என் இதயத்தில் கூடுகட்டிவிட்டு
எங்கோ பறந்து போன
எனை மறந்துபோன பறவை நீ!
இப்போது நீ வசிப்பது
எக்கிளையில்?
நிறைகுடம் தழும்பாது
உண்மைதான் அதனால்தான்
வார்த்தைகள் எவ்வளவோ இருந்தும்
அரசின் சலுகைகள் போல
சிறிது சிறிதாக வெளியிட்டாய்!
நீ பேசும்போது ஒவ்வொரு
வார்த்தைகளும் ஓர் உளி!
கல்வெட்டிற்கான கல்லாய் என் இதயம்....
என் இதயத்தில் சிந்திவிட்ட
பாதரசமான் உன்னை
பொறுக்கியெடுக்கும்
பொறுமையும் கைகளும் எனக்கில்லை!
நீ ஒரு தொட்டாச்சினுங்கி
தெரியாமல் தொட்டுவிட்டேன்
தொட்டவனே பின்னர் சினுங்கினேன்...
என் தோளில் நீ சாயும் போது
பைசாநகரத்து கோபுரம்
எனை தீண்டும்போது தென்றல்..
சில்மிஷம் செய்யும்போது குழந்தை!
நீ இமைத்ததால் வீசும் காற்றில்
நான் குளிர் காய்கிறேன்..
நீ தூரமாய் இருப்பதால் யாரும் இதை
நம்புவதில்லை
மரங்கள் அருகில் இருந்தால் மட்டுந்தான்
காற்று வருமா?
உன்னை என் இதயத்தில்வைக்க
எனக்கு இஸ்டமில்லை
இதயம் என்பது தண்ணீரிலிருந்து
தூக்கியெறியப்பட்ட ஒரு மீன்!
அதில் உன்னையும் துடிக்கவைக்க
எனக்கு சம்மதமில்லை!
இந்த ஷாஜஹானுக்கு
எங்கோ பறந்து போன
எனை மறந்துபோன பறவை நீ!
இப்போது நீ வசிப்பது
எக்கிளையில்?
நிறைகுடம் தழும்பாது
உண்மைதான் அதனால்தான்
வார்த்தைகள் எவ்வளவோ இருந்தும்
அரசின் சலுகைகள் போல
சிறிது சிறிதாக வெளியிட்டாய்!
நீ பேசும்போது ஒவ்வொரு
வார்த்தைகளும் ஓர் உளி!
கல்வெட்டிற்கான கல்லாய் என் இதயம்....
என் இதயத்தில் சிந்திவிட்ட
பாதரசமான் உன்னை
பொறுக்கியெடுக்கும்
பொறுமையும் கைகளும் எனக்கில்லை!
நீ ஒரு தொட்டாச்சினுங்கி
தெரியாமல் தொட்டுவிட்டேன்
தொட்டவனே பின்னர் சினுங்கினேன்...
என் தோளில் நீ சாயும் போது
பைசாநகரத்து கோபுரம்
எனை தீண்டும்போது தென்றல்..
சில்மிஷம் செய்யும்போது குழந்தை!
நீ இமைத்ததால் வீசும் காற்றில்
நான் குளிர் காய்கிறேன்..
நீ தூரமாய் இருப்பதால் யாரும் இதை
நம்புவதில்லை
மரங்கள் அருகில் இருந்தால் மட்டுந்தான்
காற்று வருமா?
உன்னை என் இதயத்தில்வைக்க
எனக்கு இஸ்டமில்லை
இதயம் என்பது தண்ணீரிலிருந்து
தூக்கியெறியப்பட்ட ஒரு மீன்!
அதில் உன்னையும் துடிக்கவைக்க
எனக்கு சம்மதமில்லை!
இந்த ஷாஜஹானுக்கு
உன் நினைவுகளே ஒரு நினைவு சின்னம்!