வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

தூக்குதண்டனையை எதிர்க்கும் கமல்!

Thursday, January 31, 2013





கமல் அய்யா சொல்வதை பார்த்திங்களா?
அவர் பார்வையில்....
தான் அணிந்திருக்கும் ஜட்டியை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என நினைத்து ஆபாசமாய் நடிப்பது குற்றமில்லை..

உதாரணம்:குருதிபுனல் பட சீன்(தமிழ் படத்தை ஹாலிவுட்டிற்கு உயர்த்துகிறாராம்!)

தேசத்தந்தை காந்தியை கொன்றது யார் என்ற உண்மையை வெட்டவெளிச்சமாக்கிய ஹேராம் படத்தில்கூட   உடலுறவு காட்சிகளை இணைப்பது தவறில்லை..

திருமணம் செய்யாமலேயே நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பது குற்றமில்லை...

மரண தண்டனை தவறு என்றால்???

டெல்லியில் கற்பழிப்பு செய்தவனுக்கு பாராட்டுவிழா நடத்தலாமா?

ஒரு குற்றத்திற்கு மற்றொரு குற்றம் தீர்வல்ல அப்படி என்றால் மாலை அணிவித்து மரியாதை செய்தால் தகுமா.. யார் ஒரோவர் அப்படி கூறுகிறாரோ அவர்களது குடும்பத்தில் இப்படி ஒரு கேவலம் நடந்தால் இப்படி தான் பேசுவார்களா.. இந்த குற்றத்திற்கு கொடூரமான தண்டனை இல்லாததால் தான் நம் நாடெங்கும் இந்த அசிங்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது..தண்டனை குடுக்காமல் நாமே அது தொடர்ந்து நடக்க காரணமாக கூடாது... குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க கூடாது என்று சொல்பவரும் குற்றவாளிகள் தான்...

கமலா இப்படி பேசுவது...??? சினிமாத்துறையில் ஓரளவு அறிவும், சிந்திக்கும் திறனும் கொண்ட கமலா இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது. குற்றம் புரிந்தவனுக்கு தரும் தண்டனை எப்படி குற்றமாகும். தண்டனை என்பது மற்றவர்கள் குற்றம் செய்யாமல் தடுக்க, அடுத்தவரை குற்றம் செய்யாமல் எச்சரிக்க வைக்கும் ஒரு செயல். இந்த 5 கயவனுக்கும் தூக்கு தண்டனை கொடுத்தால் தான் குற்றம் செய்ய நினைப்பவனுக்கு பயமிருக்கும். அதைவிட்டு தண்டனை கொடுப்பதும் ஒரு குற்றம் என்று பிதற்றினால் எப்படி பயம் வரும். என் சகோதரி என்று வார்த்தைக்கு சொன்னால் போதாது.. உண்மையிலேயே சகோதரியாக நினைத்தால் இப்படி ஒரு வார்த்தை வராது. சகோதரர் மோகன் அவர்களே, இதுபோல் குற்றம் செய்தால் கடுமையான தண்டனை என்பது நிரூபனமானால் எப்படி 1000 பேர் குற்றம் புரிவான். தயவுசெய்து சிந்தியுங்கள்.. இந்த வெறி நாய்களை மக்கள் முன்னில் தூக்கிலிட்டு, அதை அனைத்து மீடியாக்களும் மக்களுக்கு கொண்டு சென்றால் தான், குற்றத்தின் சதவீதமேனும் குறையும், அதைவிடுத்து முற்போக்காக சிந்திக்கிறேன்... வித்தியாசமாக கருத்து சொல்கிறேன் என்று எதையாவது உளறினால்... நாளை நிஜமாகவே நம் சொந்த சகோதரிக்கும் இந்த நிலை
வரும்

தூக்கு தண்டனை என்பது சட்டரீதியான கொலை என்றால், லத்திசார்ஜ்&கண்ணீர் புகை இதெல்லாம் சட்டரீதியான வன்முறை என சொல்லலாமா? தண்டனைகள் எப்போதுமே பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையில் இருந்து பார்க்கவேண்டும். தண்டனை கொலையாகவே இருந்துவிட்டு போகட்டுமே அதில் என்ன தப்புன்றேன். சில நேரங்களில் கமல் முற்போக்காக சிந்திக்கிறேன் பேர்வழினு பிற்போக்குத்தனமான விஷயங்களை சொல்கிறார். சும்ம என் தங்கச்சி, என் தம்பிகள்னு டயலாக் விடுறதுக்கு இது ஒன்னும் திரைப்படம் இல்லை. கொடுத்து பார் தூக்குதண்டை குற்றங்கள் குறையுதா இல்லையானு!!




இந்திய நாட்டின் தலைநகர் டில்லியில் கடந்த 16-ஆம் தேதி இரவு, ஓடும் பஸ்ஸில் ஒரு மருத்துவ கல்லூரி மாணவியை ஆறுபேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு நிலையை உருவாக்கியுள்ளது. நாடு முழுவதும் குறிப்பாக டில்லியில் அதிகமாக நடக்கும் பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து சமீபத்தில் இயக்குனர் அமீர் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து கேரள மாநிலம் கொச்சியில் நடந்த விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


பாலியல் பலாத்கார சம்பவம் பற்றி பேசிய கமல் “ டில்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவம் அவமானத்திற்குரிய செயல். ஆனால் இந்த தவறுக்கு தூக்கு தண்டனை தீர்வாகாது. ஒரு குற்றத்திற்கு மற்றொரு குற்றம் தீர்வு இல்லை. தூக்குதண்டனையை சட்டரீதியான கொலை என்றும் சொல்லலாம். தூக்கு தண்டனை வேண்டாம் என்று சொல்வதால் இந்த கொடூரமான குற்றத்தை நினைத்து நான் வருந்தவில்லை என அர்த்தம் கிடையாது.

