வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

வரதட்சணை கேட்கும் உரிமை பெண்களுக்கே உண்டு

Friday, March 22, 2013






என்னடா இது?இஸ்லாத்திலுமா இது அனுமதிமதிக்க பட்டிருக்குனு யாரும் கேட்டுவிடாதீர்கள்?
நான் வரதட்சணை என குறிப்பிட்டது மஹர் பணத்தை மட்டுமே

ஏனெனில் இவர்களுக்கு மஹர் பணம் என்றால் சரியாக விளங்காது என என் எண்ணம்
(விளங்கியிருந்தால்தான் கொடுப்பார்களே!ஏன் புடுங்குகிறார்கள்)

சில விசயங்கள் அப்படியே உல்டாவா மாறிடுச்சி

ரசூலுல்லா காலத்தில் பெண்களை பெற்றவன் மகராசன்
இன்றோ ஆண்டியப்பன்

ஏன் இப்படி?சிலர் இஸ்லாத்தை சரியாக புரிந்துகொள்ளாததின் காரணமே அது

இவர்களை போன்றவர்கள் இருப்பதால்தான் இஸ்லாத்தை மற்ற மதத்தினரும் சரியாக விளங்கிகொள்ளாத சூழ்நிலை

"அட உங்களுக்கு என்னப்பா?தலாக் தலாக்னு சொன்னா போச்சு..இன்னொரு கல்யாணம் என்பார்கள்...

ஈச்ளாஆM பெண்களை கொடுமைபடுத்துகிறது என வேறு அனுபல்லவி

ரசூலுல்லா காலத்தில் ஒரு சம்பவம்

ஒரு பெண்மணி வருகிறார்..என் கண்வரோடு எனக்கு வாழ விருப்பம் இல்லை விவகாரத்து வாங்கி தாருங்கள் என முறையிடுகிறார்

ஆனால் கணவரோ கண்ணீர்விட்டு கதறுகிறார்..உன்னோடு நான் வாழ விரும்புகிறேன் என்கிறார்

அவரது நிலையை பார்த்துவிட்டு ரசூல் அவர் உங்கள் மேல் அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்..அவரோட சேர்ந்து வாழலாமே என்றார்

உடனே அப்பெண்மணி"இநபியே இது உங்களின் கூற்றா?இல்லை இஸ்லாத்தில் பெண்களுக்கு இருக்கிற உரிமையா?என கேட்டார்...
நபி"இது என் கூற்றே"என்றார்

அப்படியானால் எனக்கு என் உரிமையை தாருங்கள் என கேட்கவே
அவருக்கு விவகாரத்து வழங்கப்பட்டது

இது எதை காட்டுகிறது?
இஸ்லாத்தில் பெண்களுக்கும் கணவரோடு வாழ விருப்பம் இல்லை என்றால் குலா எனும் விவகாரத்து உரிமை அவர்களுக்கும் உண்டு என காட்டுகிறது

அதற்கு நிபந்தனை அவர் வாங்கிய மஹர் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்

யார் இங்கே அதை  புரிந்து கொண்டார்கள்?

உமர் ரலி அவர்கள் காலத்தில் இன்னொரு சம்பவம்

இந்த பெண்கள் அதிகமாக வரதட்சணை கேட்கிறார்கள் அதனால் திருமணம் செய்யமுடியாத நிலமையில் நாங்கள் இருக்கிறோம் என சிலர் உமர் அவர்களிடம் முறையிடவே அவர்"கஸ்டப்பட்டவராய் இவளவுதான் கேட்க வேண்டும் என ஒரு தொகையை நிர்ணயம் செய்கிறார்..

உடனே ஒரு வயதான மூதாட்டி"உமரே இது உங்களின் அறிவுரையா?இல்லது இஸ்லாத்தின் சட்டமா?என கேட்டதும் உமர் ஆடி போய் சிறிது நேரம் அமைதியாய் இருந்துவிட்டு பின் கூறினார்
"நான் தவறு செய்து விட்டேன் இந்த மூதாட்டி சொல்வது சரியே!பெண்கள் கேட்டதை நாம் கொடுத்தே ஆக வேண்டும்..அவர்கள் உரிமையை பறிக்கலாகாது என்றார்

சரி இப்போது சொல்லுங்கள்


ஒரு பள்ளிகூடம். இரு தோழிகள் இருக்காங்க.
ஒருவர் முஸ்லீமல்லாதவர்.  இன்னொருவர் முஸ்லீம்.
இருவரும் கட்டுகோப்பான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். விளையாட்டு போட்டிக்காக வெளியூர் செல்ல அனுமதி வேண்டி வீட்டில் கேட்க, வீட்டினர் மறுக்கிறார்கள். பெண் குழந்தையை எப்படி துணை இல்லாமல்  வெளியூர்க்கு அனுப்புவது என்ற கவலை இரு குடும்பத்தினருக்கும்!


