வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

தடங்களுக்கு வருந்துகிறோம்!

Saturday, December 24, 2011



முகம்மது,புத்தர்,இயேசு
மூவரும் வருகை தந்தனர் பூமிக்கு...

புத்தரே!
அமைதி தேடி காட்டுக்கு சென்றீர்!

இப்போது நாடே காடாகி விட்டது!

இயேசுவே!
ஒரு கன்னம் காட்டினாலே முகத்தில்
வறப்பு வெட்டும் இந்த காலத்தில்
இன்னோரு கன்னமா?

முகம்மதே!
சாந்தியும் சமாதானமும் என்றீர்!
இங்கே உண்டாகி கொண்டிருப்பது
ஜாதியும் சமாதியும்!
இங்கே இருக்கும் ஜாதிகளின் எண்ணிக்கையை
விஜயகாந்த் போல
விபரமாக சொல்வதென்றால் மூவாயிரம் பக்கம்
வேண்டும் எனக்கு..


மூவரும்
முன் வைத்ததுதான் என்ன?

சமாதானுமும் சாந்தியுமா?
சுடுகாட்டில்தான் இப்போது காணலாம்...

சகோதரத்துவமா?
சும்மா பேச்சுக்குத்தான்..

மனிதாபிமானம்?
அதுவும் இப்போது விற்பனையில்தான்
கிடைக்கிறது!

ஒற்றுமை?
இப்போதைக்கு காகத்திடம் மட்டுமே உண்டு!



மூவரும் அவசரமாய்கூடி
ஒரு முடிவுக்கு வந்தனர்...

தடங்களுக்கு வருந்துகிறோம்!
தவறுதலாய் பூமியென நினைத்து
தரையிரங்கிவிட்டோம்

5 பேர் சொன்னது....:

கோலா பூரி. said...

என்ன சொல்லனு தெரியல்லே. நல்லா சொல்லி இருக்கீங்க.

Unknown said...

அட பாவமே!ஏதாச்சும் தமிழ் வார்த்தையில் இரண்டு சொல்லுங்க.ஹி ஹி ஹி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
சமாதானுமும் சாந்தியுமா?
சுடுகாட்டில்தான் இப்போது காணலாம்...
///////

இங்கே கூட பிரிவினை இருக்கிறது..
என்ன கொடுமை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மைதான் தாங்கள் இறுதியில் குறிப்பிட்டுள்ளது போல் நம்மால் பூமி அதற்காக தகுதியை இழந்துக்கொண்டு வருகிறது

Unknown said...

நிச்சயமாக இதெல்லாம் மாறும் ஒரு காலம் வரும்!கவலை வேண்டாம் சௌந்தர் சார்

Post a Comment