வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

குடும்ப வறுமையால் சலூன் கடை நடாத்தும் பட்டதாரி பெண்!

Sunday, August 11, 2013

devi 


யாரப்பா சொன்னது?வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று!

இங்கே பாருங்கள்....வல்லவிக்கு புல்லும் ஆயுதம்!





திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்குபல்லடம் முனியப்பன்கோயில் வீதியை சேர்ந்த தங்கவேலு மகள் தேவி (30). பிகாம் பட்டதாரியான இவர், அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் முடிவெட்டுகிறார். ஷேவிங் செய்கிறார். இவரது தொழில் நேர்த்தியை கேள்விப்பட்டு ஏராளமானோர் வாடிக்கையாளராகி உள்ளனர். பட்டதாரி பெண் தைரியமாக சலூன் தொடங்கி இருப்பது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தேவி கூறியதாவது: அரசு வேலைக்கு பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை வாட்டியது. தந்தை சர்க்கரை நோயாளி என்பதால், தந்தையின் தொழிலை கையில் எடுத்தேன். சிறுவயதில் இருந்தே அவரது பணியை பார்த்து வந்த எனக்கு தற்போது கை கொடுக்கிறது. தொடக்க நாட்களில் ஆண்கள் வரவே கூச்சப்பட்டனர். சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனாலும் நான் மனம் தளரவில்லை. சீரான முடிவெட்டை பார்த்து, நாளாக நாளாகத்தான் வரத்துவங்கினர் என்றார்.
 37
 
- See more at: http://tamilcloud.com/news/graduate-girl-work-saloon/#sthash.I8Y39BMC.dpuf
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்குபல்லடம் முனியப்பன்கோயில் வீதியை சேர்ந்த தங்கவேலு மகள் தேவி (30). பிகாம் பட்டதாரியான இவர், அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் முடிவெட்டுகிறார். ஷேவிங் செய்கிறார். இவரது தொழில் நேர்த்தியை கேள்விப்பட்டு ஏராளமானோர் வாடிக்கையாளராகி உள்ளனர். பட்டதாரி பெண் தைரியமாக சலூன் தொடங்கி இருப்பது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தேவி கூறியதாவது: அரசு வேலைக்கு பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை வாட்டியது. தந்தை சர்க்கரை நோயாளி என்பதால், தந்தையின் தொழிலை கையில் எடுத்தேன். சிறுவயதில் இருந்தே அவரது பணியை பார்த்து வந்த எனக்கு தற்போது கை கொடுக்கிறது. தொடக்க நாட்களில் ஆண்கள் வரவே கூச்சப்பட்டனர். சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனாலும் நான் மனம் தளரவில்லை. சீரான முடிவெட்டை பார்த்து, நாளாக நாளாகத்தான் வரத்துவங்கினர் என்றார்.

உப்புக்கருவாடு மனிஷாவா இப்படி???



manisha 

பம்பாய், இந்தியன், முதல்வன் படங்களில் அழகாக வந்து கவர்ந்தவர் மனிஷாகொய்ரலா. பம்பாய் படத்தில் உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு பாட்டுக்கு அவர் ஓடி வரும் காட்சி ரசிகர்களை கிறங்கடிப்பதாக இருந்தது.

அப்படிப்பட்ட மனிஷா கொய்ரலா இன்று ஆளே உரு மாறிப் போய் உள்ளார். திருமணம் அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகும் நிம்மதி பெறவில்லை. புற்று நோய் தாக்கியது. அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். மரணத்தின் விளிம்புவரை போய் மீண்டுள்ளார். பூரண குண மடைந்து விட்டார். முதல் தடவையாக இப்போதுள்ள தனது தோற்றத்தை படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அழகான தலை முடியை இழந்துள்ளார். கண்ணாடி அணிந்து இருக்கிறார். 42 வயதாகும் அவர் 62 வயது நிரம்பியவர் போல் காட்சி அளிக்கிறார்.

இந்த தோற்றத்துக்காக அவர் வருத்தம் அடைய வில்லை. தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். அதுவே படத்தை வெளியிட தூண்டியுள்ளது. இதன் மூலம் மற்ற நடிகைகளுக்கு உதாரணமாக திகழ்கிறார். இது குறித்து மனிஷா கொய்ரலா கூறும் போது இப்போதுள்ள என் தோற்றத்தை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். வெளி உலகுக்கும் இதை தெரிவிக்கிறேன். கறுப்பு வெள்ளையாக கடந்த காலம் இருந்தது. நிகழ்காலம் நன்றாக உள்ளது. கடவுள் மகிழ்ச்சியாக வைப்பார் என்றார்.
 

நாத்தீகர்கர்கள் அறிவாளிகளா?

Thursday, August 08, 2013

திரு.தங்கமணி அவர்களின் சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது? ” என்ற பதிவில் “உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக் கூடிய மனிதராக ஆக முடிகிறது” என்ற வாசகத்தைக் காண நேர்ந்தது.