அடுத்த நாள் பள்ளியில் ஆசிரியரிடம்,

        முஸ்லீமல்லாத  பெண்-  எங்க வீட்டில் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க
        ஆசிரியர்-ம் சரி போ!


        முஸ்லீம் பெண்- எங்க வீட்டில் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க
        ஆசிரியர்- உங்க ஆளுங்களே இப்படிதான்... பொண்ணுங்கள் எங்கும் விடுறதில்ல, மொகத்த மூடுன்னு ஓவர்ரா கன்ட்ரோல் பண்ணி அடிமைபடுத்துறாங்க... எப்பதான் திருந்த போறாங்களோ..................................

இதுதான் இன்றைய நிலை!!!
இஸ்லாமிய பெண் என்றாலே  அடிமைப்படுத்தப்பட்டவள் என்று பரிதாபமாக பார்க்கப்படுகிறது. ஆக்சுவலி  முஸ்லீமல்லாத குடும்பத்தாருக்கு  தன் பெண் மேல் என்ன பயம் இருக்குமோ அதே தான் அந்த இஸ்லாமிய குடும்பத்திற்கும் இருக்கு... ஆனால் சமுதாயத்தின் பார்வையில்?????????!!!!!!!!

எங்களை பார்த்து நீங்க பரிதாபப்படுறீங்களா??? ஏன் படணும்? என்ன அவசியம் வந்தது??? கீழே உள்ளதெல்லாம் வாசிங்க.... அதுக்கப்பறம் முடிவு பண்ணுங்க!!!

சொத்துரிமை:
ஆண்களை போலவே பெண்களுக்கும் சொத்தில் பங்குண்டு! இதுதான் எல்லா எடத்துலையும் இருக்கே?? என்னமோ இவங்களுக்கு மட்டும்  இருக்குறமாதிரி எதுகெடுத்தாலும் மதம் மதம்னு ஏன் அலையுறீங்கன்னு கேக்குறீங்களா???? 1956 ஜூலை 4ம் தேதி அன்று இந்திய (இந்து)வாரிசு சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் தான் சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு (தனி சொத்தில் மட்டும். பங்கு சொத்தில் இல்லை) என இந்திய அரசியலமைப்பு சொன்னது!   2005ம் ஆண்டு வெளிவந்த சட்டதிருத்தத்தின்படி  தனிசொத்திலும் பங்குசொத்திலும் உரிமை உண்டு என கூறப்பட்டது.  அதுக்கு முன்னாடிலாம்   "சீர் செனத்தி செஞ்சாச்சுல??? இனி என்னாத்துக்கு இங்கே வார்ரவ? எல்லாம் எம்மவனுக்குத்தேன்"ன்னு சட்டம் பேசிட்டிருந்தாங்க நம்ம பெற்றோர்ஸ்! ஆனால் 7ம் நூற்றாண்டிலேயே இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடைத்துவிட்டது.  எவ்வித காத்திருப்புகளும் இல்லை! எவ்வித போராட்டங்களும் இல்லை! எவ்வித கெஞ்சுதல்களும் இல்லை!  இந்த பங்கீடு ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் கட்டாயக் கடமை ஆகும். இதை நிறைவேற்றியே ஆக வேண்டும்.

    இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு. என்று உங்கள் பிள்ளைகள் விசயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகின்றான். அல்-குர்ஆன் (4:11)

    குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்குண்டு. பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்குண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. அல்-குர்ஆன் (4:7)


திருமண சம்மதம் :
மனதிற்கு விருப்பமில்லாத ஒருவனை காட்டி திருமணம் செய்யும் படி பெற்றோர் எம்மை வற்புறுத்த முடியாது. திருமணத்திற்கு எம் சம்மதம் தான்  முதல் முக்கியமான விஷயம்.

