அனைத்து மீடியாக்களும் மக்களுக்கு கொண்டு சென்றால் தான், குற்றத்தின் சதவீதமேனும் குறையும், அதைவிடுத்து முற்போக்காக சிந்திக்கிறேன்... வித்தியாசமாக கருத்து சொல்கிறேன் என்று எதையாவது உளறினால்... நாளை நிஜமாகவே நம் சொந்த சகோதரிக்கும் இந்த நிலை
வரும்

தூக்கு தண்டனை என்பது சட்டரீதியான கொலை என்றால், லத்திசார்ஜ்&கண்ணீர் புகை இதெல்லாம் சட்டரீதியான வன்முறை என சொல்லலாமா? தண்டனைகள் எப்போதுமே பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையில் இருந்து பார்க்கவேண்டும். தண்டனை கொலையாகவே இருந்துவிட்டு போகட்டுமே அதில் என்ன தப்புன்றேன். சில நேரங்களில் கமல் முற்போக்காக சிந்திக்கிறேன் பேர்வழினு பிற்போக்குத்தனமான விஷயங்களை சொல்கிறார். சும்ம என் தங்கச்சி, என் தம்பிகள்னு டயலாக் விடுறதுக்கு இது ஒன்னும் திரைப்படம் இல்லை. கொடுத்து பார் தூக்குதண்டை குற்றங்கள் குறையுதா இல்லையானு!!




இந்திய நாட்டின் தலைநகர் டில்லியில் கடந்த 16-ஆம் தேதி இரவு, ஓடும் பஸ்ஸில் ஒரு மருத்துவ கல்லூரி மாணவியை ஆறுபேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு நிலையை உருவாக்கியுள்ளது. நாடு முழுவதும் குறிப்பாக டில்லியில் அதிகமாக நடக்கும் பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து சமீபத்தில் இயக்குனர் அமீர் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து கேரள மாநிலம் கொச்சியில் நடந்த விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


பாலியல் பலாத்கார சம்பவம் பற்றி பேசிய கமல் “ டில்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவம் அவமானத்திற்குரிய செயல். ஆனால் இந்த தவறுக்கு தூக்கு தண்டனை தீர்வாகாது. ஒரு குற்றத்திற்கு மற்றொரு குற்றம் தீர்வு இல்லை. தூக்குதண்டனையை சட்டரீதியான கொலை என்றும் சொல்லலாம். தூக்கு தண்டனை வேண்டாம் என்று சொல்வதால் இந்த கொடூரமான குற்றத்தை நினைத்து நான் வருந்தவில்லை என அர்த்தம் கிடையாது.

சம்பவம் நடந்தது என்னுடைய பேருந்து. நடந்த இடம் எனது தலைநகரம். பாதிக்கப்பட்ட பெண் என் சகோதரி. தவறைச் செய்தவர்கள் என் சகோதரர்கள். இதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்” என்று கூறினார். தலைநகர் டில்லியில் பாலியல் பலாத்கார சம்பவத்தை எதிர்த்து பொதுமக்களும் வீதிகளில் இறங்கி போராடத்துவங்கிவிட்டதால் டில்லி முழுவதும் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த பள்ளி மாணவி புனிதாவின் பாலியல் பலாத்கார கொலையையும், டில்லி சம்பவத்தையும் கண்டித்து சென்னையிலும் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் திரையுலக நட்சத்திரங்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

இளையராஜாவுடன் வைரமுத்து டூ ஏன்?


இளையராஜா-வைரமுத்து நட்பு உடைந்து போனதற்கு பல காரணங்கள் உண்டு.


ஆனால் அதில் ஒன்றை இரண்டை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ஒன்று பாடல்களின் காப்பிரைட் பிரச்சனை...

மற்றொன்றை பற்றி இங்கே விளக்கமாக பார்க்கலாம்..

அது பாடலின் வரிகளில் ராஜாவின் குறிக்கீடு

இவை நான் சொந்தமாக ஊகித்து எழுதியவை இல்லை

தான் எழுதிய புத்தகம் ஒன்றில் வைரமுத்து வருத்தத்துடன் குறிப்பிட்டவை இவை...


பயணங்கள் முடிவதில்லை படத்தில் "இளைய நிலா"எனும் பாடல்

அது ஆரம்பத்தில்..
"சலவை நிலா பொழிகிறது
இதயம் வரை நனைகிறது"என்றுதான் வைரமுத்து எழுதினார்...

நிலாவின் களங்கத்தை தனது பாடலில் கழுவ நினத்ததை அவர் குறிப்பிடுகிறார்...

ஆனால் ராஜா எதார்த்தவாதி....

அவர் கவிதை வரிகளுக்கு கடிவாளம் போட்டார்..

அவர் இயர்க்கையான விசயத்தையே விரும்பினார்..எனவே அப்பாடலில் தலையிட்டு அதை மாற்றியமைத்தார்..பிறகே

"இளைய நிலா பொழிகிறது
இதயம் வரை நனைகிறது"

என்ற வரிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது..

அதே போலவே "அந்திமழை பொழிகிறது "பாடலிலும்

ஆரம்பத்தில்
"திராட்ச்சைமது வழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் "என்றே வைரமுத்து எழுதினார்..

அந்தோ பரிதாபம்!

ராஜாவால் அது அந்திமழை என்ற எதார்த்த வரிகளால் திருத்தியமைக்கப்பட்டது..

ஆனாலும் ராஜாவின் மீதான வைரமுத்துவின் மரியாதை குறைந்துவிட வில்லை....கலைஞன் அல்லவா?






இளையராஜாவை பிரிந்த பிறகு வைரமுத்து எழுதிய இந்த பிரிவுக்கடிதத்தை(இந்தக்குளத்தில் கல் எறிந்தவர்கள்) படித்தால் அவர்களின் நட்பும், பிரிவின் கனமும் புரியும்.   அவர்கள் இணைய மாட்டார்களா என்று தவிக்கும் ரசிகர்களின் தாகமும் புரியும்.

"இசை ஞானியே!
என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.
என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!

உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.
கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான
நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.


மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன்
நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.



திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.
மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.

பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.
நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.

ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.
பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே
நேசிக்கிறேன்.
 
நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.

என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.
உன்னை நானும் பார்க்கிறேன்.
தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.
வார்த்தை துடிக்கிறது;
வைராக்கியம் தடுக்கிறது;
வந்துவிட்டேன்.




அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.
உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.

ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.
இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.

என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.

நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.
ஒரு கணம் திகைத்தேன்.

வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.
பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.


நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.
சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.


நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.

உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை
நினைத்தேன்.

‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே
புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.

அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.



எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.
இருக்காதே என்று நினைக்கிறேன்.
பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.
உன் அறிக்கைதான்.

ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.
படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.

உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!
உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!
காரணமே இல்லையே.

இது இருதயத்திற்கு ஆகாதே.

நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.

ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.

இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.

நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!
இப்போது சொல்கிறேன்.

உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.

உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.

உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.
நான் கொதித்தேன்.

"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச்
சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.

மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.
நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.

இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.



நீயும் நானும் சேர வேண்டுமாம்.
சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.
உனக்கு ஞாபகமிருக்கிறதா?

‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ
துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.

மழை வந்தது.
நின்று விட்டேன்.

என்னை நீ பிடித்து விட்டாய்.
அப்போது சேர்ந்து விட்டோம்.

ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.
இப்போது முடியுமா?

இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?"

சகோதரிகளே ஜாக்கிரதை!

Friday, January 25, 2013

 

சாதரணமாய் பெண்களில் சிலர் குளிக்கும்போதோ,பொது இடங்களில் உடை மாற்றும்போதோ தன்னை சுற்றி என்ன இருக்கிறது என்பதை கவனிப்பதே இல்லை...

அவர்களுக்கான அபாய எச்சரிக்கை இது!

நடிகைகளைத்தான் இப்படி வேவு பார்க்கிறார்கள் என்று இல்லை.பொது இடங்களில் கூட இப்படி நடக்கிறது!

உஷார்!



கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை. இன்னொரு வகை நாம் பார்க்கும் போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறு பக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும்.

இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும்.

இவைகளை சுலபமாக கண்டறியும் முறை…


314621_512238282143911_890017348_n

உங்கள் விரல் நுனியை கொண்டு கண்ணாடியை தொடும்போது சிறு இடைவேளை தெரிந்தால் அது சாதாரண கண்ணாடி.. இடைவேளை இல்லாமல் தெரிந்தால் அது உங்களை வேவுபார்க்கும் கண்ணாடி என்று அறிந்துகொள்ளலாம்.




சினிமா- சிறுகதை





இப்போதல்லாம் சினிமா பார்ப்பதே வெறுத்துவிட்டது..


ஒரு முத்தக்காட்சி,ஒரு ரேப் சீன்,ஆறு பாட்டு..இதுதான் இன்றைய சினிமா..


எத்தனைதடவை அடி வாங்கினாலும் கடைசியில் ஹீரோதான் ஜெயிப்பார்


கோழிகளை தோலுரித்து கடைசியில் அதன்மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் மெல்லிய தோல்போல் சினிமா எனும்போர்வையில் இரண்டரை மணி நேர ஃபேசன் சோ


ஒருவேளை நாகரீகம் என்றால் இதுதானோ?

ஒன்றின் சுருக்கம் என்பதுதானே நாகரீகம்!

பண்டைய காலங்களில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு மாட்டு வண்டிலதான் போகனும்...ஆனால் இன்றைக்கு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு போக மணி கணக்குதான்..சொ விமானம் என்பது பயணத்தின் நாகரீகம்..

அரசர் காலத்தில்  மற்ற நாட்டிற்கு விபரம் தெரியபடுத்த பயன்படுத்தியது சிப்பாய்களையும் புறாக்களையும்..இன்றோ நிமிசத்தில் பல மின்னஞ்சல்கள்!..மின்னஞ்சல் என்பது கடிதத்தின் நாகரீகம்...

அதுபோல..அதுபோல...

ஆடை குறைப்பும் உடையின் நாகரீகமோ?.??



எந்த டைரக்டராவது நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்!  ஒரு படமாவது கவர்ச்சி இல்லாமல்....ஊஹூம்!

இருக்கிறது...ஏழை வீட்டில் சாப்பிட்ட பாயாசம்போல் ஒன்றோ?இரண்டோ?



இப்படியே போனால்...

இனி திருட்டுத்தனமாக தலையில் முக்காடு போட்டுக்கொண்டு..கொலை செய்தவன்போல் பயந்து பயந்து "அந்தமாதுரி"படங்களுக்கு போக தேவையில்லை...சாதரணமாக எல்லா திரையரஙகளிலும் பார்க்கலாம்...

சரிதானே?




க்ளைமாக்ஸ்..வில்லனோடு ஹீரோ மோதல்..கடைசியில் கைவிலங்கோடு வரும் போலிஸ்..இன்னும்விடாத பழைய சினிமாத்தனம்


"எவ்விடத்தில் கண்முழித்தோம் அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு"பாலுணர்வை தூண்டும் இதைவிட கேவலமான வரிகள் கொண்ட இரண்டு பாட்டு....

வேறு ஏதாவது வித்தியாசமாய் ஏதும்??ஊஹும்.....




நிற்க!





து 30ஆம் நூற்றாண்டு...

 டைரக்டர் வசந்தகுமாரும்,ப்ரொட்யூசர் ரகுரத்தினமும் போர்டிக்கோவிற்கு வேளியே இருந்த புல்வெளியில் பேசிக்கொண்டிருந்தனர் .

 "அடுத்த மாதம் இரண்டாம் தேதி படம் ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கிறேன்...படுத்துல இரண்டு ரேப் சீன் இருக்கு.அப்புறம் ஒரு பாட்டு சீன்ல சில பழைய படம்போல் ஹீரோயினுக்கும் ஹீரோவுக்கும் போட்டிவருது..பழைய படங்களில் பாட்டின் முடிவில் ஹீரொ சட்டையை கழற்றி தூரவீசுவார்..ஹீரோயின் அதை செய்யமுடியாமல் தோற்றுபோவார்.."


 "இந்த படுத்துல புதுமையா என்ன இருக்கு சார்?"


 "இதுல ஹீரோ தன்னோட சட்டையை கழற்றுவார்.பிறகு ஹீரோயினும் சட்டையை கழற்றி எறிவார்"

 "என்ன சார் சொல்றீங்க?இதுக்கு மாதர் சஙத்தில் இருந்து எதிர்ப்பு வராதா?"


