வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

காமவரி கவிஞர்கள் திருந்தமாட்டிங்களா?

Friday, February 01, 2013




எல்லா தமிழ் பாடலிலும் ஆபாசம் இருக்கிறது என்று சொல்லமுடியாது....

பழைய பாடல்களும் ஆபாசம் இருந்தது இலைமறை காயாய்..

இங்கே அதெல்லாம் இல்லை டைரக்ட்தான்

வைரமுத்து ரா ரா ராமையா பாடல் வெளி வந்தபோது

பாருங்கப்பா..வாழ்க்கைய எட்டுக்குள்ள சுருக்கிட்டார்னு வக்காலத்து வாங்கினேன்

வாலியின் பழைய பாடலை கேட்டவர்கள் அவரை குறை கூறினால் அடிக்க வந்துவிடுவார்கள்

ஆனால் என்ன ஆனது இப்போது?



 சில பாடலை கேட்டுவிட்டு இவரா இப்படி எழுதியது என வருத்துப்பட்டது உண்டு....

வைரமுத்துவின் வைர வரிகளை ரசிப்பவந்தான்...இருந்தாலும்...

அவர் எழுதிய சிலவரிகள் முகம் சுளிக்கவைத்தது....

ரோஜா படத்தில் "புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது"பாடலில்
"இங்கு சொல்லாத இடம்கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது"என்றார்..

அதோடு விட்டாரா?குஷி படத்தில் ஆபாசத்தின் உச்சகட்டமாய்
கட்டிபுடிடா பாடலில்
"எவ்விடத்தில் கண்முழித்தோம் அவ்விடத்தில்
மெல்ல தட்டு தட்டு"என்று இச்சை கூட்டினார்

கவிஞர் வாலியை சொல்வதென்றால் அவர் ஆபாசத்தின் உச்சக்கட்டம்..

நாமெல்லாம் பெண்களை பார்த்து எப்படி இருக்கிங்கனு கேட்க கூச்சப்படுவோம்

தலைவரு
"எப்படி எப்படி சமஞ்சது எப்படினு நேரிடையாகவே மாராப்புக்குள் என்ன இருக்குனு ஒரு வீணாபோனவன் கேட்டமாதுரி கேட்டார்..

அதுமட்டுமா?அதேபாடலில்
"காஞ்சமாடு காம்புலதான் பாஞ்சதுபோல் தெம்புலதான் நீயும் மேய பாக்குற"

எப்படி ஒரு உதாரணம் பாத்தியலா?

அதே படுத்துல ஏ குட்டி பாடலில்...சே சே சொல்லவே கூசுகிறது...

"உரலு ஒன்னு அங்கிருக்க உலக்க ஒன்னு இங்கிருக்க நெல்லு குத்த நேரம் எப்போ சொல்லேன்டி என் சித்திரமே"

இதனால் தமிழ் திரையுலகிற்கு நான் சவால்விடும் செய்தியாவது..


இதேமாதுரி காமத்தின் உச்சகட்டமாய் யாரும் பாட்டு எழுத முடியாது

ஏன்..... இப்படி கவிஞர்களே?

ஆபாசம் இல்லாமல் திரைப்படம்தான் சாத்தியம் இல்லை இப்போது?பாடல்களுமா?

வைரமுத்து சார்!

நீங்கள் எழுதிய"விடிகாலை விண்ணழகு
விடியும் வரை பெண்ணழகு"என்ற வரிகளால் ஏற்ப்பட்ட பிரச்சனைக்கும் கேள்விக்கும் இன்று வரை தீர்வு இல்லை விடை இல்லை..


வாலி சார்!

இதைவிட எப்படி ஆபாசமாய் எழுதுவது என யோசனையா?



டி ராஜேந்தரின் மகிமை உங்களுக்குத்தெரியுமா?





எப்படி இளையராஜா என்ற ஞானியின் இசை சிம்மாசனத்தின் இருக்கையில் யாரும் இனி அவர் உட்பட அவர்போன்ற கலைஞர்கள் உட்கார முடியாதோ..