    விதவைப்பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெறவேண்டும். கன்னி பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - ஆதார நூல்: புகாரி)


பெண்களின் சம்மதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்க பாருங்க! பெண்ணை அடிமைபடுத்துவதாகவோ அல்லது உரிமைகளை  நசுக்கும் மதமாகவோ இருந்தா  இதில் ஏன் கவனம் செலுத்தி பெண்ணின் சம்மதத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? சிந்திப்பீர்களா?

இப்படிதான் ஒருமுறை ஒரு பொண்ணு வந்து நபி (ஸல்) அவர்களிடம்  "எங்கப்பா எனக்கு பிடிக்காத நபரை திருமணம் செய்து வைக்கபாக்குறாரு. எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை"ன்னு சொல்லிட்டாங்க. உடனே அதற்கு தீர்ப்பு சொன்ன நபி (ஸல்) அவர்கள் "இந்தத் திருமணம் ஆகுமான திருமணம் அல்ல! இது செல்லாது! நீ விரும்பியவரை மணம் முடித்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கிறது!” என்று கூறி என் திருமணத்தை ரத்து செய்தார்கள்.
ஒரு பெண்ணின் சம்மதம் இல்லைன்னா கல்யாணமே ரத்தாம்! :-)

இது பெண்ணின் உரிமை! சமுதாயம் தான் கொடுக்கணும். ஏன் மதத்தை தூக்கிட்டு அலையுறீங்கன்னு கேக்குறீங்களா??? ம்ஹும்ம்ம்... எங்கம்மா அப்பா கொடுக்காத உரிமையை/சமுதாயம் மறுத்த உரிமையை குர் ஆனின் இறைவசனம் தான் வாங்கிகொடுத்துச்சு!

மறுமண உரிமை :
விவாகரத்தானாலோ அல்லது கணவன் இறந்தாலோ யாரும் எம்மை வெள்ளைபுடவை கட்டி அழகுபார்ப்பதில்லை! அதன் பின்னும் எம் பெண்களுக்கு வாழ்க்கை இருக்கு. அவளுக்கு மறுமணம் புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது சமுதாய உரிமை! இத மதம் தான் கொடுக்கணுமா? ஏன் மதத்தை உரிமையோடு கலக்குறீங்கன்னு கேக்குறீங்களா??? வேறொன்னும் இல்லைங்க... சமுதாயம் அவர்களை விதவைன்னு முத்திரைக்குத்தி, இயல்பை மாற்றி,  மூலையில் உக்கார வைத்தபோது  மதம் தான் "நீ நீயாகவே இரு"ன்னு சொல்லி கொடுத்துச்சு! இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கும் விதவை பெண்களின் நிலைக்கு  இஸ்லாத்தில் எப்போதோ தீர்வு சொல்லப்பட்டுவிட்டது!

பெண்கல்வி :
அடுத்ததாக படிப்பு! இஸ்லாம் பெண்கல்வி மறுப்பதாக பலர் கருதுகிறார்கள். இதுவும் கட்டுக்கதையே! இன்றைய காலகட்டத்தில் தான் படிப்பின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்திருக்கிறார்கள்.  முன்பு பெண் கல்வி என்பது சமுதாயத்தில் மறுக்கப்பட்ட ஒன்றுதான்!  அடுப்பூதுவதும் அப்பளம் சுடுவதும் தான் பெண்ணின் நிலை என்ற இழிநிலையை தடுத்து ஆணை போலவே பெண்ணிற்கும் கல்வி கற்கும் உரிமையை வழங்கியிருக்கிறது. அதுவும் 1400 வருசங்களுக்கு முன்பே...

    கல்வியைத்தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும் என்பது நபி மொழியாகும். (ஆதார நூல்: இப்னுமாஜா)

பெண்களை கொடுமைபடுத்துகிறதா?
பெரும்பாலனவர்களின் எண்ணம் இதுவே! இஸ்லாம் பெண்களை கேவலாக நடத்துவதாகவும், அவர்களை சதைபிண்டமாகவும் மட்டுமே பாவிக்கிறது எனவும் பலவாறாக விமர்சிக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் பெண்களை  ராணிகளாய் நடத்துவது ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்...