 "யோவ்!எந்த காலத்துலையா நீ இருக்க?20ஆம் நூற்றாண்டு காலத்து படத்துல..எனக்கு நல்லா நினைவு இருக்கு..சின்னஜமீன் அப்படீனு ஒரு படம்..அதுல ஹீரோயின வில்லன் 15 நிமிசம் கற்பழிக்கிற மாதுரி சீன் வரும்..இதுல க்ளோஸ் அப் காட்சி வேறு...அப்பல்லாம் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்குற சீனே ரொம்ப சாதாரணமா போச்சு...அதுக்கே அவங்க ஒன்றும் சொல்லவில்லை..நீயே போதும்போல"

 "சரி அப்புறம்?"

 "ஹீரோயின் சட்டையை கழற்றி எறிந்த உடனையே ஹீரோ ஒரு படி மேலே போய் உள்ளாடை எல்லாம் கழற்றி எறிவாரு.அப்புறம்தான் ஹீரோயின் வெட்கப்பட்டு தோற்பது போல் சீன் இருக்கு"

 "அதுவும் சரிதான்..ஆ..ஊன்னா...எல்லா படத்துலேயும் ஆண்கள் சாதிக்கிற எல்லாத்தையும் பெண்கள் சாதிக்கமுடியுமானு கேட்குறதும்,ஹீரோயின் முடியும்னு சொல்லவும் ஹீரோ சட்டையை கழற்றி நான் ரோட்டுல இப்படி போவேன் நீ போவியானு கேட்பதும் வாடிக்கையா போச்சு...அவங்களுக்கு இந்த படம் ஒரு சவுக்கடி"


 "அதெல்லாம் சர்தான்யா!இரண்டு ரேப் சீன் இருக்கு அத சென்சார் கைவச்சுட்டா எனக்கு வசூல் போச்சு"


 "இதுக்கா போய் வருத்த படுறீங்க?எப்படி புகை புடிக்கிற சீன் வரும்போது "புகைபிடிப்பது உடல்நலத்திற்கு கெடுதியானதுனு" ஒரு சின்ன ஸ்லைடு வருமோ அதுபோல இதையும் "கற்பழிப்பு ஜனநாயகத்திற்கு கேடுனு" ஒரு ஸ்லைடு போட்டா முடிஞ்சி போச்சு.என்ன நான் சொல்றது?"


வசந்தகுமார் சொல்ற ஐடியாவும் நல்லாதானே இருக்கு என்ற சந்தோசத்தில் ஒரு சிகரட் எடுத்து தன்வாயில் வைத்தபடியே தன் படத்தின் வெள்ளிவிழா  கனவில்மூழ்கிப்போனார் ரகுரத்தினம்.

மேக்கப் இல்லாத நடிகைகள்...கொடுமைடா சாமி

Friday, January 18, 2013


என் நண்பர்கள் சொல்லுவார்கள்....

"நடிகைகள் படத்தில்தான்டா அழகா இருக்காங்க...நேர்ல சரியான மொக்கையா இருப்பாங்க மச்சான்னு"

இந்த படங்களை பார்த்துவிட்டு நம்பாமல் என்ன செய்வதாம்?



Bollywood Actress Without Makeup Photos Pics Wallpapers amp Images event pictures



Bollywood Actress Without Makeup Photos Pics Wallpapers amp Images function pics



Bollywood Actress Without Makeup Photos Pics Wallpapers amp Images wallpapers


Bollywood Actress Without Makeup Photos Pics Wallpapers amp Images show stills

Bollywood Actress Without Makeup Photos Pics Wallpapers amp Images release images


Bollywood Actress Without Makeup Photos Pics Wallpapers amp Images leaked images









ஏழைகள்தான் சொர்க்கத்திற்கு போவார்களா?




இதை படித்தவுடன் சிலருக்கு கோபம் வரலாம்..ஆச்சரியம் வரலாம்..

இரண்டுக்கும் நானே பொறுப்பு!

நபிகள் நாயகம் ஒருமுறை"நான் சொர்கத்தில் அதிகமாய் இருப்பவர்களாய் ஏழைகளை பார்த்தேன்"என கூறியதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன..

இது இஸ்லாமியர்கள் ஆகிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று...

அதென்ன?ஏழைகளிடம்மட்டும் அப்படி என்ன ஸ்பெஸல்?

சத்தியமாக இருக்கிறது...எனக்குத்தெரிந்த ஒரு விசயத்தால் அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்..




தர்மம் செய்தல் என்ற விசயத்திற்கு வருவோம்...

ஒரு ஏழை மாதம் 1000 சம்பாதிக்கிறார் என கொள்வோம்..

அவர் அதில் 2 சதவீதம் தர்மம் செய்ய நினைக்கிறார்..அவர் 200 ருபாய் தர்மம் செய்தால் தன் கடமையை நிறைவெற்றி விட்டார்...
அதற்கு மேல் தர்மம் செய்தால் அவர் மேலும் நன்மையை சம்பாதித்துக்கொண்டே போகிறார்...

ஒரு பணக்காரர் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறார்..அவர் 2 சதவீதம் தர்மம் செய்ய வேண்டுமானால் ஒரு லட்சத்திற்கு இரண்டு சதவீதம் 2000 கொடுத்தாகவேண்டும்.

அவர் கணக்கு போட்டு சரியாக கொடுத்துவிட்டால் பிரச்சனை இல்லை...

இப்போது யதார்த்த நிலைக்கு வருவோம்...

ஒருவர் பிச்சை கேட்க்கும்போது மேலே கூறிய ஏழை 200 கொடுக்கிறார்.

அவர் தன் கடமையை நிறைவேற்றி நன்மையை சம்பாதித்து விட்டார்..

அதே நபர் பணக்காரரிடம் பிச்சை கேட்க்கும்போது அவர் இதை பார்த்துவிட்டு கூடுதலாம் 300 சேர்த்து 500 கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம்!

இப்போது சொல்லுங்கள்..அதிகம் நனமையை சம்பாதித்தது,தன் கடமையை சரிவர நிறைவேற்றியது யார்?

ஏழையா?பணக்காரரா?

ஏழைக்கு 200 ருபா ய்  கொடுப்பதற்கு கஸ்டம் என்றாலும் அவர் மறுமை வாழ்விற்க்காக அதை செய்கிறார் ..அதர்க்கு சாத்தியமும் அதிகம்...

இதே பணக்காரர் அதே நன்மை அடைய வேண்டுமானால் 2000 கொடுத்தாக வேண்டும்...

அவர் அதே 200 ஐ கொடுத்தாலோ அல்லது ஏழையை விட அதிகம் தர்மம் செய்வதாய் நினைத்துக்கொண்டு 500 ஐ கொடுத்தாலும் ஏழை பெறுகிற நன்மையை இவர் பெறவில்லை என்பது நமக்கு தெளிவாகும்..