சம்பவம் நடந்தது என்னுடைய பேருந்து. நடந்த இடம் எனது தலைநகரம். பாதிக்கப்பட்ட பெண் என் சகோதரி. தவறைச் செய்தவர்கள் என் சகோதரர்கள். இதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்” என்று கூறினார். தலைநகர் டில்லியில் பாலியல் பலாத்கார சம்பவத்தை எதிர்த்து பொதுமக்களும் வீதிகளில் இறங்கி போராடத்துவங்கிவிட்டதால் டில்லி முழுவதும் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த பள்ளி மாணவி புனிதாவின் பாலியல் பலாத்கார கொலையையும், டில்லி சம்பவத்தையும் கண்டித்து சென்னையிலும் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் திரையுலக நட்சத்திரங்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

இளையராஜாவுடன் வைரமுத்து டூ ஏன்?


இளையராஜா-வைரமுத்து நட்பு உடைந்து போனதற்கு பல காரணங்கள் உண்டு.


ஆனால் அதில் ஒன்றை இரண்டை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ஒன்று பாடல்களின் காப்பிரைட் பிரச்சனை...

மற்றொன்றை பற்றி இங்கே விளக்கமாக பார்க்கலாம்..

அது பாடலின் வரிகளில் ராஜாவின் குறிக்கீடு

இவை நான் சொந்தமாக ஊகித்து எழுதியவை இல்லை

தான் எழுதிய புத்தகம் ஒன்றில் வைரமுத்து வருத்தத்துடன் குறிப்பிட்டவை இவை...


பயணங்கள் முடிவதில்லை படத்தில் "இளைய நிலா"எனும் பாடல்

அது ஆரம்பத்தில்..
"சலவை நிலா பொழிகிறது
இதயம் வரை நனைகிறது"என்றுதான் வைரமுத்து எழுதினார்...

நிலாவின் களங்கத்தை தனது பாடலில் கழுவ நினத்ததை அவர் குறிப்பிடுகிறார்...

ஆனால் ராஜா எதார்த்தவாதி....

அவர் கவிதை வரிகளுக்கு கடிவாளம் போட்டார்..

அவர் இயர்க்கையான விசயத்தையே விரும்பினார்..எனவே அப்பாடலில் தலையிட்டு அதை மாற்றியமைத்தார்..பிறகே

"இளைய நிலா பொழிகிறது
இதயம் வரை நனைகிறது"

என்ற வரிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது..

அதே போலவே "அந்திமழை பொழிகிறது "பாடலிலும்

ஆரம்பத்தில்
"திராட்ச்சைமது வழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் "என்றே வைரமுத்து எழுதினார்..

அந்தோ பரிதாபம்!

ராஜாவால் அது அந்திமழை என்ற எதார்த்த வரிகளால் திருத்தியமைக்கப்பட்டது..

ஆனாலும் ராஜாவின் மீதான வைரமுத்துவின் மரியாதை குறைந்துவிட வில்லை....கலைஞன் அல்லவா?






இளையராஜாவை பிரிந்த பிறகு வைரமுத்து எழுதிய இந்த பிரிவுக்கடிதத்தை(இந்தக்குளத்தில் கல் எறிந்தவர்கள்) படித்தால் அவர்களின் நட்பும், பிரிவின் கனமும் புரியும்.   அவர்கள் இணைய மாட்டார்களா என்று தவிக்கும் ரசிகர்களின் தாகமும் புரியும்.

"இசை ஞானியே!
என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.
என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!

உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.
கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான
நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.


மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன்
நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.



திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.
மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.

பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.
நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.

ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.
பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே
நேசிக்கிறேன்.
 
நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.

என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.
உன்னை நானும் பார்க்கிறேன்.
தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.
வார்த்தை துடிக்கிறது;
வைராக்கியம் தடுக்கிறது;
வந்துவிட்டேன்.




அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.
உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.

ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.
இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.

என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.

நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.
ஒரு கணம் திகைத்தேன்.

வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.
பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.


நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.
சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.


நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.

உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை
நினைத்தேன்.

‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே
புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.

அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.



எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.
இருக்காதே என்று நினைக்கிறேன்.
பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.
உன் அறிக்கைதான்.

ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.
படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.

உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!
உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!
காரணமே இல்லையே.

இது இருதயத்திற்கு ஆகாதே.

நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.

ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.

இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.

நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!
இப்போது சொல்கிறேன்.

உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.

உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.

உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.
நான் கொதித்தேன்.

"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச்
சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.

மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.
நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.

இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.



நீயும் நானும் சேர வேண்டுமாம்.
சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.
உனக்கு ஞாபகமிருக்கிறதா?

‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ
துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.

மழை வந்தது.
நின்று விட்டேன்.

என்னை நீ பிடித்து விட்டாய்.
அப்போது சேர்ந்து விட்டோம்.

ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.
இப்போது முடியுமா?

இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?"