வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

தாழ்வு மனப்பான்மை

Monday, December 05, 2011


தாழ்வு மனப்பான்மை
மூளையில் சுற்றிய களை

தாழ்வுமனப்பான்மை
தடை கல்

அது ஒப்பிடுவதால் ஏற்படும்
விபத்து!

விதைக்கு தாழ்வு மனப்பான்மையெனில்
விருட்சமாவது எப்போது?

நயாகராகூட
கீழே விழுந்து போகும்போது
தாழ்ந்துதான் போகும்

மழை மட்டும் என்னவாம்?

ஆனால் மழைக்கும் நயாகராவுக்கும்
தாழ்வு மனப்பான்மை இல்லை..

ஒப்பிடாதே..

உருவம் வெவ்வேறு அளவு ஆனாலும்
உயிரின் எடை ஒன்றுதான்!

பெண்ணைக்கவர வேண்டுமா?
புகழ்ந்து பேசு!

மண்ணைகவர வேண்டுமா?
தாழ்ந்து போ!

உடனடியாய் வீழ்ச்சி வேண்டுமா?
தாழ்வு மன்ப்பான்மை கொள்!

எதுவும் எதற்கும் தாழ்ந்ததில்லை..

எறும்புக்கும் வயிறு உண்டு..

கொசுவுக்கும் இனவிருத்தி உண்டு!

தாழ்வு மன்ப்பான்மை
மூளையில் அடிக்கப்பட்ட ஆணி..
எடுப்பதும் கடினம்..
எடுக்காமல்விட்டாலும் கடினம்..

14 பேர் சொன்னது....:

முனைவர் இரா.குணசீலன் said...

உருவம் வெவ்வேறு அளவு ஆனாலும்
உயிரின் எடை ஒன்றுதான்!

அழகாகச்சொன்னீர்கள்

அருமை..

Subramanian said...

மிக ஆழமான சிந்தனை கவித்துவமாக வெளிப்பட்டிருக்கிறது. மிக அருமை. தொடருங்கள். நன்றி!

Unknown said...

குணசீலன் சார்..ரொம்ப நன்றி...அடிக்கடி ப்ளாக் பக்கம் வாங்க

Unknown said...

"மிக ஆழமான சிந்தனை கவித்துவமாக வெளிப்பட்டிருக்கிறது"
சுப்பிரமணியன் ஜீ முதலில் என் ப்ளாக்கிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்...
ஏதோ என்னால முடிஞ்சது சார்!நன்றி!

Subramanian said...

//என் அன்னை வயிற்றில் சுமக்கப்படாதஎன்னுயிர் சகோதர சகோதரிகளே!
விரிந்த கைகளோடும் மனதோடும்உங்களை வரவேற்கிறேன்!//தங்களது வரவேற்பு மெய்சிலிர்க்க வைக்கிறது சகோதரரே! பதிவிற்கு கீழே கருத்துரையிடும் பெட்டியை வைத்தால், வாசகர்கள் சளைக்காமல் கருத்துரையிடுவார்கள். மற்றொரு page திறக்கும்போதும் மீண்டும் return வருவதற்கும் வாசகர்கள் சிரமப்படலாம். இல்லையென்றால் pop ub window திறக்குமாறு செய்திடுங்கள். பதிவிற்கு கீழே கருத்துரையிடும் பெட்டியை வைப்பதுதான் சிறந்தது. இப்படி செய்தால், கருத்துரைகள் அதிகமாகும் வாய்ப்பிருக்கிறது சகோதரரே! நன்றி!

Unknown said...

கண்டிப்பாக செய்யலாம் சகோதரரே! சரியான தகவலுக்கு நன்றி!அடிக்கடி வாங்க

manjula said...

amazing kavinjare

அன்புடன் மலிக்கா said...

மன்ப்பான்மை //மனப்பான்மை

இதேபோல் இரு இடத்தில் சிறு திருத்தம் செய்யவும்..

தளம் அருமையாக இருக்கிறது. வரவேற்ப்பு நெஞ்சை நெகிழ்விக்கிறது.பதிவுகள் சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் தொடர்ந்து எழுதுங்கள். இறைவனின் துணை என்றும் கிடைக்க வேண்டிடும் சகோதரியாய் என்றும் அன்போடு.
அன்புடன் மலிக்கா.

அன்புடன் மலிக்கா said...

சகோ ஒரு வேண்டுகோள் இக்கருத்துரை வெளியிட அல்ல.//அன்புடையீர் வணக்கம்..//இது தாங்கள் எழுதியது..
வணக்கம் இறைவன் ஒருவனுகுத்தான். அவனுக்கன்றி வேருயாருக்குமல்ல.. ஆகவே மனிதர்கள் யாருக்கும் வணக்கம் சொல்வது முஃமீனுக்கு ஆகாது..சொல்லியதில் தவறேதுமில்லையே!

Unknown said...

நன்றி மல்லிகா மேம்..தவறை சுட்டிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை..உங்கள் வருகைக்கு என் நன்றி!

Unknown said...

"amazing kavinjare"
அப்படியே ஆகட்டும் சமையல் ராணி!சொன்ன வார்த்தைக்கு உடனே வருகை தந்தமைக்கு நன்றி மேம்

Unknown said...

"தளம் அருமையாக இருக்கிறது. வரவேற்ப்பு நெஞ்சை நெகிழ்விக்கிறது.பதிவுகள் சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்."
எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்..இறைவனின் நாட்டப்படி எல்லாம் நடக்கும்!

கோலா பூரி. said...

தாழ்வு மன்ப்பான்மை
மூளையில் அடிக்கப்பட்ட ஆணி..
எடுப்பதும் கடினம்..
எடுக்காமல்விட்டாலும் கடினம்..


அருமையான வரிகள்.

Unknown said...

நன்றி கோமு மேம்...

Post a Comment