இது ஒரு விசயம்...

பணம் அதிகம் இருக்கும்போது...இவ்வுலக வாழ்க்கைக்காக அதை செலவு செய்யவும்,தவறுகள் செய்யவும் வாய்ப்புகள் அதிகம்..

ஆனால் ஏழைக்கு அப்படி இல்ல..
நோன்பு வைத்து சாதாரண ஒரு மனிதன் அடையும் நன்மையை சோற்றுக்கு வழியில்லாத ஒரு ஏழை ஒரு சிறிய நன்மை செய்தால் அடைந்துவிடலாம்...

எனவே நன்மைகள் அதிகம் சம்பாதிக்க இதுபோல பல விடயங்களில் பணக்காரரைவிட ஏழைக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதே என் வாதம்..

இது என் ஊகமே தவிர வேறொன்றும் இல்லை...


மெல்ல மெல்ல சாவு





அந்த கண்மை இருட்டு...

நட்சத்திரங்களை காவலுக்கு வைத்துவிட்டு நிலா ராணி ரகசியமாய் ஓய்வெடுக்கும் தனிமையான் நேரம்

நிசப்தம்....

டிக்...டிக்...டிக்....

ரகுநாத்தின் கைக்கடிகார சத்தமும்,காலடி சத்தமும் அவனுக்கே பயத்தை உண்டாக்கும்..

அவனுக்கோ பயம் இல்லை..மனம் முழுவதும் காளிதாஸை கொலை செய்யும் எண்ணம் மட்டும் வியாபித்திருந்தது

என்னையா ஏமாற்றுகிறாய்?பிசினஸில் லாபத்தில் பாதி தருவேன் என்று சொன்னவன்...இன்று ஆகோ ஓகோ என்ற நிலையில் அரசியல்வாதியாய் வார்த்தை தவறி விட்டான்.....நானும் அந்த பைத்தியக்கார ஏமாளி மக்களில் ஒருவந்தான் என்றாலும் அவர்களை போல் இல்லை.


நயவஞ்சகர்களை கசாப் கடைக்கு காவு கொடுக்க வேண்டும்..அவர்கள் இரத்தத்தில் தாகம் தணிக்கலாம் என நினைப்பவன் நான்..

இதோ வந்து விட்டேன்....இன்னும் சில நிமிடங்கள்தான்...

உன் நரம்புகளில் நூடுல்ஸ் சாப்பிடும் சமயம் வந்து விட்டது...

நீ சாகும்போது உனக்கு எதிரே உள்ள ஏதோ ஒன்றை வெறிக்க பார்த்தவாறே கண் திறந்த நிலையில்  சாக வேண்டும்...

இதோ இன்னும் கொஞ்ச நேரம்தான் அருமை எதிரியே! கொஞ்ச நேரந்தான்!

இப்போது அவன் நடையில் வீடு நெருங்க நெருங்க வேகம் கூடியது..


கை வியர்த்தது(முதல் கொலையாக இருக்கலாம்)


நிறைய சினிமா அல்லை ராஜேஸ்குமார் நாவல் படித்திருப்பான் போல...


அவன் அறையை குறுக்கு வழியில் வந்தடைந்தான்...

இதோ தர்மத்தின் கனவு முதல் முறையாக பலிக்கபோகிறது..

சுதந்திரத்திற்கு பின் காணாமல் போன நீதிதேவதை சுற்றுலா முடிந்துவிட்டு தீர்பளிக்க திரும்ப வருகிறாள்!

கதவை ஓசை இல்லாமல் திறந்தான்...

டிக் ..டிக்...டிக்....

 துப்பறியும் அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவ கையுறை அணிந்தான்..

செத்து போடா நாயே! கொஞ்சம் கொஞ்சமாய் செத்து போ!

தூக்கில் போடுவதுபோல் சில நொடிகளில் போய்விடாதே...

காளிதாஸை நெருங்கினான்...கழுத்துப்பகுதியை குறிவைத்து கத்தியை ஓங்கிய சமயத்தில் வெளியே....



குநாத்திற்கு பயங்கர கோபம்...கோபத்தில் கையிலிருந்த ராஜேஸ்குமார் நாவலை தூக்கி தூரமாய் வீசி எறிந்தான்...

காரணம்....

நாவலின் அடுத்த பக்கம் காணவில்லை...மார்க்கெட்டில் பத்து ருபாய்க்கு நாலுனு வாங்கினால் இப்படித்தான் இருக்கும்...

பார்த்து வாங்க வேண்டாமா?சொன்னது அவன் மனசாட்சி இல்லை

விசயம் தெரிந்த அவள் மனைவி சுகுனா

ஆனால்...ஆனால்...

கிழிக்கப்பட்ட பகுதி அவள் மகள் கீர்த்தனாவல் கப்பலாய் உருப்பெற்று சேற்றில் மிதந்து கொண்டிருந்தது வெளியே....




கற்பழிக்கும் ஆசை வருமா???




இந்த விடியோவை பார்த்தால் ஒருத்தனாவது திருந்த மாட்டானா என்கிற நப்பாசைதாங்க...

இது சாத்தியமா?சத்தியமா எனக்கு சொல்லத் தெரியல...

ஆனா இந்த விசயத்துல மட்டும் தசவதாரம் படத்தில் கமல் சொல்ற டயலாக்கை யூஸ் பண்ணலாம்னு நினச்சேங்கோ...

"கடவுல் இருக்காரா?இல்லையானு தெரியாது..இருந்தா நல்லா இருக்கும்"

நான் என்ன சொல்ல வாறேன்னா....

இந்த வீடியோ உண்மையா பொய்யா தெரியாது..உண்மையா இருந்தா நல்லா இருக்கும்....

அப்பதான் என் தாத்தா சொன்ன மாதுரி "உண்மையான சுதந்திரம் என்பது ஒரு பெண் இரவு பத்து மணிக்கு தன்னந்தனியாக போகும் நிலை"என்பது உண்மையாகும்...

சரிதானே?

பிரியமானவளே....

Friday, January 11, 2013




என் வாலிபம் விலைபோனது
நீ சிரித்தபோது சிதறிய
சில்லறைகளுக்கு...

நீ என்னுள் நிரம்பியவேளை
சிந்தியது
என் கவிதைகள் அனைத்தும்...