இதோ சில உதாரணங்கள் :

        உங்களுக்கு உங்கள் மனைவியர்மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள்மீது சில உரிமைகள் உள்ளன. (திர்மிதி)

         உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே." (திர்மிதி)

        அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்துகொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் அநேக நன்மைகளை வைத்திருக்கலாம். (அல்குர்அன் 4:19)

         எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்." (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)


இவையெல்லாம் இஸ்லாமிய பெண்மணிகள்  சங்கம் அமைத்து, ரோட்டில்  கொடிதூக்கி, போராட்டம் பண்ணி, நீதிமன்றம் மனித உரிமை கழகம்ன்னு போராடி ஒவ்வொரு முறையும் பிச்சை கேட்டு வாங்கிய சுதந்திரம் இல்லை! இயல்பாகவே இஸ்லாம் எங்களுக்கு ஏற்படுத்தி தந்தவை!

இறைவன் கொடுத்த சிந்திக்கும் திறன் இன்னும் நம்மிடம் அப்படியே தான் இருக்கு. திறந்த மனதுடன் முன்முடிவில்லாது யோசிங்க.


இஸ்லாம் மதிக்கிறது?மற்றவர்கள் பெண்களை மிதிக்கிறார்களா?

அம்மாவுக்கோர் தாலாட்டு





உளியால் சிலை
செய்வான் சிற்பி!
வலியால் சிசு
செய்வாள் தாய்!

அம்மா அன்பின் இலக்கணம்!



தொட்டிலில் தாலாட்டிய
அன்னையின் அன்பை
பட்டியலிடும்
பேனா என்னிடம் இல்லை...

தென்றல் மரத்தை
தாலாட்டும் அளவு எவ்வளவு?

மேகத்துக்கு பிறந்த
பிரவாகத்தில் சிதறிய
துளிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

அளவிட அளகில்லை
அளப்பதும் அழகில்லை!

தன்னை வளர்த்த
வேருக்கு பூக்கள் தூவி
வாழ்த்துச் சொல்லும்
ஆலமரம்!

ஆலமரபிள்ளை
இலைகளால் ஆன
இக்கவிதைகளால்
வேரான அம்மாவிற்கு
விருது தரும் தருணமிது!


விலங்குகள் சில
விளங்கிகொண்ட ஒரே பெயர்!

பிள்ளை விளைந்ததிலிருந்து
தூக்கம் அம்மாவுக்கு
தொலைந்து போனது!

இரவின் நீளம்
அம்மாவின் துயரம்!

முன்பெல்லாம் நிலாவை காட்டி
சோறூட்டிய அம்மா
தங்கத்தை காட்டி இப்போது
சோறூட்டுகிறாள்!

ஆனால் நிலவைக்காட்டியா
நிலாவுக்கு சோறூட்டுவது???

அம்மாவின் அன்பையும்
அளவையால் அளக்கலாம்
அது தொட்டிலுக்கும் தாயுக்கும்
இடையே உள்ள தூரம்!

உறவின் பரிமாணம்
அண்ணன்,மச்சான்,மனைவி என
மாறிக்கொண்டே இருக்கிறது
அம்மா பிள்ளையைத்தவிர...

உலகமே
போர்வைக்குள்
போன பின்பு நாதியற்றுகிடப்பது
நானும் நீயும்தானே!

எப்போதுவெடிக்கும் எரிமலை?
எப்போது அழுமோ என் குழந்தை??
இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை

அன்னைக்கும் பிள்ளைக்கும்
காதல் உண்டு...

தோளில் சாயும்போது
பைசாநகரத்து கோபுரம்!

தள்ளியிருக்கும்போது
தண்டவாளம்!

மடியில் உட்காரும்போது
அரசனின் சிம்மாசனம்!

தாயின்பிரிவு நிரந்தரம் இல்லை

கண்ணைவிட்டு இமை
எத்தனைநேரம் பிரிந்திருக்கும்?

பிரிப்பதறிது
அம்மாவும் பிள்ளையும்
அச்சதீர்க்க ரேகைகள்!

இஞ்சி இடுப்பழகி உண்மைதானோ???

 
Photo


ஆங்கில கவிஞர்கள் 'குழவியை'யும், தமிழ் கவிஞர்கள் 'உரல், உடுக்கை களையும் பெண்ணின் இடுப்புக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் இது அதற்கும் சின்னதாக...


இது ஒன்றும் தமாசு கிடையாது...