கடவுள் நம்பிக்கையற்றவர்களை அறிவாளிகள் என்று விளித்திருப்பதன் மூலம் அதன் எதிர் நிலை நம்பிக்கையாளர்களை அறிவாளிகளுக்கு எதிர்ப்பதமாக சொல்லப் பட்டதாகக்கொண்டு, கடவுள் நம்பிக்கைக்கும் அதனை மறுப்பதற்குமுள்ள வித்தியாசத்தை தெளிவு படுத்திக் கொள்ளவும், நாஸ்திகர்களெல்லோரும் அறிவாளிகள் என்ற கூற்று சரிதானா? என்றும் பார்ப்போம்.

வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தோமேயானால் மனிதன் அறியாமையால் இறை நம்பிக்கையில் குறைந்திருந்த காலங்களும் பிறகு ஆன்மீகத்தில் திளைத்து இறை நம்பிக்கையில் மிகைத்திருந்த காலங்களும் மாறிமாறியே இருந்து வந்துள்ளன. மனித இனம் தோன்றியது முதல் ஏதாவது ஒரு நம்பிக்கையில் திளைத்து வந்ததாகவே அறியப்படுகிறது. ஒருபோதும் இறைநம்பிக்கை முற்றிலும் இல்லாத காலம் என்று ஒன்று இருந்ததாக அறிய முடியவில்லை.

உலகில் அறிவாளிகள் என்று அறியப்படுபவர்களில் பெரும்பாலோர் ஏதாவது ஒரு நம்பிக்கையை பின்பற்றியே வந்திருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையற்ற அறிவாளிகள் மிகச் சிறுபான்மையினராகவே இருந்து வருகிறார்கள். அறிவாளிகளை, கடவுள் நம்பிக்கையுள்ள அறிவாளிகள் கடவுள் நம்பிக்கையற்ற அறிவாளிகள் என்று வகைப்படுத்தாலமே தவிர கடவுள் நம்பிக்கையற்றவர்களை முற்றிலும் அறிவாளிகளாகவும், அதன் எதிர்நிலையிலுள்ள நம்பிக்கையாளர்களை அறிவாளிகளுக்கு எதிர்நிலையிலும் ஒப்பிடக் கூடாது.

கடவுள் நம்பிக்கையற்ற நாஸ்திகர்கள், தமது கடவுள் நம்பிக்கை மறுப்பிற்கு அடிப்படையாக அறிவியலைச் சொல்கிறார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகளை, 1) ஆய்வுகளினாலும் சோதனைகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டவை. 2) யூகங்கள், அனுமானங்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆனால் நிரூபணமாகாதவை (கோட்பாடுகள்) 3) சோதனைச்சாலை ஆய்வுகளாலும் கோட்பாடுகளாலும் திண்ணமாக வரையறுக்க/நிரூபிக்க இயலாத நம்பிக்கை சார்ந்தவை என வகைப்படுத்தலாம்.

நிரூபணங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் உட்படாதவை நம்பிக்கைச் சார்ந்தவையில் அடங்கும். அந்த நம்பிக்கை சார்ந்தவை, அறிவியல் நிரூபணங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக இல்லாதவரை முற்றிலும் நிராகரிக்கப்படக் கூடியவை அல்ல! அந்தவகையில்தான் இறைநம்பிக்கையும் சாரும். நம்பிக்கைக்களை உண்மையானவை அல்லது உண்மையல்லவை என்று நிரூபிப்பதற்கான ஆய்வுகளின் தொடர்ச்சியே அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்னணியாக இருக்கிறது.

பூமி தட்டையானது என்று நம்பப்பட்ட ஒரு கொள்கை ஆய்வுகளின் மூலம் “உருண்டை” என்ற கண்டுபிடிப்பால் தவறென நிரூபிக்கப்பட்டது. நிலவிலும் பிற கோள்களிலும் மனிதன் உயிர் வாழமுடியுமா என்பது, ஆய்வு நிலையிலேயே இருக்கும் கோட்பாடுகள். இறைநம்பிக்கை என்பது கோட்பாடுகளுக்கும் ஆய்வுகளுக்கும் அப்பாற்பட்டது. இறைநம்பிக்கையை எந்த அறிவியல் ஆய்வுகளாலும் நிரூபிக்க முடியாது. அறிவியலால் நிரூபிக்க முடியாதவற்றை நிராகரிப்பதைவிட நிரூபணமாகும்வரை தொடர் ஆய்வுக்குட்படுத்துவதே அறிவுப் பூர்வமான செயலாகும். இறை நம்பிக்கைக்கு எதிர்நிலை என்பது இறைநம்பிக்கை இன்மைதானே தவிர முற்றிலும் இறைநம்பிக்கையை மறுப்பதன்று!

உதாரணமாக, பேரூந்து