என் நினைவுகளில்
நான் மறக்காமலிருப்பது சிலர் மட்டும்
நினைவுகளே மறக்காமலிருப்பது
உன்னைமட்டுந்தான் தங்கமே!


உன் நினைவெனும் சிகரத்தின் உச்சியில்
நானிருக்கிறேன்..
இப்போது சிகரத்திலிருந்து தவறினால் மரணம்


எனக்கான காதலை ஏன்
மறைக்கிறாய்?
காதல் என்ன பூகம்பமா?
முன்னதாகவே தெரிவிக்க
முடியாதென்கிறாய்?


மேகங்கள் முழுதும்
மழை இருந்தும் பெய்யாதிருப்பது இயற்கை
உன் இதயம் முழுதும் காதலிருந்தும்
சொல்லாதிருப்பது செயற்கை


தாமதமானாலும்
தயவுசெய்து விருப்பம் சொல்லிவிடு
இல்லையென்றால் நீயெவந்தெனை
கொள்ளியிடு


சூரியன் முன்னதாகவே உதித்து
காத்திருந்தாலும்
தாமதமாய்தானே
தாமரை மலர்கிறது!

துக்கமும் தூக்கமும்
சேர்ந்தே உன்னை மறக்கமுயற்சித்து
சோர்ந்து போயின


எப்படி முடியும்?
நான் உன்னை என் இதயத்தில்
பச்சை குத்திக்கொண்டவன்


நீ என் இருதய பிரதேசத்தில்
சிதறிய பாதரசம்
ஆகவே உன்னை மறப்பது
மரணத்திற்கு பிறகுதான்.

2013 ல் உலகம் அழியபோகிறதா?








புலி வருது..புலி வருது கதை எல்லோருக்கும் தெரியும் தானே?அதுதான் இது....

நான் சின்னபிள்ளையாக இருக்கும்போதே நடந்துகொண்டிருக்கும் மாயத்தீவு கதை இது...

சூரியனுக்கு பாதி வயதாகிவிட்டது என்பது உண்மை...ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்தது உண்மை...அதிக வெப்பத்தால் பனி உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருப்பது உண்மை...ஆனால் இந்த அழியப்போகிறது..அதோ அழியப்போகிறது என்பது(வாரான் வாரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே) க்ரீன் பொய்.
 தனக்கு தாலாட்ட தொட்டில் கட்டிய பூமிக்கு மனிதர்கள் கற்பனையாக கல்லறை கட்ட ஆசை படுகிறார்கள்!

ஏதோ மாயன் காலண்டராம்!அப்படி இப்படி என நிலாபாட்டி கதை சொல்கிறார்கள்(நிலாவை இப்போது பார்த்தாலும் அதன் கறை பாட்டியாகத்தான் நினைவுக்கு வருகிறது...காலக்கொடுமைய பாருங்க சார்!)



காமாலை உள்ளவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாகத்தெரியுமாம்...

சுனாமி,பூகம்பம் இவற்றை கண்டு இவர்களுக்கு லூஸ்(loose)மோசன் போய்விட்டதோ என்னவோ?





இதுல ஒரு பெரிய கொடுமை என்னவென்றால் உலகம் அழிந்து மூன்றுநாள் கழித்துதான் ஆஸ்ட்ரேலியா அழியுமாம்(இது எப்படி இருக்கு?)

உலகத்தோட நாட்டாமை என உளறி கொண்டிருக்கும் நாசாமா போன நாசாவே!

உங்க கைய காலா நினைச்சி கேட்கிறேன்(காலவாரி விடத்தான்)

நீங்க பொய் சொல்றத எப்ப ஸ்டாப் பண்ண போறிங்க?ப்ளீஸ்....

உங்களை  நம்பி உலகம் அழியப்போகுது என்கிற பயத்தில்....

கடைசி தூக்குத்தண்டனைகைதி ஆசையில் எங்கள் நாட்டு அறியாத பெண்களும் ஆண்களும் புத்தாடை உடுத்தி,இறைச்சி எடுத்து சாப்பிட்டு,இருக்கிற நகைகள் அணிந்து..............

இன்னும்செய்த காமெடி ஏராளம்..ஏராளாம்






"மாயாக்களின் கண்டுபிடிப்புகள் பல. அவற்றில் குறிப்பிடத்தக்கது வான்கணித முறைகள். அவற்றின் அடிப்படையில் உருவானதே மாயக்களின் நாட்காட்டி. மாயாக்களின் நாட்காட்டி இரகசியம் மிகுந்ததா? “இல்லை, அது விளங்காத ஒன்று” என்றே பலரும் சொல்வார்கள்.

புரியாத ஒன்றை வைத்து பல குளறுபடிகள் செய்கிறார்கள், கணிப்புகள் செய்கிறார்கள், இறுதியில் ஏதோ ஒரு முடிவு கட்டி இது தான் அது என சொல்லிவிடுகிறார்கள், எல்லாம் பிசகு, பொய் புரட்டு நிறைந்து கிடக்கிறது, என சிலர் அவற்றை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். சில பழமை நிகழ்வுக்கான காரணங்களைக் கண்டறிவதும் ஒரு சுகம் தான்."




"மாயாக்களின் நாள்காட்டியில் ஒரு விசித்திரத்தைக் கண்டார்கள் ஆய்வாளர்கள். அந்த நாள்காட்டி 21 டிசம்பர் 2012-ஆம் ஆண்டு நிறைவடைகிறது. கி.மு 3113-ஆம் ஆண்டு அந்நாள்காட்டி தொடக்க ஆண்டாக அமைகிறது. இது முழுமை பெறாத நாள்காட்டியா? அல்லது மாயாக்களின் மறுபட்ட கணிப்பு முறையில் கண்டறியப்பட்டவையா?

அது என்ன மாயாக்களின் கணக்கு? அவர்களின் கணித முறை இப்படி விரிகிறது.
கின், உனியல், துன், கதுன், பக்துன், பிக்துன், கலப்துன்.

நாள் என்பதை அவர்கள் கின் எனக் குறிக்கிறார்கள்.
19 கின் (19 நாள்)= 1 உனியல்
359 நாள் = 1 துன்
7200 நாள் = 1 கதுன்
144 002 நாள் = 1 பக்துன்
1 872 025 நாள் = 13 பக்துன்
2 880 025 நாள் = 1 பிக்துன்
57 600 025 நாள் = 1 கலப்துன்

இந்த கணக்கியல் முறை இப்படி வியப்பளிப்பதாக இருக்கலாம். மாயாக்களின் நாள்காட்டி இயற்கை மாற்றங்கள் மற்றும் சீற்றங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இவையாவும் இரு முக்கிய புத்தகங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அப்புத்தகங்கள் ‘கொடெக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. கொடெக்ஸ் பூமியை மட்டுமன்றி கோள் மாற்றங்களின் குறிப்புகளும் உள்ளடங்கியது. கோடெக்ஸ் வான் நிபுண மாயாக்களால் எழுதப்பட்டதாக அறியமுடிகிறது.