உலக அளவில் இத்துனுன்டு இடை கொண்ட அம்மணி இவுகதான்

பேரு கேத்தி ஜுங்


ஆச்சரியமா இருக்கா? பெருமூச்சு விடாதிஙப்பா.

...
வயிறுக்குமேல் வயிறு வளர்க்கும் மனித வாசிகளே!


ஜிம்முக்கு போறேனு உடால்விட்டுட்டு பலமடங்கு அதை பெருக்கும் பாவப்பட்ட ஜென்மங்களே


இவுக இடுப்ப பாருங்க..

..பிறகு உங்க வயிற்றை குறையுங்க
அம்மணியோட ஐடி தெரிஞ்சா மெயில் அனுப்பி உடம்பைக்குறைக்கும் டிப்ஸ் கேளுங்கப்போய்ய்ய்ய்ய்ய்ய்

இந்தியாவிதான் இப்படி?சிரிப்பா இருக்கா?

Friday, March 01, 2013



அண்மைக்காலமாக face bookஇல் அதிகமாக பேசப்பட்ட விமர்சனத்திற்கு உள்ளன புகைப்படங்கள்தான் இவை ...face book அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக அரசியலில் நடைபெறும் கூத்துக்கள் ,சினிமா விமர்சனங்கள் ,நடிகர்கள் நடிகைகளை பற்றிய கிசு கிசுக்கள் ,சாமியார்களின் விடயங்கள் என சகல விடயங்களுக்கும் பத்திரிகைதான் கேலி சித்திரங்கள் வரைந்து அவற்றை பற்றி கடுமையான விமர்சனம் செய்வார்கள் அதன் பின்புதான் நமக்கு உண்மை புலப்படும் ..

ஆனால் தற்பொழுது உலக அளவில் பயங்கர ஆயுதமான மீடிய துறையாகவும் பரிணமித்திருக்கிறது face book இதனால் எதாவது குளறுபடிகள் நடந்தால் முதலில் சாட்டையடி விழும் இடமாக face book காணப்படுகின்றது ..உதாரணமாக நமது சாமியார் இருக்கின்றார் அல்லவா அட அதுதாங்க நம்ம நித்தியானந்தா ...அவர் மதுரை ஆதினமாக தெரிவு செய்யப்பட்டார் என்பது உங்களுக்கே தெரியும் ..அவர் தெரிவு செய்யப்பட்டதும் ...face book அவரை படாத பாடு படுத்திவிட்டது ...

இதை விட நம்ம பவர் ஸ்டார் பற்றிய அரிய விடயங்கள் ,why this kolavery பாடலை பிரபலப்படுத்தியது(((தனுஷ் சச்சினுக்கு ஒரு பாடல் அமைத்திருந்தார் அதில் ஒன்றை ஆரம்பத்தில் அவதானித்தேன் total viewers 1500 என்று இருந்தது

ஆனால் லைக் 2500 dislike 500 என்று இருந்தது முழுமையாகப் பார்த்தவர்களே 1500 பேர்தான் ஆனால் 3000 பேர் like ,dislike செய்திருக்கிறார்கள் இது எப்படி சத்தியம் என்று எனக்கு புரியவில்லை இதுவே அவரது கொலவெறி யிலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கம் தரவும் )))போன்ற பல விடயங்களை face book தனக்கே உரிய பாணியில் வெளிக்காட்டி உள்ளது ..இத்தனை சாத்தியப்படுவதற்கு முக்கிய காரணம் ஒரு செய்தியை ஆதரிப்பதற்கும் நிராகரிப்பதற்கும் விமர்சிப்பதற்குமான வசதிகள் face bookஇல் இருப்பதுதான் மற்றைய பாரம்பரிய ஊடகத்துறையில் இவ்வாறு நமது கருத்துக்களை உடனுக்குடன் தெரிவிப்பது சாத்தியமற்றது ..

இதனால் ஒரு தனி மனிதன் முன்வந்து தனது கருத்துக்களை பலர்முன்னிலையில் முன்வைக்க வழி செய்துள்ளது உதாரணமாக ஒருவர் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு உடனடியாகவே விமர்சனத்தை தனது face book சுவரில் எழுதிவிடமுடியும் இது face book இன் முக்கிய பலமாகும் ..இவ்வாறு face bookஇல் விமர்சனத்திற்கு உள்ளான நொந்து நூடில்ஸ் ஆன புகைப்படங்கள் இதோ