வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

பிரியமானவளே....

Friday, January 11, 2013




என் வாலிபம் விலைபோனது
நீ சிரித்தபோது சிதறிய
சில்லறைகளுக்கு...

நீ என்னுள் நிரம்பியவேளை
சிந்தியது
என் கவிதைகள் அனைத்தும்...


என் நினைவுகளில்
நான் மறக்காமலிருப்பது சிலர் மட்டும்
நினைவுகளே மறக்காமலிருப்பது
உன்னைமட்டுந்தான் தங்கமே!


உன் நினைவெனும் சிகரத்தின் உச்சியில்
நானிருக்கிறேன்..
இப்போது சிகரத்திலிருந்து தவறினால் மரணம்


எனக்கான காதலை ஏன்
மறைக்கிறாய்?
காதல் என்ன பூகம்பமா?
முன்னதாகவே தெரிவிக்க
முடியாதென்கிறாய்?


மேகங்கள் முழுதும்
மழை இருந்தும் பெய்யாதிருப்பது இயற்கை
உன் இதயம் முழுதும் காதலிருந்தும்
சொல்லாதிருப்பது செயற்கை


தாமதமானாலும்
தயவுசெய்து விருப்பம் சொல்லிவிடு
இல்லையென்றால் நீயெவந்தெனை
கொள்ளியிடு


சூரியன் முன்னதாகவே உதித்து
காத்திருந்தாலும்
தாமதமாய்தானே
தாமரை மலர்கிறது!

துக்கமும் தூக்கமும்
சேர்ந்தே உன்னை மறக்கமுயற்சித்து
சோர்ந்து போயின


எப்படி முடியும்?
நான் உன்னை என் இதயத்தில்
பச்சை குத்திக்கொண்டவன்


நீ என் இருதய பிரதேசத்தில்
சிதறிய பாதரசம்
ஆகவே உன்னை மறப்பது
மரணத்திற்கு பிறகுதான்.

0 பேர் சொன்னது....:

Post a Comment