மாயா வகுப்பை சேர்ந்த வான் நிபுணர்கள் மாய மந்திர வேலைகள் கைதேர்ந்தவர்கள். அப்படியானால் இந்நாள்காட்டியின் நம்பகத்தன்மை எவ்வகையது எனும் கேள்வி நம்முள் எழுவது சாத்தியமாகிறது. ஆரம்ப கால வாழ்க்கையில் மனிதன் ஏதோ ஒரு வகையில் இயற்கையை சார்ந்தே வாழ்ந்திருக்கிறான். ஆதாலால் இயற்கையை போற்றும் வண்ணம் இம்மாதிரியான மாய மந்திர வேலைகள் ஏற்பட்டிருக்கலாம்.



கோடெக்ஸ், கணிதமும் சிறு சிறு சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும் புத்தகம். அச்சிறு சிறு எழுத்து வகைகளை ஹிரோகிலிஃப் எழுத்துகள் என அறிகிறோம். அந்த எழுத்துகள் எப்படி அமைந்திருக்கின்றன? பூமியில் உள்ள மனிதன் ஆகாயத்தில் இருக்கும் உயிரினங்களோடு தொடர்பு கொள்வது போலும், அவர்களுடைய கடவுளர்களோடு பேசுவது போலவும் உள்ளன.

இந்நாள்காட்டி கி.மு 20 செப்டம்பர் 3113-ஆம் திகதியில் தொடங்குகிறது. இக்காலகட்டம் மாயாக்களின் காலமென அழைக்கப்படுகிறது. அவர்களின் நம்பிக்கைப்படி இவ்வுலகம் புதுபிக்கப்படும். அப்படி புதுபிக்கப்படும் நாளானது மனித சரித்திரத்தில் முக்கிய நாளாக அமையும்.

கோள்களின் இட மாற்றமும் பூமியின் கால மாற்றமும் மனித வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு பாதிப்பை விளைவிற்கின்றன என்பது இவர்களின் கருத்தாகும். பூர்வ கால எகிப்திய மக்களிடையேயும் இவ்வகை நம்பிக்கை இருப்பதை நாம் காண முடிகிறது. Asy Syi’ra நட்சத்திரம் நைல் நதியை கடக்கும் வேளையில் தீமைகள் விளையும் எனும் நம்பிக்கையை கொண்டிருந்தார்கள் அவர்கள்.

21 டிசம்பர் 2012 End of Times என ஆய்வாலர்களாலும் அறிஞர்களாலும் குறிப்பிடபடுகிறது. இந்த End of Times எனும் சொல்லுக்காகன விவாதங்கள் இன்னமும் மள்ளுக்கட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. எடுத்த எடுப்பில் அதுதான் பூமியின் இறுதி நாள் என சொல்லிவிடுவோர் பலர் உண்டு. ஆனால் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் பார்வையில் அச்செற்களுக்கான ஆய்வுகள் ஆழமானவை. அவற்றில் வேடிக்கையான சில சேதிகளும் உண்டு.



பூமி சுற்றுவது நின்றுவிடும் ( கால நேர மாற்றம் இருக்காது), காலம் Pisces எனப்படும் மீனத்தில் ஒரு சுற்று முடிந்து Aquarius எனப்படும் மேஷத்தில் ஆரம்பமாகப் போகும் நாள், உலகம் வெள்ளி நூற்றாண்டில் இருந்து தங்க நூற்றாண்டிற்கு மாற்றம் காண்கிறது, அதீதமான இயற்கைச் சீற்றம் ஏற்பட்டு உலகில் மாற்றங்கள் உறுவாகும், உலகைக் காக்க கடவுளர் எழும் நாள், காலம் பின்நோக்கி நகரும், வேற்றுக் கிரக வாசிகளோடு தொடர்பு உண்டாகும் நாள்.

அத்திகதியை பற்றிய மேற்காணும் விடயங்கள் நகைப்புக்குறியவை. தமிழில் செலுத்தப்பட்ட ஆரிய கதைகளைப் போலவே மனிதர்களின் மனதில் மடத்தனத்தை உட்புகுத்துபவை.

இன்று எழுதப்படுபவனவற்றில் சில வேளைகளில் உண்மைகள் கேள்விக்குறியானதாக இருக்கிறது. 1999-ஆம் ஆண்டு முடிந்தவுடன் உலகத்தின் கதி முடிவடையும் என நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டதாக ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்கள். ஆனால் இன்றோ ஆண்டு 2009 ஆகிவிட்டது. நாஸ்ட்ராடாமஸ் சொன்னது பொய்யா இல்லை புத்தகத்தில் எழுதிய விடயம் பொய்யா?

உலக சரித்திரத்தின் அடிப்படையில் மாயாக்கள் மாய மந்திர வேலைகளில் கைதேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடபடுகிறது. திறமையான சிந்தனை வளத்தினால் அருமையான நாகரிகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதைப் போலவே அவர்களின் நாட்காட்டியும் முழுமையான நிலையில் கணிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

இந்த மாயாக்களின் ஒரு பிரிவினர் தென் மெக்சிக்கோவின் Guetmala, Belize மற்றும் Honduras போன்ற பகுதிகளில் வாழ்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வகால கட்டிடங்களும், பிரமீடுகளும், மற்றும் கோவில்களும் இங்கு இருக்கிறது.

1517-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது மாயாக்களின் கலை மற்றும் இதர தொழில்நுட்ப வேலைப்பாடுகள் பலவும் பரவலாக அழிந்து போனது. அவற்றில் முக்கியமாக மாயாக்களின் நூலகமும் அழிந்தது. அவ்வகையில் காண்போம் என்றால் இந்த நாட்காட்டியிலும் பிசகு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

Dr. Jose Argulles ஓர் அமேரிக்கர். அவர் சரித்திர ஆய்வாளர் ஆவார். Zhou Yi எனும் சீனக் குடியினரின் கணக்கியல் முறையும் மாயாக்களின் கணக்கியல் முறையும் ஒத்துப் போகிறது என்பது இவர் கருத்தாகும்.

