வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

நடிகை குஷ்பு மீது தாக்குதல்

Friday, March 01, 2013






வருஷம் 16 படத்தை பத்துமுறை ஒரு காலத்தில்பார்த்தவர்கள் உண்டு...

அத விடுங்க..கோயில்கட்டும் அளவுக்கு ஃபேமஸா போனவங்கபேர் இப்ப நாறுது...

திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வது தப்பில்லை என ஆரம்பித்து இவர்மீது ஏகப்பட்ட சர்ச்சைகள்..

வாயிலதான் சனி என்பது இவருக்கு ஏக பொருத்தம்

குஸ்பூவை பற்றி இப்போதைய ஹாட் செய்தி;



நடிகை குஷ்பு வீட்டின் மீதும், அவர் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள், தி.மு.க.-வில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்ற பேச்சு பரவலாக அடிபட்டுக்கொண்டு உள்ள நிலையில், தி.மு.க .தலைமை, நடிகை குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க. முன்னணியினரிடையே ஏதாவது கலகம் விளைவித்து குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று முயன்று பார்க்கின்ற ஒரு கூட்டத்தினர் அண்மைக் காலத்தில் குஷ்பு சுந்தரை தி.மு.க.விலிருந்து வெளியேற்ற சூழ்ச்சி வலை பின்னி, அதிலே வெற்றியடைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஏமாற்றத்தால் குஷ்பு சுந்தரின் வீட்டைத் தாக்கவும், அவருடைய கார் கண்ணாடியை உடைக்கவுமான காட்டுமிராண்டிச் செயல்களில் ஈடுபட்டதோடு, குஷ்புவினுடைய பிள்ளைகளையும் மிரட்டி அச்சத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.

இவ்வளவுக்குப் பிறகும் குஷ்பு கழகத்தை விட்டு வெளியேறவில்லையே என்ற ஆத்திரத்தில் தி.மு.கழகம் குஷ்புவை வெளியேற்றும் என்ற பொய்ச் செய்திகளையும் ஏடுகளில் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினையில் தலைமைக் கழகம் உடனடியாக தலையிட்டதோடு, கழகத்தின் கட்டுப்பாட்டினை காத்திடாமல் குஷ்புவின் கார், வீடு இவைகளுக்கு சேதாரம் ஏற்படுத்தி அவரையும் தாக்கிட முற்பட்ட காட்டுமிராண்டித்தனத்திற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது கழகத்தின் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கனவே தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டவாறு இப்பிரச்சினைப் பற்றி அவரவர்களும் தம் இஷ்டம் போல் அறிக்கைகள் கொடுப்பதையும் – பேட்டிகள் அளிப்பதையும் அறவே நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

“…இஷ்டம் போல் அறிக்கைகள் கொடுப்பதையும் – பேட்டிகள் அளிப்பதையும்..” என்று கூறப்பட்டிருப்பது, நடிகர் வாகை சந்திரசேகர் தெரிவித்த கருத்துக்கு விழுந்த குட்டு என்று ஒரு பட்சி சொல்கிறது!



தி.மு.க.வின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்திருந்த நடிகை குஷ்புவுக்கு, தி.மு.க. பேச்சாளரார் நடிகர் வாகை சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். “அரை வேக்காட்டுத்தனமாக குஷ்பு பேசுகிறார்” என காரசாரமாக கருத்து கூறியுள்ளார் அவர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் சந்திரசேகர், மு.க.ஸ்டாலின் பற்றி குஷ்பு சொன்ன கருத்துகள் அதிர்ச்சி அளிக்கின்றன. குஷ்பு தி.மு.க.வுக்கு நேற்று வந்தவர். தி.மு.க. பற்றியோ மு.க.ஸ்டாலின் பற்றியோ பேச அவருக்கு அருகதை இல்லை.

தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான் கட்சியின் கொள்கை. மு.க.ஸ்டாலின் 16 வயதிலேயே தி.மு.க. இளைஞர் அமைப்பை உருவாக்கினார். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். போராட்டங்களில் ஈடுபட்டார். இவையெல்லாம் குஷ்பு சமூக பணி என்கிறாரா?

மிசாவில் கைதானது சமூக பணியா? தி.மு.க.வில் சமூக பணி என்பது கட்சி பணிதான். அரை வேக்காட்டுத்தனமாக குஷ்பு பேசுகிறார். தளபதிதான் அடுத்த தலைவர் என்று கலைஞர் எடுத்த முடிவை ஏன் எதிர்க்க வேண்டும். அவர் பேச்சு கட்சி கட்டுப்பாட்டை மீறுவதாக உள்ளது. ஸ்டாலின் பற்றி பேசியதற்காக குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார் அவர்.

சரி. நடிகர் சந்திரசேகருக்கு கிடைத்திராத முக்கியத்துவம், இந்த ‘அரைவேக்காடு’ குஷ்புவுக்கு, கொடுக்கப்பட்டபோது, இவர் எங்கே போயிருந்தாராம்?

0 பேர் சொன்னது....:

Post a Comment