அதுபோலவே சில கலைஞர்கள் உண்டு..

அதில் மறக்கமுடியாதவர் டி.ராஜேந்தர்


டி. ராஜேந்தர் அவர்கள் ஒரு பன்முக கலைஞன் இவரது நடிப்பாகட்டும், தமிழாகட்டும் ரசிக்க கூடியவையே!
மேலும் அவர் ஒரு பல குரல் மன்னன், பல திரைப்படங்களை அவரே தயாரித்தும், இயக்கியும் உள்ளார். மேலும் இவர் ஒரு மிகச்சிறந்த பாடலாசிரியர் மட்டுமல்லாமல் சிறந்த இசையமைப்பாளரும் ஆவார்.


மைக் கேமிரா கெடச்சா போதும்...பாவம் மேஜைக்குத்தான் வலிக்கும்..டக்கு டக்குனு வாயினால் ம்யூசிக் போட்டு..டனக்குடக்கா ஏ.ஏ..டண்டனக்கா ஆரம்பித்துவிடுவதுதான் இவர்கிட்ட பிடிக்காத ஒரு விசயம்...

இப்ப இருக்கிற டைரக்டருங்க எப்படியாச்சும் சைடு கேப்புல ஒரு ரேப் சீன் ஒரு கிளுகிளுப்பு பாடல் சேர்த்துடுவாங்க

நம்ம அண்ணன் கை அதுல பரிசுத்தமானது..அதையும் தாண்டி புனிதமானது!புனிதமானது!

தங்கச்சி பாசத்திற்கு மொத்த குத்தகைக்காரர் நம்ம அண்ணந்தான்..

அந்த காலத்தில் இருந்து இந்த காலம்வரைக்கும் காதல மையமா வச்சு எடுத்த படந்தான் அதிகம்..

அண்ணன் மட்டுந்தான் தங்கச்சிமார்களை வச்சு படம் எடுத்து அவர்கள் பெருமையை உசத்தியாக்கியவர்



இன்னொரு முக்கியமான விசயம்..

இப்ப இருக்குற ஹீரோக்கள் ஒரு முத்தம் கொடுக்குற சீன்,கட்டிப்புடிக்குற சீன் வந்தா அவங மனுசுக்குள் மத்தாப்புதான்

அந்த விசயத்துல அண்ணனை நான் தலைல தூக்கி வச்சு ஆடுவேன்

இந்த விசயத்தில் இவரை எந்த ஹீரோவும் ஏணி (துபாயில் இருக்குற உயரமான பில்டிங் அளவுக்கு) வச்சாக்கூட எட்ட முடியாதுங்கோ

எந்த ஹீரோயினையும்  ஒருபொட்டுக்கூட தொடமாட்டார்..

அதைவிட ஒரு சிறப்பு என்னவென்றால்.....
இவர் எடுத்த சினிமாக்களில் அதிகபட்சம் ஒன்பது எழுத்துக்களிதான் இருக்கும் என்பது சிறப்பு

திருக்குறளில் எந்த அடியிலாவது சீர்கெட்டு போயிருக்கானு வைரமுத்து முயற்சி செய்து தோற்றமாதுரி நானும் இவர் படுத்துல ஏதாவது ஒரு படம் எட்டு அல்லது ஏழு எழுத்தில் இருக்கானு பார்த்து மண்ணை கவ்வியுருக்கேன்

நீங்களுந்தான் பாருங்களேன்!


இவர் 80களில் அடுக்குமொழிகளில் சிறந்த கவிதைகளை எழுதி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவர்.
இத்தகைய சிறப்புக்களை பெற்றவரை ஏனோ தெரிய வில்லை பத்திரிகைகள், ஊடகங்கள், இணையதளங்கள் போன்றவை இவரை ஒரு கேலிப்பொருளாகவே பார்க்கின்றன• இந்நிலை மாற வேண்டும். இவரது தோற்றத்தை மட்டுமே பார்த்து சிரிக்க வே ண்டாம். இவருக்குள் இருக்கும் திறமைகளை கண்டு ரசியுங்கள் சிந்தியுங்கள்.