1973-ஆம் ஆண்டு வெளிவந்த ‘The Mayan Factor’ எனும் தமது நூலில் பல விடயங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதய நிலையில் இப்பிரபஞ்சத்தில் “The Great Cycle’ எனும் மாபெரும் சுழற்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிது. அதன் கால அளவு ஏறக்குறைய 5000 ஆண்டுகள் என குறிக்கப்படுகிறது. அதன் அடிப்படியில் மாயாக்களின் கி.மு 3113 முதல் கி.பி 2012 வரையிலான நாள்காட்டி அமைந்திருக்கக் கூடும் என கருத்துரைக்கிறார்.



இந்த மாபெரும் சுழற்சி முடியும் தருவாயில் உலகில் மாறுதல்கள் உண்டாகும் சாத்தியங்கள் இருப்பதாக மாயக்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். இக்கணித முறை சிறு கூறுகளாக பிரிக்கப்பட்டு ஓவ்வொரு காலகட்டத்திற்கும் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை இருபது இருபது ஆண்டுகளாக பிறிக்கப்படுகிறது.

அக்கணித முறையின் இறுதி காலகட்டமாக கருதப்படுவது 1992 முதல் 2012 ஆண்டுகளாகும். இது மொத்தம் 20 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது. இதை ‘The Earth Regenaration Period எனக் குறிப்பிடுகிறார்கள்."





"உலகம் 2012 இல் அழியும் என பல ஊடகங்கள் பரப்புரைப்பதிலே எந்த உண்மையும் இல்லை. சூரிய தொகுதியின் கிரகங்கள் இன்னும் நான்கு பில்லியன் வருடங்களுக்கு ஆயுள் உடையவை என கண்டறியப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் எல்லா விஞ்ஞானிகளும்2012 இல் உலகத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என கூறியுள்ளனர்.

 : சுமேரியர்கள் கண்டுபிடித்த நிபிறு என்கிற கோளானது பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அந்தக் கோள் 2003 மேயில் பூமியை மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்காததால் 2012 டிசம்பரில் மோதும் என எதிர்பார்த்தார்கள். மயன்களின் நாட்காட்டியின் கால எண்ணிக்கையும் 2012 டிசம்பர் 21 உடன் முடிந்துபோகவே, அதையும் இதையும் முடித்து விட்டார்கள்.

மாயன் கலண்டரின்  முடிவு : வீதியோர சலூனில் தொங்கவிடப்பட்டுள்ள கலண்டரும்தான் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 உடன் முடிகிறது. அதற்காக உலகம் என்ன, அழிந்தா விட்டது? மறுபடி ஜனவரி 1 இல தொடங்கவில்லையா? அதுபோல மாயன் கலண்டரும் அடுத்த சுற்றாக தொடங்கும்.

டிசம்பர் 23 முதல் 25 வரை உலகமே இருண்டுவிடுமா : நாசா சொல்லியதாக இப்படி ஒரு அறிக்கை உலாவுகிறது. நாசாவோ, வேறு எந்த நிறுவனமோ இப்படி ஒரு முன்கூறலை சொல்லவில்லை. எல்லா கிரகங்களும் பூமியை மோதுவதற்கு ஏற்றாற்போல இடமாறுவதற்காக அந்த மூன்று நாட்களும் அப்படி ஒரு சூனியம் நடைபெறும் என்பதுவும் வதந்தியே. 1962 இல் ஒரு பெரிய இடப்பெயர்வு கிரகங்களிலே ஏற்பட்டது. ஆனால் அதுகூட பூமியை பாதிக்கவில்லை. ஒவ்வொரு டிசம்பர் மாதமும் பூமியும் சூரியனும் (சூரிய தொகுதியே ) பால்வீதியின் மையத்தை நோக்கி ஒரு இடப்பெயர்வை மேற்கொள்ளுகின்றன. ஆனால், அதுவும் ஒரு வருடாந்த நிகழ்வே தவிர, எந்த பாதிப்பும் அற்றது.

நிபுரு கிரகம் : நிபுரு (அல்லது கோள் எக்ஸ், (planet X)  அல்லது எரிஸ்) என்று ஒரு கிரகம் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக உள்ள கதையும் வதந்தியே. அப்படி ஒரு கிரகம் வந்து கொண்டிருப்பது உண்மை என்றால், எப்போதோ விஞ்ஞானிகள் அதை கண்டுபிடித்திருப்பார்கள். ஒரு மாதத்துக்குள் பூமியை மோதப்போகிறது என்றால், இப்போதைக்கு அது வெறும் கண்ணுக்கே தெரியத் தொடக்கி இருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. எரிஸ் என்கிற ஒரு கிரகம் இருப்பது என்னமோ உண்மைதான். ஆனால், அது பூமியை நெருங்கக்கூடிய அதி குறைந்த தூரமே நான்கு பில்லியன் மைல்கள்.

பூமி கவிழுமா? : பூமியின் வட முனைவும் தென் முனைவும் தமக்குள் இடமாறும் எனவும் ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. புவியின் காந்த முனைகள் நான்கு இலட்சம் வருடங்களுக்கு ஒருமுறை இடமாறும் என்பது உண்மைதான். அதுவும் மிக மெதுவாகத்தான் நடக்கும் என்பதுடன், அதுவும் வரும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு நடக்க வாய்ப்பில்லை.

வால்வெள்ளிகள் மோதுமா? : அத்தனை பாதிப்பை தரக்கூடிய வால்வெள்ளிகள் மோதும் சாத்தியங்கள் இல்லை. ( கடைசியாக அத்தனை பெரிய மோதுகை 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்தான் நடந்தது. அப்போதும் உலகம் அழியவில்லை. டைனோசர்கள்தான் அழிந்தன.) நாசாவானது தினம்தோறும் பூமியை மோதும், மோதக்கூடிய வால்வெள்ளிகளை பற்றி ஆராய்ச்சி செய்து இணையதளத்திலே பதிவிடுகிறது. அங்கெ பார்த்தால் தெரியும், எல்லாமே சுண்டைக்காய் அளவுள்ளவைதான் வந்து மோதுகின்றன.

நாசாவின் நிலைப்பாடு : எல்லாமே முட்டாள்தனமான வதந்திகள்தான். இதெல்லாம் உண்மை என்றால் ஏதாவது ஆதாரங்கள், விஞ்ஞான ரீதியான சாத்தியங்கள் இருக்கின்றனவா? இல்லை. எல்லாமே பம்மாத்து."

