வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

குரங்கிலிருந்து பிறந்தானா?குரங்கை மனிதன் பெற்றானா?

Thursday, February 21, 2013




குரங்கிலிருந்து மனிதான் வந்தான் என டார்வின் ஒருகாலத்திலும் ஆதாரத்தோடு சொல்லவில்லை..அது அவரின் ஊகம் மட்டுமே1

ஊகத்தை வைத்து நம்மால் சொல்ல முடியாத கதைகளா?அதுல இதுவும் விதிவிலக்கல்ல

எல்லா குரங்கு மூஞ்சியையும் பாருங்கய்யா

மனுஷன் முகத்தையும் பாருங்க..

ஏதும் வித்தியாசம் தெரியுதா?

ஒருத்தனைபோல ஒருத்தன் மனிதனில் இல்லை..குரங்கு ஒரே அச்சில் வார்த்த முகம்....எப்படி மனது வந்தது அப்படி சொல்ல ??

இது உங்களுக்கே அடுக்குமா?

இதை அருமை சகோதரர்பி .ஜைனுல் ஆப்தீன்   எப்படி விளக்குகிறார் பாருங்கள்;





பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன்தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம். கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் ் கொள்கையைச் சிலர் ஏற்றி போற்றுகிறார்களே தவிர, அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமே ஆகும்.சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை.

எந்த குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் இல்லை. குரங்குக்கும் மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம். அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது பைத்தியக்காரத் தனமாகவே இருக்கும்.

உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம்.ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம். மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர். குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை. பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துக்கு அதிக அளவு பொருந்தி போகிறது. அநேகமாக எதிர் காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும், அல்லது முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்த்த்துக்கு நெருக்கமாக உள்ளது என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை. மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்த்த்தில் இருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்தில் இருந்து வேறு பட்டுள்ளது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்த கண்டு பிடிப்பு அமைந்துள்ளது. இன்றைய காலத்தில் தகப்பன் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ சோதனை மூலம் 'இவன்தான் தந்தை ' என்று முடிவு செய்கிறோம். வடிவத்தை கணக்கில் கொள்வதில்லை.

அதே போல் மனிதனுக்கு மாற்று இருதயத்தை வேறு உயிரினங்களிலிருந்து பெற முடியுமா? என்று ஆராய்ச்சி செய்த போது ஆச்சரியமாக பன்றியின் இதயம் பொருந்தி போவதை தற்போது கண்டு பிடித்திருக்கிறார்கள். இதிலும் மனிதனின் இதயம் குரங்கோடு ஒத்துப் போகவில்லை.

இன்றைய மனிதன் மரபணுச் சோதனையில் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டு பிடித்து விட்டான். குரங்கின் மரபனுக்களையும் மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப் பட்டிருந்தாலோ வேறு எந்தப் பிராணியின் மரபணுவும்மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப் பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை. இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டு பிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்ரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள்தான் என்பதைக் கண்டு பிடித்து விட்டனர்.

இதே போல் யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது?

கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது?

ஒட்டக சிவிங்கியின் கழுத்து ஏன் நீண்டது?

போன்றவற்றிர்க்கு எல்லாம் டார்வின் என்ன பதில் வைத்துள்ளார்?

கடவுளை மறுப்பதற்காக எத்தகைய உளறலையும் தூக்கிப் பிடிப்பது தான் அறிவுடமையா?பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்? தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்: அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை? இதற்கு டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை. மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கிறது.

மனிதனின் இரத்தம் இதயம்' சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகள ும் மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும் எந்த இனத்தில் இருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வினின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.