சமீபத்தில் நான் ஒரு ப்ளாக்கில் படித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...



இதை பற்றிய ஞானம் படைத்த கடவுளுக்கு மட்டுமே தெரியும்!



நீங்கதான் அதற்கு நாட்டாமை!....வர்ட்டா







.

டெல்லி கற்பழிப்பும்..சில கேள்விகளும்

Friday, January 04, 2013

india-rape-AFP-670


1.இதுதான் இந்தியாவில் நடந்த முதல் கற்பழிப்பா?பாதிக்கப்பட்டவர் மருத்துவ கல்லூரி மாணவி என்பதால்தான் இத்தனை போராட்டமா?இதே டெல்லியில் 2008 ல் மட்டும் 48 கற்பழிப்பு வழக்கு உள்ளதாமே!அப்போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

2.இந்த சம்பவத்தை பல்வேறு வகைகளில் சித்தரிக்கும் எந்த ஊடகமாவது இரவு 12 மணிக்கு அந்த  மாணவிக்கு நைட் சோ பாக்க அனுமதி கொடுத்ததையோ அல்லது அதை கண்டு கொள்ளாமல் இருந்ததையோ மேலும் அந்த மாணவி தனது பாய் ஃப்ரெண்டோடு அந்த நட்ட நடு ராத்திரியில் அவ்வாறு போனதையோ சுட்டிக்காட்ட வில்லை..

3.நடிகை அமிதாப்பட்சனின் மனைவி பாராளுமன்றத்தில் "இந்த இருக்கையில் எனக்கு இருக்கவே வெட்கமாக இருக்கிறது என அழுதாராம்...இதை சொல்ல அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது தான் ஒரு பெண் என்பதை தவிர.
இதே அரைகுறை ஆடை அவிழ்ப்பு மற்றும் கவர்ச்சியின் போதையில் நாட்டில் நடக்கும் சில தவறுகளுக்கு காரணமாய்  இருக்கும் ஒரு துறையை சார்ந்தவர் அதை எப்படி சொல்ல மனம் வருகிறது?

சரி இதற்கு எதுதான் தீர்வு?

இப்போது நான் சொல்லபோகும் தீர்வுக்கு நான் ஒரு இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால் நீங்கள் இதை கண்டிப்பாக கைதட்டி ஆராவரம் செய்வீர்கள்!

இதே குஜராத்தில் எத்தனை இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கபட்டனர்?ஒரு கர்ப்பினி பெண் வயிறு கிழிக்கப்பட்டு சிசுவும் வெளியே கொடூரமான முறையில் எடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட போது எங்கே போனார்கள் இவர்கள்?

இதற்கு தீர்வு சத்தியமாக இஸ்லாம் கூறும் வழிமுறைதான்...

இது என்ன காட்டுமிராண்டித்தனம் என சொன்ன சில வாய் இப்போது சொல்கிறது..அதற்கு மரண தண்டனைதான் சிறந்தது என..

குறிப்பாக மதுரை ஆதினம்..மற்றும் பாரதியஜனதா கட்ச்சியை சார்ந்த ஒரு தலைவர் உட்பட இப்போது சொல்கிறார்கள் அதை....


"திருமணம் முடிந்தநிலையில் ஒருவர் விபச்சாரம் செய்தால் அவ்ரை கல்லால் எறிந்து கொல்லுங்கள்..திருமணம் முன்பு செய்தால் நூறு சவுக்கடி கொடுங்கள்"என இஸ்லாம் சொல்கிறது!!!

என்ன ஒரு அருமையான தீர்வு பாருங்கள்! மரண தண்டனை கொடுத்தாலும் ஒரு நிமிடந்தான் அதை உணர முடியும்..ஆனால் கல்லால் எறிந்து அனு அனுவாய் மக்கள் முன்னிலையில் சாகப்போகும் ஒருவனை பார்த்தால் எவனாவது தப்பு செய்வானா?

இதே அரபு நாடுகளில் தவறுகள் நடக்கவில்லை என நான் ஒன்றும் வக்காலத்து வாங்க வில்லை..ஆனால் அங்கே குறைந்திருக்கிறது என சுட்டிக்காட்டுகிறேன்...பொது ரோடுகளில் இத்தனை கிலோமீட்டர் வேகத்தில்தான் போகவேண்டும் என சட்டம் அங்கே இருக்கிறது..மீறினால் நம்ம ஊரு காசுக்கு 7000 ஃபைன்...போக மனசு வரவில்லை...ஏன்??சட்டம் கடுமையாக இருக்கிறது..இதே இந்தியாவில் நீங்கள் ஜேம்ஸ்பான்ட் மாதுரி இந்த ரோட்டிலிருந்து அந்த ரோட்டுக்கு தாவலாம் பறக்கலாம்!

பெரிய பெரிய சிட்டிகளில் இரண்டு போர்டு இருக்கும்.ஒன்று சென்னை மாநகரம்..இன்னொன்று திருடர்கள் ஜாக்கிரதை என படத்துடன் சிலரது புகைப்படம்..

இது எதை சொல்கிறது?காவல்துறை சொல்கிறது..இங்கே சில திருடர்கள் இருக்கிறார்கள் ஜாக்கிரதையா இருங்க...

சிரிப்பு வரவில்லையா உங்களுக்கு??

அதை தடுக்கும் முயற்சியை காணோம்?

இஸ்லாம்  ஒருவன் திருடினால் அவனது கையை மக்கள் முன்னிலையில் வெட்டுங்கள் என சொல்கிறது!
இது சரியா?நீங்கள் தவறு என சொல்லலாம்...


பலநாள் கஸ்டப்பட்டு..தன் இரத்தம் சிந்தி..  கடுமையாக உழைத்து சம்பாதித்த பணம் திருட்டுக்கு பறிகொடுத்த ஒருவனை கேட்டுப்பாருங்கள்....நூறு சதவீதம் சரி என்பான்...

நான் ஒன்றும் நீங்கள் இஸ்லாத்திற்கு மாறுங்கள் என சொல்லவில்லை...அதன் நல்ல வழிமுறைகளை பின்பற்றலாமே என்ற வாதத்தை முன் வைக்கிறேன்

கட்டாயமாக பெண்கள் அனைவரையும் பர்தா அணிய சொல்வதால் அது பெண்களை அடிமைபடுத்தி வைத்திருக்கிறது என சொன்ன சில நாக்கு அதை சரி என இப்போது முன்மொழிகிறது!